search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "377 பேர் பலி"

    இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பரவி வரும் பன்றிக்காய்ச்சலுக்கு இந்த ஆண்டில் பலியானோர் எண்ணிக்கை 377 ஆக அதிகரித்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. #SwineFlu
    புதுடெல்லி:

    இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும், உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது.

    இந்நிலையில், இந்தியா முழுவதும் பரவி வரும் பன்றிக் காய்ச்சலுக்கு இந்த ஆண்டில் பலியானோர் எண்ணிக்கை 377 ஆக அதிகரித்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, மத்திய சுகாதார துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: 

    இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பன்றிக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    குறிப்பாக, ராஜஸ்தான் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பன்றிக்காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 127 ஆக உயர்ந்துள்ளது.  3 ஆயிரத்து 504 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

    ராஜஸ்தானை தொடர்ந்து குஜராத்தில் 71 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்து 983 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தலைநகர் டெல்லியில் 7 பேர் இறந்துள்ளனர். 2 ஆயிரத்து 278 பேர் பாதிக்கப்பட்டனர்.

    பஞ்சாப்பில் 31 பேரும், ம.பி.யில் 30 பேரும், இமாசலப்பிரதேசத்தில் 27 பேரும், ஜம்மு காஷ்மீரில் 22 பேரும், மகாராஷ்டிராவில் 17 பேரும், தலைநகர் டெல்லி மற்றும் அரியானாவில் தலா 7 பேரும் பலியாகியுள்ளனர். நாடு முழுவதும் சுமார் 12 ஆயிரத்து 191 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

    கடந்த ஆண்டில் பன்றிக்காய்ச்சலுக்கு ஆயிரத்து 103 பேர் பலியானதாகவும், 14 ஆயிரத்து 992 பேர் பாதிக்கப்பட்டனர் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ஹெச்1என்1 வைரஸினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. #SwineFlu 
    ஓரின சேர்க்கை தண்டணைக்குரிய குற்றம் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்புக்கு சென்னையில் ஓரின சேர்க்கையாளர்கள் மற்றும் திருநங்கைகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
    சென்னை:

    ஓரின சேர்க்கை தண்டணைக்குரிய குற்றம் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்புக்கு சென்னையில் ஓரின சேர்க்கையாளர்கள் மற்றும் திருநங்கைகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து சூளைமேட்டை சேர்ந்த சகோதரன் அமைப்பு பொது மேலாளர் ஜெயா கூறியதாவது:-

    வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு வழங்கி உள்ளது. 5 நீதிபதிகள் கொண்ட 16 அரசியல் சாசன அமர்வு இந்த தீர்ப்பை வழங்கி இருப்பது பெரிய வி‌ஷயமாகும்.

    இதனை நாங்கள் வரவேற்கிறோம். பல அமைப்புகளின் முயற்சியினாலும், ஆதரவாளர்களாலும், தன்னார்வலர்களின் உதவிகளினாலும் இந்த நீதி கிடைத்துள்ளது. அவர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் இந்நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இனிவரும் காலங்களில் யார் எல்லாம் இதனை ஏற்க மறுத்தார்களோ அவர்கள் அனைவரும் ஏற்கக்கூடிய வகையிலும், புரிந்து கொள்ளுதலும் உருவாகியுள்ளது.

    நாங்கள் மறைத்து, பயந்து வெளியில் சொல்ல தயங்கினோம். இனி தைரியத்துடன் வெளியே வரலாம்.

    எங்களை பெற்றோர்கள் ஏற்க மறுத்த நிலையில் அவர்களும் இனி அங்கீகரிப்பார்கள். இனிவரும் காலம் வசந்த காலம். எங்களுக்கு சமூக அந்தஸ்து கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.

    மணிமாலா(ஓரின சேர்க்கையாளர்) :-

    மறைந்து வாழ்க்கை நடத்திய எங்களுக்கு ஒரு வெளிப்படையான அங்கீகாரம் கிடைத்துள்ளது.

    பெற்றோருக்கு மறைந்து, பயந்து இனி வாழத்தேவையில்லை. பெற்றோரின் கட்டாயத்தின் பேரில் திருமணம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

    இனி சுதந்திரமாக வெளியே வர முடியும். மன உளைச்சல் ஏற்படாது. நிம்மதியுடன் சந்தோ‌ஷமாக வாழலாம். இதனால் தேவையற்ற இறப்பு நடைபெறாது.

    இந்த தீர்ப்பு எங்கள் வாழ்க்கைக்கு மிகவும் பயன் உள்ளதாக அமைந்துள்ளது. வரலாற்றில் சிறப்புமிக்க தீர்ப்பின் மூலம் வெட்கம், தலை குனியாமல் பெருமையுடன் வாழ்வோம். 30 வருடமாக போராடி கிடைத்த வெற்றி இது.

    இந்த செய்தி வந்தது முதல் ரொம்ப சந்தோ‌ஷமாக இருக்கிறது. இனிமேல் தற்கொலை போன்ற விபரீத முடிவுகள் ஏற்படுவது தடுக்கப்படும்.

    கார்த்திக் (ஒரினசேர்க்கையாளர்):-

    தீர்ப்பு வந்தது முதல் மிகவும் சந்தோ‌ஷமாக இருக்கிறோம். இதை செக்ஸ் ஆக கருதாமல் உணர்வாக கருதி நல்ல தீர்ப்பை வழங்கியதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

    செக்சை தாண்டி, உணர்வு சம்பந்தப்பட்ட தீர்ப்பாகும். ஓரின சேர்க்கை தவறு, குற்றம் என்று கூறிய இந்த சமுதாயத்தில் இனி நாங்கள் தலைநிமிர்த்து வாழ்வோம். இனிமேல் நிறைய பேர் வெளியே வருவார்கள்.

    இந்த தீர்ப்பு காலம் கடந்து வந்து இருக்கிறது. பல ஆண்டுகளாக போராடி பெற்ற வெற்றியாகும்.

    இந்த நாளை, வருடத்தை மறக்க மாட்டோம். ஒவ்வொரு வருடமும் இந்த நாளை கொண்டாடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    ஓரின சேர்க்கை விரோதமானது அல்ல என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் நேற்று தீர்ப்பு வழங்கிய நிலையில், நடிகர், நடிகைகள் இதற்கு வரவேற்பு தெரிவித்து கருத்து பதிவிட்டுள்ளனர்.
    ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இருக்கும் என்றும், இயற்கைக்கு முரணான பாலியல் உறவு தண்டனைக்குரிய குற்றமல்ல என்று கூறிய உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஓரின சேர்க்கை சட்ட விரோதமானது அல்ல என்று தீர்ப்பு வழங்கினர். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த தீர்ப்புக்கு நடிகர்-நடிகைகள் பலரும் வரவேற்பு தெரிவித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து நடிகை திரிஷா கூறியிருப்பதாவது, ஓரின சேர்க்கை சம்பந்தமான 377 சட்ட பிரிவு ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் சம உரிமைக்கு செல்வதற்கான வழி கிடைத்துள்ளது. ஜெய் ஹோ..

    மீண்டும் எமது மக்களை பாதுகாத்துள்ள மதிப்புமிக்க உச்சநீதிமன்றத்திற்கு நன்றி. அனைவருக்கும் வாழ்த்துக்கள். இது ஒரு சிறந்த நாள். இந்த நாளுக்காக போராடிய அனைவருக்கும் வாழ்த்துக்கள். ஜெய்ஹிந்! என்று நடிகர் சித்தார்த் குறிப்பிட்டுள்ளார்.

    ஓரின சேர்க்கைக்கு ஆதரவான தீர்ப்பு. இதுதான் உண்மையான சுதந்திரம். நன்றி என்று நடிகை ஸ்ரேயா தெரிவித்துள்ளார். 

    எல்லோருக்கும் சம உரிமை இருக்க வேண்டும். சாதி, மதங்கள் கடந்து பிடித்தவர்களுடன் இருப்பது அவரவர் உரிமை. இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நிர்ப்பந்திப்பது தவறு. மாற்றங்களை ஏற்கவேண்டும். இந்த தீர்ப்பு ஒரு மாற்றத்துக்கான வழிதான் என்று நடிகர் ஆர்யா தெரிவித்துள்ளார்.

    நடிகை கஸ்தூரி கூறியிருப்பதாவது, 

    ஓரின சேர்க்கை குற்றம் என்ற சட்டத்தை நீக்க தொடர்ந்து நடந்த போராட்டங்களுக்கு வெற்றி கிடைத்து இருக்கிறது. காதலுக்கு கண்ணும் வயதும் சாதியும் இல்லை என்பதுபோல் பாலினம் இல்லை என்பது எனது கருத்து. மேலை நாடுகளில் இது வினோதமானது இல்லை. அன்போடு நெருங்கிய இருவரை ஒரே பாலினத்தை சேர்ந்தவராக இருந்தாலும் ஏன் பிரிக்க வேண்டும். 

    இருவர் விரும்பி செய்தால் அது குற்றம் இல்லை. விரும்பாமல் நடக்கும் கற்பழிப்பு, பாலியல் வன்முறைகள்தான் குற்றம். ஓரின சேர்க்கையாளர்களால் சமூகத்துக்கு எந்த பிரச்சினையும் இல்லை. வன்முறையோ சீர்கேடுகளோ வரப்போவதும் இல்லை. ஓரின சேர்க்கைக்கு எதிரான விக்டோரியா மகாராணி காலத்து பழமையான சட்டத்தை ரத்து செய்து பரந்த மனப்பான்மையை புகுத்தி உள்ள இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது. 

    ஓரின சேர்க்கை பாவமோ, குற்றமோ இல்லை. அன்பு இயற்கைக்கு முரணானது இல்லை. கள்ளக்காதலுக்காக 2 குழந்தைகளை கொல்வதுதான் இயற்கைக்கு முரணானது.

    ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவது குற்றம் என வரையறுக்கப்பட்டுள்ள சட்டப்பிரிவு 377-ஐ ரத்து செய்து உச்ச நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. #Section377 #SupremeCourt
    புதுடெல்லி:

    இந்திய தண்டனைச் சட்டம் 377ன்படி, இயற்கைக்கு மாறாக ஆண்களோ, பெண்களோ ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது குற்றமாக கருதப்படுகிறது. இந்த சட்டத்தை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் ‘நாஸ்’ என்ற  தன்னார்வ தொண்டு நிறுவனம்  வழக்கு தொடர்ந்தது.

    இதில், கடந்த 2009ம் ஆண்டு தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், ‘பரஸ்பர சம்மதத்துடன் ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது குற்றமாகாது’ என பரபரப்பு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள், கடந்த 2013ம் ஆண்டு அளித்த தீர்ப்பில், டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்தனர்.



    இதனை எதிர்த்து மீண்டும் மேல்முறையீடு செய்யப்பட்டது. பிரபல பாலிவுட் நடன இயக்குனர் என்.எஸ்.ஜோஹர், பத்திரிகையாளர் சுனில் மெஹ்ரா போன்ற பல்துறை பிரபலங்கள் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கும் சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இதுதொடர்பாக அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள சில முக்கிய அம்சங்களையும் ஆய்வு செய்ய வேண்டியுள்ளதால் வழக்குகள் அனைத்தும் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டன.

    தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான இந்த அமர்வு, இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசிடம் விளக்கம் கேட்டிருந்தது. விசாரணையின்போது, நீதிமன்றத்திடமே முடிவை விட்டுவிடுவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இரு தரப்பினரின் வாதப்பிரதிவாதங்கள் கடந்த ஜூலை 17-ம் தேதி நிறைவடைந்ததையடுத்து, தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

    இந்நிலையில், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. காலை 11.30 மணியளவில் தீர்ப்பை வாசித்த நீதிபதிகள், ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இருக்கும் என்றும், இயற்கைக்கு முரணான பாலியல் உறவு தண்டனைக்குரிய குற்றமல்ல என்றும் கருத்து தெரிவித்தனர். அத்துடன், ஓரினச்சேர்க்கையை குற்றச் செயலாக கருதும் சட்டப்பிரிவு 377-ஐ ரத்து செய்து உத்தரவிட்டனர்.

    ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இருக்கும் என்றும் அவரவர் உணர்வு மறுக்கப்படுவது இறப்புக்கு சமமானது எனவும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்தார். அரசிய சாசன சமநிலை என்பது எண்ணிக்கையை கொண்டு நிர்ணயிக்கப்படுவதில்லை என்றும் அவர் தெரிவித்தார். #Section377 #SupremeCourt
    ஓரினச் சேர்க்கையை குற்றமாக குறிப்பிடும் இந்திய அரசியலமைப்பின் 377-வது சட்டப்பிரிவு விவாகரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் முடிவை அனைத்து கோணங்களிலும் விரிவாக ஆய்வு செய்ய சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது. #wisdomofSC #validityofSection377 #Section377
    புதுடெல்லி:

    ஓரின சேர்க்கையை தண்டனைக்குரிய குற்றம் என்று இந்திய தண்டனை சட்டத்தின் 377-வது பிரிவு கூறுகிறது. இந்த சட்டப்பிரிவை அரசியல் சட்டப்படி செல்லாது என்று அறிவிக்கக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, அம்மனுக்களை விசாரித்து வருகிறது.

    377-வது சட்டப்பிரிவை செல்லாது என்று அறிவிப்பது பற்றி சுப்ரீம் கோர்ட்டின் முடிவுக்கே விட்டு விடுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தனது பிரமாண மனுவில் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், நேற்று இம்மனுக்கள் மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, மத்திய அரசு எங்கள் முடிவுக்கு விட்டு விட்டாலும், 377-வது சட்டப்பிரிவின் செல்லும்தன்மையை அனைத்து கோணங்களிலும் விரிவாக ஆய்வு செய்வோம் என்று நீதிபதிகள் கூறினர்.

    மேலும், 377-வது பிரிவை நீக்கும்போது, ஓரின சேர்க்கையாளர்கள் மீதான சமூக களங்கமும், பாரபட்சமும் அகலும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்தனர். அடுத்தகட்ட விசாரணையை 17-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.  #wisdomofSC #validityofSection377 #Section377 
    ×