search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "400 ஆண்டு மரம்"

    ஜப்பானில் பூங்காவிற்குள் நுழைந்த மர்ம நபர்கள், 8 போன்சாய் மரங்களை திருடி சென்றனர். திருடப்பட்ட மரங்களில் 400 ஆண்டுகள் பழமையான ஷிம்பாக்கு மரமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. #BonsaiTree #Japan #Stolen #400yearoldtree
    டோக்கியோ:

    ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே உள்ள சாய்டாமா பிராந்திய பகுதியை சேர்ந்த மூத்த தம்பதி, தங்கள் வீட்டின் அருகே பூங்கா அமைத்து 3 ஆயிரம் போன்சாய் மரங்களை வளர்த்து வருகிறார்கள். போன்சாய் மரங்கள் என்பது இயற்கையில் பெரிதாக வளரக்கூடிய மரங்களை உரிய அளவுக்கு வளரவிடாது, முதிர்ந்த மரங்களின் தோற்றத்தில் குள்ளமாகவும், பார்வைக்கு அழகாகவும் இருக்கும்படி தொட்டிகளில் வளர்ப்பது ஆகும். இந்த நிலையில், அந்த தம்பதியின் பூங்காவிற்குள் நுழைந்த மர்ம நபர்கள், 8 போன்சாய் மரங்களை திருடி சென்றனர். திருடப்பட்ட மரங்களில் 400 ஆண்டுகள் பழமையான ஷிம்பாக்கு மரமும் ஒன்று. அந்த மரத்தின் மதிப்பு 90 ஆயிரம் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.63 லட்சத்து 52 ஆயிரம்) ஆகும்.

    அந்த மரங்களை தாங்கள் குழந்தைகளை போல் வளர்த்து வந்ததாகவும், அவை காய்ந்து போனால் தாங்கள் பெருந்துயர் அடைவோம் என கூறும் அந்த தம்பதி, மரங்களை திருடி சென்றவர்கள் அவற்றுக்கு முறையாக நீர் ஊற்றி பராமரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். #BonsaiTree #Japan #Stolen #400yearoldtree
    ஆசிய விளையாட்டு தொடரில் 400 மீட்டர் தடகள ஓட்டத்தில் ஆண்கள், பெண்கள் என 4 பேர் பங்கேற்பதால் இந்தியாவுக்கு பதக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. #AsianGames2018
    ஜகார்தா:

    18-வது ஆசிய விளையாட்டுப் போட்டி இந்தோனேசியாவில் உள்ள ஜகார்தா, பாலெம்பேங் ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது.

    நேற்றைய 7-வது நாள் ஆட்டத்தின் முடிவில் இந்தியா 7 தங்கம், 5 வெள்ளி, 17 வெண்கலம் ஆக மொத்தம் 29 பதக்கங்களை பெற்று இருந்தது.

    ஆசிய விளையாட்டுப் போட்டியின் 8-வது நாளான இன்று தடகளத்தில் 400 மீட்டர் ஓட்டம் நடக்கிறது. ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் நடைபெறும் இந்த ஓட்டத்தில் இந்தியா சார்பில் 4 பேர் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.

    பெண்கள் பிரிவில் ஹிமாதாஸ் (அசாம்), நிர்மலா (ராஜஸ்தான்), ஆண்கள் பிரிவில் முகமது அனஸ் யசியா (கேரளா), ஆரோக்ய ராஜ் (தமிழ்நாடு) ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

    பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டம் இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கும், ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டம் 5.40 மணிக்கு நடக்கிறது. 4 பேர் தகுதி பெற்றுள்ளதால் இந்தியாவுக்கு பதக்கம் கிடைக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. முகமது அனஸ் 2-வது அரையிறுதியில் முதல் இடத்தை பிடித்தார். இதனால் அவர் பதக்கம் வெல்ல வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

    இதேபோல தமிழகத்தை சேர்ந்த ஆரோக்யராஜூம் அரையிறுதியில் சிறப்பாக செயல்பட்டார். இதனால் அவரும் பதக்கம் பெறுவாரா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

    நீளம் தாண்டும் போட்டியில் இந்தியா சார்பில் ஸ்ரீசங்கரும், 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் லெட்சுமணனும் பங்கேற்கிறார்கள். #AsianGames2018
    காரைக்குடி அருகே காலத்தால் அழியாத மற்றும் 400 ஆண்டு கால வரலாற்று புகைப்படங்களை நகரத்தார் மாளிகை முழுவதும் வைத்து கண்காட்சி கூடமாக முதியவர் ஒருவர் மாற்றியுள்ளார்.
    காரைக்குடி:

    காரைக்குடி அருகே உள்ளது கானாடுகாத்தான். இங்குள்ள து.க.தெருவில் வசித்து வருபவர் குப்பன் செட்டியார்(வயது 65). இவர் காரைக்குடியில் உள்ள தபால் நிலையத்தில் முகவராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 40 ஆண்டுகளாக தனது சேகரிப்பின் மூலம் காணக்கிடைக்காத அரிய பொக்கிஷ களஞ்சியத்தை தனது வீட்டில் சேகரித்து வருகிறார். எளிதில் கிடைக்கப்பெறாத 400 ஆண்டு கால பழமைவாய்ந்த புகைப்படங்கள், ஓலைச்சுவடி உள்ளிட்டவற்றை காட்சிக்கு வைத்துள்ளார். இதுதவிர இந்தியாவை ஆண்ட வெள்ளையர்களின் ஆங்கிலத்தை தமிழர்கள் கற்க பயன்படுத்திய முதல் புத்தகம் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்கள் பயன்படுத்திய டைரி, சுதந்திரம் கிடைத்தபோது அவற்றை கொண்டாடிய விதம், ஒருவருக்கொருவர் அனுப்பிய வாழ்த்து அஞ்சல் அட்டை, கலை, இலக்கியம், புராணம் போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த காணக்கிடைக்காத பொக்கிஷங்களும் இவரது சேகரிப்பில் அடங்கியுள்ளள. மேலும் மலேசியா, இலங்கை போன்ற நாடுகளில் தமிழர்கள் தொழில் செய்தபோது அவர்கள் எழுதிய 100 ஆண்டுகள் பழமையான வரவு-செலவு புத்தகம், முதன்முதலில் வெளியான தமிழ், ஆங்கிலம் அகராதி தொகுப்புகள், இதழ்கள் குறித்த விவரங்கள் உள்ளன.

    இதுகுறித்து குப்பன் செட்டியார் கூறியதாவது:- கானாடுகாத்தான் பகுதியில் உள்ள இந்த நகரத்தார் வீட்டை வாடகைக்கு எடுத்து இதில் கடந்த 40 ஆண்டுகாலமாக அரிய வகை பொக்கிஷங்களை சேகரித்து வருகிறேன். மழைநீர் சேகரிப்பு முற்றம் தோற்றம் உள்ள இந்த பிரமாண்ட வீட்டின் உள்பகுதியில் 2 பெரிய அரங்கு மற்றும் ஒரு பெரிய அரங்கு முழுவதும் சேகரிக்கப்பட்ட அரிய வகை புகைப்படங்கள் உள்ளிட்ட தகவல்களை வரிசைப்படுத்தி கண்காட்சிக்காக வைத்துள்ளேன். இதில் முக்கியமாக கடந்த 1884-ம் ஆண்டு நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட நாடுகள் பயன்படுத்திய தபால் தலைகள், லண்டன் ராணி பயன்படுத்திய தபால் தலைகள், பண்டைய இயல், இசை, நாடகம் குறித்த தகவல்கள் அடங்கிய புத்தகம், 400 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள திருவிளையாடல் புராணம், 120 வருடத்திற்கு முன்பு நமது தமிழர்கள் பயன்படுத்திய பனை ஓலையால் ஆன அரிச்சுவடிகள், பண்டைய காலத்தில் தமிழர்களின் திருமணம் குறித்த தகவல்கள் உள்ளன. இதுதவிர கடந்த 1910-ம் ஆண்டு முதல் 1920-ம் ஆண்டு வரை ஆங்கிலேயர்கள் புகைப்படம் எடுத்த நெல்லை நெல்லையப்பர் கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோவில், ஸ்ரீரங்கம் கோவில், திருவாரூர் தேரோட்டம், குற்றாலம் அருவிகள், சென்னை எழும்பூர் ரெயில் நிலையம், மெரினா பீச், மவுண்ட் ரோடு, ஐகோர்ட்டு கட்டிடம் உள்ளிட்ட அரிய வகை புகைப்படங்களும் உள்ளன.

    மேலும் 400 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கிறிஸ்த ஆலயங்களின் புகைப்படங்கள், உலக அளவில் காணப்பட்ட பறவைகள் குறித்த படங்கள், கடந்த 1800-ம் ஆண்டு சுதந்திர போராட்ட வீரர்கள் எழுதிய சுதந்திர போராட்டம் குறித்த டைரிகள், புகைப்படங்கள், இந்திய ராணுவத்திற்கு அப்போதே சுமார் ரூ.2 லட்சம் வரை அதிக அளவில் பண உதவி செய்த தமிழர்கள் குறித்த தகவல்கள், தமிழர்கள் வெளிநாட்டில் செய்த வாணிபம், இன்று அழைக்கப்படும் வியட்நாம் குறித்த அரிய தகவல்கள் அடங்கிய புகைப்படங்கள் மற்றும் புத்தகங்கள் உள்ளன. மேலும் கடந்த 1900-ம் ஆண்டு முதல் 1923-ம் ஆண்டு வரை காரைக்குடியில் தயாரிக்கப்பட்ட அப்போதைய சொகுசு கார்களின் படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார். 
    பஸ்களை இயக்குவதற்கு போதிய டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் தொழில்நுட்ப ஊழியர்கள் இல்லாததால் 400 பஸ்கள் நிறுத்தப்பட்டு உள்ளன. #Bus #MTCBus
    சென்னை:

    சென்னை நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் அரசு பெருநகர போக்குவரத்து கழகம் மூலம் டவுண் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு 3 ஆயிரத்து 300 பஸ்கள் பெருநகர போக்குவரத்து கழகத்தில் உள்ளன.

    ஆனால் இத்தனை பஸ்களை இயக்குவதற்கு போதிய டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் தொழில்நுட்ப ஊழியர்கள் இல்லை. இதன் காரணமாக 400 பஸ்கள் நிறுத்தப்பட்டு உள்ளன. தற்போது 2 ஆயிரத்து 900 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.

    பெருநகர போக்குவரத்து கழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் 500 ஊழியர்கள் பதவி ஓய்வு பெறுகிறார்கள். அவர்களுக்கு பதிலாக புதிய ஊழியர்கள் நியமிக்கப்படுவதில்லை. 2015-ம் ஆண்டுக்கு பிறகு ஒரு ஊழியர் கூட நியமிக்கப்படவில்லை. இதன் காரணமாக தற்போது 1500 ஊழியர்கள் பற்றாக்குறையாக உள்ளனர்.

    மேலும் டிரைவர்கள், கண்டக்டர்கள் பணிக்கு வராமல் விடுமுறை எடுப்பதும் மிக அதிகமாக இருக்கிறது. அவர்களில் பலர் பல்வேறு நோய் தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

    தொழில் ரீதியான நோய் பாதிப்பு, ரத்த அழுத்தம், நீரிழிவு, மாசுவினால் ஏற்படும் நோய்கள், அதிக பணிச்சுமையால் ஏற்படும் பாதிப்புகள், முறையாக சாப்பிடாதது, தூங்க முடியாதது போன்றவற்றால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் ஆகியவற்றின் காரணமாக அவர்கள் விடுமுறை எடுக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

    ஒரு பக்கம் ஆள் பற்றாக்குறை அதிகமாக இருக்க டிரைவர், கண்டக்டர்கள் பணிக்கு வருவது குறைவாக இருப்பதால் அனைத்து பஸ்களையும் இயக்க முடியவில்லை. இதனால் முழுமையாக பஸ்களை இயக்க முடியாமல் அவற்றை நிறுத்தி உள்ளனர். மேலும் பல பஸ்கள் இயக்க முடியாத அளவிற்கு பழுதாகி இருக்கின்றன. எனவே அவையும் நிறுத்தப்பட்டுள்ளன.

    இவ்வாறு பஸ்கள் நிறுத்தப்பட்டு இருப்பதால் ஒரு நாளைக்கு 40 லட்சம் ரூபாய் பெருநகர போக்குவரத்து கழகத்திற்கு நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக சென்னை சாலை போக்குவரத்து கழக இன்ஸ்டிடியூட் பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

    மேலும் ஆளும் கட்சி தொழிற்சங்கத்தை சேர்ந்த டிரைவர், கண்டர்களுக்கு உரிய பணியை வழங்காமல் அலுவலக வேலை, குடிநீர் பாட்டில் விற்பனை, காவலாளி வேலை போன்றவற்றை கொடுக்கப்படுவதாகவும் மற்றவர்களை மட்டுமே வேலை வாங்குவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

    ஆள் பற்றாக்குறையால் இருக்கிற ஆட்களையே தொடர்ந்து வேலை செய்ய சொல்வதால் ஊழியர்கள் அதிக பணிச்சுமையை ஏற்க வேண்டியது இருப்பதாக தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த பிச்சை கூறினார்.


    அரசு விதிகள் படி ஒரு பஸ்சை முழுமையாக இயக்குவதற்கு 6.5 லிருந்து 7.5 சதவீதம் ஊழியர்கள் தேவை. ஆனால் சென்னை பெருநகர போக்குவரத்து கழகத்தில் இந்த விகிதாச்சாரம் மிக குறைவாக உள்ளது.

    நேதாஜி போக்குவரத்து கழக ஊழியர் சங்கத்தை சேர்ந்த அன்பழகன் கூறும் போது, ஆள் பற்றாக்குறை, பணிக்கு வராமை போன்றவை மட்டும் பஸ்கள் நிறுத்தத்துக்கு காரணம் இல்லை. பல பஸ்கள் இயக்க முடியாத அளவிற்கு மோசமாக இருக்கின்றன. இதனால் அவற்றை இயக்காமல் நிறுத்தி விடுகிறார்கள். பணிக்கு வரும் கண்டக்டர், டிரைவர்களை கூட பணி இல்லாமல் திருப்பி அனுப்புகிறார்கள். ஆனால் இந்த வி‌ஷயத்தை நிர்வாகம் மூடி மறைக்கிறது என்று கூறினார்.

    ஆனால் அதிகாரி ஒருவர் கூறும்போது, ஊழியர்கள் பணிக்கு வராததால் மட்டுமே தினமும் 250 பஸ்களை இயக்க முடியவில்லை என்றார்.

    மேலும் பஸ்கள் உரிய நேரத்தில் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று திரும்ப முடியவில்லை. இதனால் ஒரு நாளைக்கு ரூ.20 லட்சம் நஷ்டமடைவதாகவும் கூறப்படுகிறது.

    இதுபற்றி டிரைவர் ஒருவர் கூறும்போது சென்னையை பொருத்தவரை போக்குவரத்து நெரிசல் மிக அதிகமாக இருக்கிறது. எந்த இடத்துக்குமே குறிப்பிட்ட நேரத்திற்கு பஸ்சை ஓட்டிச்செல்ல முடிவதில்லை. பயணிகள் சிறிது நேரம் பஸ் வருகிறதா? என பார்த்து விட்டு வேறு வாகனங்களில் சென்றுவிடுகிறார்கள் என்று கூறினார்.

    இதற்கிடையே மாநகர போக்குவரத்து கழகத்திற்கு புதிதாக ஏராளமான பஸ்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இவற்றை இயக்குவதற்கு போதிய டிரைவர்கள், பஸ் கண்டக்டர்கள் மற்றும் போதிய தொழில்நுட்ப ஊழியர்கள் இல்லை என்று போக்குவரத்து கழக பணியாளர்கள் சங்கத்தை சேர்ந்த சம்பத் கூறினார். #Bus#MTCBus
    ×