search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "4 People arrested"

    • மதினாபேகம் காரை குறிபிட்ட தொகை வாடகைக்கு விடுமாறு கேட்டுள்ளார்.
    • பொள்ளாச்சி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

    பொள்ளாச்சி,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆ.சங் கம்பாளையம் திரு.வி.க. நகரை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி கனகமணி (வயது 31).

    இவர்களிடம் பழனியப்பா வீதியை சேர்ந்த முகமதுபேகம் (33) என்பவர் நண்பராக பழகி வந்தார். அப்போது சரவணம்பட்டியில் உள்ள ஒரு வங்கிக்கு கலெக்சன் செல்வதற்காக அவர்களிடம் இருந்து மதினாபேகம் காரை குறிபிட்ட தொகை வாடகைக்கு விடுமாறு கேட்டுள்ளார்.

    இதற்கு கனகமணி சம்மதித்து, மதினாபேகத்திடம் காரை வாடகைக்கு விட்டுள்ளார். அந்த காரை கோவை ஈச்சனாரியை சேர்ந்த பால்ராஜ் (41) என்பவர் பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் 3 மாதங்கள் கடந்தும் வாடகை கொடுக்காததால், சந்தேகமடைந்த கனகமணி. மதினாபேகத்திடம் காரை திருப்பி தரும்படி கேட்டுள்ளார். ஆனால், மதினா பேகமும், பால்ராஜூம் காரை திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.

    இதனால் கனகமணி இதுகுறித்து பொள்ளாச்சி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் மதினாபேகமும், பால்ராஜூம் சேர்ந்து, காரை வேறு நபர்களிடம் விற்று பணம் வாங்கியது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார், காரை வாங்கி ஏமாற்றிய மதினா பேகம், பால்ராஜ் மற்றும் காரை விலைக்கு வாங்கிய கோவை ஸ்ரீராம் நகரை சேர்ந்த அமுதன் (45), செல்வபுரத்தை சேர்ந்த அபுதாகீர்(47) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். அவர்களை, பொள்ளாச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    • முதியவர் தன்னை தாக்கி விட்டார் என்ற ஆத்திரத்தில் தனது நண்பர்களுக்கு போன் மூலம் தகவல் கூறியுள்ளார்.
    • மதுவால் பல்வேறு குடும்பங்கள் சீரழிந்து வரும் நிலையில் தற்போது மது போதையில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே வீரக்கல் தெற்கு மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் சின்னத்துரை (வயது 60). பழைய இரும்புகளை சேகரிக்கும் வியாபாரி. இவருடைய மனைவி கலையரசி (56). இவர்களுக்கு கனகராஜ் என்ற மகனும், நாகஜோதி என்ற மகளும் உள்ளனர்.

    கடந்த 27-ந் தேதி சின்னத்துரையை ஒரு கும்பல் அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர். இது குறித்து செம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவுப்படி செம்பட்டி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.

    இந்த கொலை வழக்கில் வக்கம்பட்டியைச் சேர்ந்த விஜி என்ற விஜயகுமார் (34), பித்தளைப்பட்டியைச் சேர்ந்த சின்னவர் (34), மைக்கேல்பட்டியைச் சேர்ந்த சதீஸ் (24), பெருமாள்கோவில் பட்டியைச் சேர்ந்த விக்னேஷ் ஆகிய 4 பேருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

    கும்மம்பட்டி கிராமத்தில் பதுங்கி இருந்த அவர்களை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 பைக், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் முக்கிய குற்றவாளியான தாமரைக்கண்ணன் (30), கோவை கோர்ட்டில் சரணடைந்தார்.

    திண்டுக்கல்லில் கைது செய்யப்பட்ட 4 வாலிபர்கள் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    சம்பவத்தன்று பாரில் மது அருந்திக் கொண்டு இருந்தபோது சின்னத்துரைக்கும், தாமரைக்கண்ணனுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் சின்னத்துரையை தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சின்னத்துரையும், தாமரைக்கண்ணனை தாக்கினார். முதியவர் தன்னை தாக்கி விட்டார் என்ற ஆத்திரத்தில் தனது நண்பர்களான விஜயகுமார், சின்னவர், விக்னேஷ், சதீஸ் ஆகியோருக்கு போன் மூலம் தகவல் கூறியுள்ளார்.

    அவர்கள் சின்னத்துரை வீட்டுக்கு சென்று அவரது மனைவி கண் முன்னே சின்னத்துரையை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இவ்வாறு வாக்குமூலத்தில் கூறப்பட்டுள்ளது.

    மதுவால் பல்வேறு குடும்பங்கள் சீரழிந்து வரும் நிலையில் தற்போது மது போதையில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பழனி அருகே ரூ.3 லட்சத்தை 4 பேர் கொண்ட கும்பல் வழிப்பறி செய்தனர்.
    • எஸ்.பி பரிந்துரையின் பேரில் 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

    பழனி:

    பழனி அருகே மானூர் பகுதியில் சக்திவேல் என்பவர் பைக்கில் சென்றார். அப்போது அவரை வழிமறித்து முத்துப்பாண்டி, ராகுல், மாரியப்பன், மகாராஜா ஆகிய 4 பேர் ரூ.3 லட்சத்தை வழிப்பறி செய்தனர்.

    இவர்கள் மீது வழக்குபதிவு செய்து கீரனூர் போலீசார் கைது செய்தனர். தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டதால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் பரிந்துரையின் பேரில் 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் விசாகன் உத்தரவிட்டார்.

    • காரைக்காலில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • வாட்ஸ்அப் குரூப் மூலம் 3 நம்பர் லாட்டரி விற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.

     புதுச்சேரி:

    காரைக்கால் மாவட் டத்தில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், கஞ்சா மற்றும் லாட்ரி விற்பனையை, போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் காரைக்கால் பஸ் நிலையம் அருகே, மோட்டார் சைக்களில் வாலிபர் ஒருவர் தடை செய்யப்பட்ட 3 நம்பர் லாட்டரியை விற்பனை செய்வதாக, நகர போலீசாருக்கு ரகசிய தகவல் சென்றது. தொடர்ந்து, உதவி சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற போது, லாட்டரி விற்பனை செய்த நபர், அங்கிருந்து கிளம்பினார். போலீசார், அவரை விரட்டி பிடித்து, மோட்டார் சைக்கிளை சோதனைச் செய்தபோது, அரசால் தடை செய்யப்பட்ட லாட்ரி, டைரி, நோட்டு, 3 செல்போன், பணம் ரூ.2,700 இருந்தது தெரியவந்தது. தொடர் விசாரணையில், தமிழகத்தின் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சேர்ந்த ஸ்ரீநாத் (வயது 29) என்பதும், அவரது செல்போனில், வாட்ஸ்அப் குரூப் மூலம் 3 நம்பர் லாட்டரி விற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    பின்னர், ஸ்ரீநாத் தலைவனாக சேலத்தை சேர்ந்த மோகன்ராஜ் செயல்படுவது தெரிய வந்தது. மோகன்ராஜின் செல்போனை கண்காணித்த போலீசார் அவரிடம் காரைக்காலை சேர்ந்த ஹாஜா மைதீன் (48), குல் முகமது (40), ஹாஜா (46), ஆகியோர் காரைக்காலில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வருவது தெரிய வந்தது. இதனை அடுத்து ஸ்ரீநாத், ஹாஜா மைதீன் (48),குல் முகமது (40), ஹாஜா (46), ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 3 செல்போன், லாட்ரி, செல்போன், ரொக்கம் ரூ.2,700 பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை மூளையாக செயல்படும் சேலம் மோகன்ராஜ் மற்றும் சிலரை போலீசார் தேடிவருகின்றனர்.

    • எரியோடு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட னர்.
    • அப்போது அப்பகுதியில் மதுவிற்ற 4 பேரை கைது செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், வேடசந்தூர் டி.எஸ்.பி. துர்காதேவி உத்தரவின் பேரில் இன்ஸ்பெ க்டர் சத்தியபிரபா தலைமை யிலான எரியோடு போலீசார் தீவிர கண்கா ணிப்பு பணியில் ஈடுபட்ட னர்.

    சிறப்பு இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் கொடிக்கல்பட்டி, தொட்டணம்பட்டி ரெயில்வே பாலம் அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு மது விற்ற அருப்பம்பட்டியை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 52) என்பவரை கைது செய்து 8 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    சாமிமுத்தன்பட்டி அம்மா குளக்கரை அருகே மதுவிற்ற பிச்சை அந்தோணி என்ற தங்கராஜ் (56) என்பவரை கைது செய்து 26 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதே போல் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகா னந்தம் தலைமை யிலான போலீசார் மாரம்பாடி கல்லறைத் தோட்டம் பகுதி யில் ரோந்து சென்றபோது அங்கு மதுவிற்ற வேளாங்கன்னி (42) என்பவரை கைதுசெய்து 9 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிங்கராயர் தலைமையிலான போலீசார் ரோந்து சென்ற போது பெட்டிக்கடையில் மதுவிற்ற அந்தோணி (33) என்பவரை கைதுசெய்து 36 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • தொழிலாளியை தாக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • பூங்கா ரோட்டில் நின்று கொண்டிருந்தார்

    திருச்சி:

    முசிறி அடுத்த ஆமூர் பழைய புரம் பகுதியை சேர்ந்தவர் விஜயராஜ் (வயது 43) கட்டிட தொழிலாளியாக இவர், சம்பவத்தன்று முசிறி பூங்கா ரோட்டில் நின்று கொண்டிருந்தார். அப்போது எம் புதுப்பட்டி சொரியம்பட்டியை சேர்ந்த தங்கவேல் மகன் தியாகராஜன் (38 ), அவரது தம்பி பாலு(25), அதே பகுதியை சேர்ந்த நெடுமாறன் மகன் கோவிந்தராஜ் (22), சண்முகம் மகன் ராஜேஷ்(19) ஆகியோர், தியாகராஜனிடம் தகராறில் ஈடுபட்டதோடு, தாக்கி விட்டு அங்கிருந்து சென்றனர். இதில் காயம் அடைந்த விஜயராஜ் கொடுத்த புகாரின் பேரில் முசிறி சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் கைது செய்து விசாரித்து வருகிறார்.

    • 1304 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
    • வாலிபர்கள் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயற்சி செய்தனர்.

    கோவை,

    கோவை ரத்தினபுரி டாடாபாத் 9-வது வீதியில் உள்ள பள்ளி அருகே சிலர் கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனை செய்வதாக ரத்தினபுரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    தகவலின் பெயரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.

    அப்போது அங்கிருந்த சில வாலிபர்கள் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயற்சி செய்தனர்.

    அவர்களை மடக்கி பிடித்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பீளமேடு காளப்பட்டி ரோட்டில் உள்ள ஒரு மருந்து கடையில் போதை மாத்திரைகளை வாங்கி அதனை தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் உடலில் செலுத்தி போதைக்கு பயன்படுத்தி வந்ததும், இங்கு போதை மாத்திரை விற்பதற்காக நின்றதும் தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் கோவை ரத்தினபுரி பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் விவேக் பாரதி (வயது 18) மற்றும் 16 வயது சிறுவன், தேனி மாவட்டத்தை சேர்ந்த கோவையில் தங்கி கல்லூரியில் படிக்கும் தனபாலன் (19), மருந்து கடையில் போதை மாத்திரைகளை பதுக்கி கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்த மருந்து கடை உரிமையாளர் கரிகாலன் (49) ஆகிய 4 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து 1304 போதை மாத்திரைகள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • முசுவனூத்து கிராமத்தில் முன்விரோதம் காரணமாக இருதரப்பினர் மோதிக்கொண்டனர்.
    • இந்த மோதல் காரணமாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகில் உள்ள முசுவனூத்து கிராமத்தை சேர்ந்தவர் ஆதித்யன்(22). இவருக்கும் மிளகாய்பட்டிைய சேர்ந்த ரவி என்பவருக்கும் முன்விரோதம் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    நேற்றுஇரவு ரவி முசுவனூத்து கிராமத்திற்கு பால் கேன்கள் ஏற்றச்சென்றார். அப்போது அங்கு வந்த ஆதித்யன், மணிமாறன் ஆகியோர் எப்படி நீ எங்கள் ஊருக்கு வரலாம் என தாக்கியுள்ளனர்.

    இதுகுறித்து ரவி தனது நண்பர்களுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஆதித்யன் மற்றும் மணிமாறனை அடித்து தங்கள் கிராமத்திற்கு தூக்கிச்சென்று அமர வைத்தனர்.

    இதுகுறித்து தகவல் கிடைத்ததும் நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குருவெங்கட்ராஜ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் தயாநிதி மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.

    அவர்கள் ஆதித்யன், மணிமாறன், ரவி, அர்வீஸ் ஆகியோரை அழைத்துச்சென்றனர். அவர்கள் நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தால் இருதரப்பினர் இடையே மீண்டும் மோதல் ஏற்படாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • மர்மநபர் ஒருவர் வெளியே ஓடி வந்தார்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, டி.கீரனூர் முகமது நகரை சேர்ந்தவர் கமருதீனின் மனைவி செல்வகனி என்கிற சையது அம்மாள்(வயது 57). இவர் கடந்த 30-ந் தேதி காலை தனது வீட்டை பூட்டி விட்டு அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகா, வெள்ளூர் கிராமத்தில் ஒரு துக்க காரியத்துக்கு சென்று விட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு சையது அம்மாள் வீட்டில் இருந்து சத்தம் கேட்டு கொண்டிருந்தது.

    இந்த சத்தத்தை கேட்ட அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த அஜீஸ் (24) என்பவர் வந்து சந்தேகத்துடன் சையது அம்மாள் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் வீட்டில் இருந்து மர்மநபர் ஒருவர் வெளியே ஓடி வந்தார். இதனை கண்ட அஜீஸ் அக்கம், பக்கத்தில் வசிக்கும் பொதுமக்கள் உதவியுடன் அந்த மர்மநபரை கையும், களவுமாக பிடித்தார். பின்னர் இதுகுறித்து பொதுமக்கள் உடனடியாக மங்களமேடு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசாரிடம் பொதுமக்கள் மர்மநபரை ஒப்படைத்தனர். இதையடுத்து மர்மநபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • இரு தரப்பினர் மோதலில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • கோவில் நிலத்தில் விவசாயம் செய்வது தொடர்பாக

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள சிறுவயலூரில் செல்லியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் யார் விவசாயம் பார்ப்பது? என்பது தொடர்பாக சிறுவயலூரை சேர்ந்த ராஜேந்திரன் தரப்பிற்கும், சிவகுமார் தரப்பிற்கும் இடையே போட்டி ஏற்பட்டது. இது தொடர்பாக இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் உருட்டுக்கட்டை போன்றவற்றால் தாக்கிக்கொண்டனர். இந்த தாக்குதலில் ராஜேந்திரன் மற்றும் வீரமுத்து ஆகியோர் பலத்த காயமடைந்து பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மோதல் தொடர்பாக வி.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட சிறுவயலூரைச் சேர்ந்த சிவகுமார் (45), செல்லமுத்து (32), மாயவேல் (43), பாபு (30) ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்."

    • சேவல் சண்டையில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்
    • 2 சேவல், 2 கத்தி பறிமுதல்

    கரூர்:

    கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகேயுள்ள அத்திபாளையம்புதூர் தனியார் கிரஷர் அருகே நொய்யல் ஆற்றுப்படுகையில் சிலர் சேவல் சண்டையில் ஈடுபட்டுள்ளதாக க.பரமத்தி போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து அப் பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அங்கு சேவல் காலில் கத்திக்கட்டி சண்டை நடத்திய கூலித்தொழிலாளிகளான முன்னூர் தமிழரசன் (வயது 29), புன்னம்சத்திரம் பிள்ளையார் கோயில் தெரு திலிப் (21), பெருமாள் நகர் மாதேஷ் (23), ஈரோடு மாவட்டம் குப்பம்பாளையம் வஉசி நகர் சந்திரசேகர் (34) ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து, 2 சேவல்கள், 2 கத்திகளை க.பரமத்தி போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • கம்பத்தில் இருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்தி செல்வதாக நகர் வடக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • கஞ்சா கடத்திய 4 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்தி செல்வதாக நகர் வடக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விஜய்ஆனந்த் தலைமையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    கோம்பை சாலையில் சந்தேகத்திற்கிடமாக நின்று ெகாண்டிருந்த 4 பேரை பிடித்து விசாரித்ததில் அவர்கள் முன்னுக்குபின் முரணான பதில் அளித்தனர்.

    அவர்கள் வைத்திருந்த பையில் சோதனை செய்தபோது அதில் 10 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனை கம்பம்மெட்டு வழியாக கேரளாவுக்கு மோட்டார் சைக்கிளில் எடுத்துச்செல்ல இருந்தது தெரியவந்தது. இதனைதொடர்ந்து கோம்பையை சேர்ந்த ருத்ரன்(26), ஞானேசன்(44), அலெக்ஸ்பாண்டியன்(24), நெல்லுகுத்தி புளியமரம் தெருவை சேர்ந்த ஈஸ்வரன்(48) ஆகிய 4 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    ×