என் மலர்

    நீங்கள் தேடியது "5 மாநில சட்டசபை தேர்தல்"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 2 கடைகளிலுமே கம்பி மூலம் துளை போடப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்தன.
    • பேரூர் டி.எஸ்.பி. ராஜபாண்டியன் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.‌

    வடவள்ளி,

    கோவை சிறுவாணி சாலையில் பூலுவபட்டி பேரூராட்சிக்குட்பட்ட கட்டிடம் உள்ளது.

    இந்த கட்டிடத்தில் டீக்கடை, மெடிக்கல் ஸ்டோர், நகைக்கடை உள்பட 10க்கும் அதிகமான கடைகள் செயல்பட்டு வருகின்றன.

    நேற்று இரவு வழக்கம் போல இந்த கடைகளை அதன் உரிமையாளர்கள் பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டனர். இன்று காலை கடையை திறப்பதற்காக அனைவரும் வந்தனர்.

    அப்போது டீக்கடையின் பூட்டும், மெடிக்கல் ஸ்டோர்சின் பூட்டும் உடைந்து திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியான அவர்கள் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது 2 கடைகளிலுமே கம்பி மூலம் துளை போடப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்தன.

    உடனடியாக சம்பவம் குறித்து ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது 2 கடைகளையும்யொட்டி நகைக்கடை இருப்பது தெரியவந்தது.

    தொடர்ந்து நடத்திய விசாரணையில், நள்ளிரவு நேரத்தில் 5 பேர் கொண்ட மர்மகும்பல் இந்த கட்டிடத்திற்குள் நுழைந்துள்ளனர்.

    அவர்கள் நேராக நகைக்கடையின் பின்னால் சென்று துளை போட்டு உள்ளே நுழைய முயன்றுள்ளனர். ஆனால் அதுமுடியாமல் போகவே, மருந்துக்கடையையும், டீக்கடையையும் உடைத்து அங்கு துளை போட முயன்றுள்ளனர்.

    அந்த சமயத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்ததால், பயந்து போய் அந்த கும்பல் அப்படியே விட்டு ஓடிசென்றது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருக்கும் காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர். மேலும் பேரூர் டி.எஸ்.பி. ராஜபாண்டியன் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

    போலீசார் ரோந்து வந்ததால் பல லட்சம் மதிப்புள்ள நகைகள் தப்பியது. இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக ஆலாந்துறை போலீசார் வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வேலை கொடுக்க உதவி செய்கிறேன் எனக் கூறியதுடன் காரிமங்கலம் பேருந்து நிலையத்திற்கு அழைத்து வர சொல்லி உள்ளார்.
    • இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட லாட்ஜிற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    காரிமங்கலம்,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண் குந்தாரப்பள்ளி பகுதியைச் சேர்ந்த சுந்தரி என்பவரிடம் வேலை கேட்டுள்ளார்.

    அப்போது சுந்தரி அந்தப் பெண்ணிடம் வேறு யாராவது இருந்தால் அவர்களையும் அழைத்து வா அவர்களுக்கும் வேலை கொடுக்க உதவி செய்கிறேன் எனக் கூறியதுடன் காரிமங்கலம் பேருந்து நிலையத்திற்கு அழைத்து வர சொல்லி உள்ளார்.

    இதை நம்பி 3 பெண்களும் காரிமங்கலத்திற்கு வந்த நிலையில் அவர்களை கிருஷ்ணகிரி பைபாஸ் ரோடு அகரம் பிரிவு ரோடு அருகே உள்ள தனியார் லாட்ஜிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

    அப்போது அங்கிருந்த நான்கு பேர் மூன்று பெண்களிட மும் தவறாக நடக்க முயற்சித்துள்ளனர். இதனால் அவர்கள் அலறி அடித்துக் கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்து காரிமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தனர்.

    இதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட லாட்ஜிற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    அங்கிருந்த தருமபுரி மாவட்டம், பிக்கனஹள்ளி பகுதியைச் சேர்ந்த சுபாஷ் (32 ), கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த பிரசாந்த் (29) காவேரிப்பட்டினத்தைச் சேர்ந்த செந்தில்குமார் (49), பனக முட்லு பகுதியைச் சேர்ந்த சுந்தர்ராஜ் (45), குந்தார அள்ளி கிராமத்தைச் சேர்ந்த சுந்தரி (34) ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். தலைமறைவான லாட்ஜ் ஓனர் லட்சுமணன் என்பவரை தேடி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சுஷ்வந்த் உக்கடம்-பேரூர் பைபாஸ் ரோட்டில் நடந்து சென்றார்.
    • செல்போன் பறித்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கோவை,

    கோவை சாய்பாபா காலனியை சேர்ந்தவர் சுஷ்வந்த் (30), போட்டோர் கிராபர். சம்பவத்தன்று இவர் உக்கடம்-பேரூர் பைபாஸ் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் சுஷ்வந்தை வழிமறித்து அவரை மிரட்டி அவரிடம் இருந்த செல்போனை பறித்து தப்பிச் சென்றனர். இது குறித்து சுஷ்வந்த் பெரியகடைவீதி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு, செல்போன் பறிப்பில் ஈடுபட்ட கவுண்டம்பாளையத்தை சேர்ந்த மவுலிதரன் (19), தெலுங்குபாளையத்தை சேர்ந்த சஞ்சய் (22), செல்வபுரத்தை சேர்ந்த சதீஷ் குமார் (26), சூலூரை சேர்ந்த மகேந்திரன் (25) மற்றும் சுங்கத்தை சேர்ந்த அலெக்ஸ் (23) என்பது தெரியவந்தது. பின்னர் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
    • 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்

    கோவை,

    கோவை பாப்ப நாயக்கன் பாளையம் பரமேஸ்வரன் லே-அவுட் அருகே சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. . அங்கு கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த கேரள மாநிலம் சித்தூரை சேர்ந்த சூர்யா (வயது 25), பொள்ளாச்சியை சேர்ந்த கல்லூரி மாணவர் அகிலன் (20), புதுக்கோட்டையை சேர்ந்த கல்லூரி மாணவர் இமான் ஷா (18) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் போலீசார் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    ரத்தினபுரி போலீசார் சாஸ்திரி நகரில் கஞ்சாவை பதுக்கி விற்ற சங்கனூரை சேர்ந்த ஷாஜூ (19) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்த 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் ஷாஜூவை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    ஆலாந்துறை போலீசார் பூலுவப்பட்டி மார்க்கெட் அருகே கஞ்சாவை பதுக்கி விற்ற பெயிண்டர் பிரசாந்த் (19) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ெஜயிலில் அடைத்தனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாணவர்கள், பஸ் படிகட்டில் தொங்கியபடி ள்ளிக்கு சென்று வருவதாக கூறப்படுகிறது
    • இதில் இரண்டு கிராம மாணவர்களுக்கு இடையே அடிக்கடி மோதல் உருவாகி வந்தது.

    கடலூர்:

    குறிஞ்சிப்பாடி அரசுப் பள்ளியில் நத்தமேடு, குமுடிமுளை கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த மாணவர்கள் தினமும் பஸ்சில் பள்ளிக்கு சென்று வருவது வழக்கம்.

     சேர்ந்த மாணவர்கள், பஸ் படிகட்டில் தொங்கியபடி பள்ளிக்கு சென்று வருவதாக கூறப்படுகிறது. இதில் இரண்டு கிராம மாணவர்களுக்கு இடையே அடிக்கடி மோதல் உருவாகி வந்தது.அதன்படி நேற்று முன்தினம் மாலை பள்ளி முடித்து மாணவர்கள் வீடு திரும்பினர். அப்போது அரசு பஸ்சின் படிகட்டில் தொங்கியபடி செல்வதில் மாணவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதுஇதில் நத்தமேடு மாணவர்கள், குமுடிமுளை மாணவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து குமுடிமுளை மாணவர்கள் மருதூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களில் 2 பேர் மாணவர்களாவர்கள். அவர்களை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், 3 பேரை சிறையில் அடைத்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சுற்றுலா பயணிகள் பலர் கோத்தகிரி சாலை வழியாகவே ஊட்டிக்கு செல்கின்றனர்.
    • வெளிநாட்டு மது பாட்டில்கள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்

    கோத்தகிரி,

    நீலகிரி மாவட்டத்திற்கு புத்தாண்டு கொண்டா–ட்டத்திற்காக தற்போது வெளி மாவட்டம் மற்றும் வெளி–மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிக அளவு வந்த வண்ணம் உள்ளனர்.

    வெளிப்பகுதிகளில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் பலர் கோத்தகிரி சாலை வழியாகவே ஊட்டிக்கு செல்கின்றனர்.

    அவ்வாறு வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களை குஞ்சப்பனை சோதனை சாவடியில் போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.

    நேற்று மதியம் போலீசார் சோதனை சாவடியில் வந்த வாகனங்களை மறித்து சோதனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

    சோதனையில் காரின் பின் பகுதியில் வெளிநாட்டு மது பாட்டில்கள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

    பின்பு காரை ஓட்டி வந்தவரிடம் விசாரித்தபோது அவர் சென்னை விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஸ்ரீதர்(வயது24) என்பதும் காரில் அவருடன் வந்த 4 பேர் ஸ்ரீதரின் நண்பர்கள் என்றும், புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக சென்னையில் இருந்து மது பாட்டில்களை வாங்கி வந்ததும் தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து கோத்தகிரி போலீஸ் நிலையம் அழைத்து வந்து அவர்களிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. தொடங்கினார்
    • சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து ஒதுக்கீடு

    கன்னியாகுமரி:

    கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி, கீழ்குளம் பேரூராட்சிக்குட்பட்ட, ஸ்கை சந்திப்பு முதல் ஏ.வி.எம்.கால்வாய் வரை செல்லும் சாலை செப்பனிட்டு பல வருடங்கள் ஆகியதாலும், கடந்த வருடம் பெய்த பெரும் கனமழையினாலும் சாலை பழுதடைந்த நிலையில் காணப்பட்டதால் இந்த சாலையில் பொதுமக்கள் சென்று வருவதற்கு மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

    இதனால் இப்பகுதிகளில் உள்ள மக்கள் இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. ஸ்கை ஜங்சன் முதல் ஏ.வி.எம்.கால்வாய் வரை செல்லும் சாலையை காங்கிரீட் தளம் அமைத்து சீரமைக்க சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார்.

    இதையடுத்து இந்த சாலையை சீரமைக்கும் பணியை ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் கிள்ளியூர் வட்டார காங்கிரஸ் தலைவர் ராஜசேகரன், கீழ்குளம் பேரூர் காங்கிரஸ் தலைவர் ஜெயராஜ், வார்டு கவுன்சிலர் அனிதா ராஜகிளன், மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வாலிபர்கள் சிலர் பணம் வைத்து சூதாட்டம் விளையாடியது உறுதியானது.
    • அவர்களிடமிருந்த சீட்டுக்கட்டுகள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.

    கோத்தகிரி,

    கோத்தகிரியை அடுத்த நெடுகுளா பகுதியில் இளைஞர்கள் சிலர் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக கோத்தகிரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது அங்கு வாலிபர்கள் சிலர் பணம் வைத்து சூதாட்டம் விளையாடியது உறுதியானது. இதையடுத்து பணம் வை்து சீட்டு விளையாடிய ரவிக்குமார், ஷினாத், ரமேஷ், அபிஷேக், ஜீவா ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.மேலும் அவர்களிடமிருந்த சீட்டுக்கட்டுகள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 1 கிலோ 100 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
    • 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    கோவை,

    கோவை புறநகர் போலீசார் கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை செய்பவர்களை தீவிரமாக கண்காணித்து கைது செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மலை கிராமங்களில் கஞ்சா செடிகளை கண்டு பிடித்து அளித்தனர்.

    கோவையில் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் கஞ்சா மற்றும் குட்கா விற்பனை செய்பவர்களை கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில் கோவை - மேட்டுப்பாளையம் ரோடு நரசிம்மநாயக்கன் பாளையம் பஸ் நிறுத்தம் அருகே பெரியநாயக்கன் பாளையம் போலீசார் ரோந்து பணியில் ஈடுப்பட்டு இருந்தனர்.அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக வாலிபர் ஒருவர் சுற்றி திரிந்தார். அந்த வாலிபரை போலீசார் பிடித்து சோதனை செய்தனர். அதில் அந்த வாலிபரிடம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சிவகங்கையை சேர்ந்த மணிகண்டன் (23) என்பதும் அவர் கோவை குனியமுத்தூர் பகுதயில் தங்கி பிளம்பர் வேலை செய்து வந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். இவரிடம் இருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.இதேபோன்று பொள்ளாச்சியை அடுத்த கோட்டூர் சமத்தூர் மணல்மேடு பகுதியில் தனியார் பள்ளி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுப்பட்ட திண்டுகல்லை சேர்ந்த ரவி என்பவரை கோட்டூர் போலீசார் பிடித்தனர். ஆைனமலை பஸ் நிலையத்தில் கஞ்சா விற்ற திண்டுகல்லை சேர்ந்த மனோஜ்குமார் (27) என்பவரை ஆைனமலை போலீசார் பிடித்தனர். இதையடுத்து கோட்டூர் மற்றும் ஆைனமலை போலீசார் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    கோவை செட்டிப்பாளையத்தில் பெட்டி கடையில் குட்கா விற்ற ராஜன் (57) மற்றும் மலுமிச்சம்பட்டியில் மளிகை கடையில் குட்கா விற்ற சிங்கமுத்து (53) என்பவரை செட்டிப்பாளையம் போலீசார் கைது செய்தனர்.

    இதேபோன்று அன்னூர் கனேசபுரத்தில் ஒரு கடையில் 5 கிலோ 400 கிராம் குட்காவை பதுக்கி வைத்து விற்ற செல்லதுரை (41) என்பவரை அன்னூர் போலீசார் பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.கோவையில் நேற்று ஒரே நாளில் கஞ்சா-குட்கா விற்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வாலிபர்களை போலீசார் சோதனை செய்த போது அவர்களிடம் கஞ்சா இருந்தது.
    • போலீசார் 5 பேரையும் ேகார்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    கோவை, -

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி மதுவிலக்கு பிரிவு போலீசார் தொண்டாமுத்தூர் முத்திபாளையம் பஸ் நிறுத்தம் அருகே சோதனையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர்.

    அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டு இருந்த 2 வாலிபர்களை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர் ஆரஞ்சு நிறத்திலான பெயர் தெரியாத 300 கிராம் போதைப் பொருளை மறைத்து வைத்து இருப்பது தெரிய வந்தது.

    இதனையடுத்து போலீசார் போதை பொருளை வைத்து இருந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த கூலித் தொழிலாளிகள் அசருள் இஸ்லாம் (வயது 22), அப்துல் முத்தலீப் (37) என்பது தெரிய வந்தது. போலீசார் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    சூலூரில் உள்ள தனியார் கல்லூரி அருகே மாணவர்களை குறி வைத்து சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல்வந்தது. இதனையடுத்து சூலூர் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திர பிரசாத் தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    அங்கு கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்த தேனி அருகே உள்ள சிங்கராஜபுரத்தை சேர்ந்த தனுஷ்கோடி (24), திண்டுக்கல்லை சேர்ந்த தமிழரசன் (25), திருப்பூரை சேர்ந்த சிமோன்ராஜ் (24) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் போலீசார் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print