search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "34 பேர் பலி"

    உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது என போலீசார் தெரிவித்தனர். #Uttarakand #Illicitliquor
    டேராடூன்:

    உத்தரகாண்டின் ஹரித்துவார் மாவட்டம் ரூர்கி பகுதியில் கள்ளச்சாராய விற்பனை நடந்து வருகிறது. நேற்று நள்ளிரவு இதை வாங்கிக் குடித்த பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டனர்.

    இதில் 12 பேர் பலியானதாக முதல் கட்டமாக தகவல் வெளியானது. மேலும், 20க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமாக உள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிலரது நிலைமை மோசமடைந்து உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என தெரிவித்தனர்.

    இந்நிலையில், கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. இதில் உத்தரப்பிரதேசத்தின் சஹரான்பூரில் 18 பேரும், உத்தராகண்டில் 16 பேரும் அடங்குவர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கள்ளச்சாராயம் விற்பனைக்கு துணை போன உள்ளூர் அதிகாரிக 13 பேரை மாவட்ட நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. இதுதொடர்பாக, வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Uttarakand #Illicitliquor
    பபுக் புயல் தாக்குதலால் தாய்லாந்து நாட்டில் 3 பேர் பலியாகினர். மேலும், 34 ஆயிரம் பேர் பத்திரமாக வெளியேற்றப்பட்டு உள்ளனர். #CyclonePabuk #Thailand
    பாங்காங்:

    தாய்லாந்து வளைகுடாவில் புயல் உருவாகி உள்ளது. இதற்கு ‘பபுக்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயலானது அந்தமான் கடல் நோக்கி 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து சென்றது. பல்வேறு இடங்களில் மின் கம்பங்கள் மற்றும் மரங்கள் சாய்ந்து விழுந்துள்ளன.

    இந்நிலையில், பபுக் புயல் தாக்குதலால் தாய்லாந்து நாட்டின் பத்தானி மாநிலத்தில் மீன் பிடிக்க சென்ற மீனவர் ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு மீனவரை தேடி வருகின்றனர்.

    இதேபோல், தம்மாரட் மாநிலத்தில் 2 பேர் இறந்தனர். இதன்மூலம் பபுக் புயல் தாக்குதலால் தாய்லாந்து நாட்டில் 3 பேர் பலியாகி உள்ளனர்.

    இந்த புயலால் தாய்லாந்தின் சம்ப்ஹார்ன், சோங்க்லா, பட்டாலங், பத்தானி, பெட்சாபுரி, பிரசாப் கிரிகான், சூரட் தானி மற்றும் நாகோன் சி தம்மாரட் உள்ளிட்ட 8 மாநிலங்கள் கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளன.

    புயல் தாக்கத்தை தொடர்ந்து மீட்புப் பணிகளில் பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். தம்மாரட் பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் சுமார் 34 ஆயிரம் மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளோம் என அதிகாரிகள் தெரிவித்தனர். #CyclonePabuk #Thailand
    தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலுக்கு இதுவரை 34 பேர் பலியான நிலையில் சுகாதார நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. #Swineflu #Dengue

    சென்னை:

    தமிழ்நாடு முழுவதும் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் பரவி உள்ளது.

    வைரஸ் மூலம் பரவும் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை கடந்த இரண்டு மாதமாக அதிகரித்துள்ளது.

    டெங்கு, பன்றிக் காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்த தமிழக பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளனர். டெங்கு கொசுவை உற்பத்தி செய்யும் வகையில் சுகாதாரத்தை பேணி பராமரிக்காத தொழிற் சாலைகள், நிறுவனங்கள், வீடுகளில் அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    டெங்கு கொசுக்கள் உருவாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அபராதமும் விதித்து வருகிறார்கள். என்றாலும் தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்துவது பொது சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு மிக, மிக சவாலாக உள்ளது.

    தமிழ்நாடு முழுவதும் கடந்த ஜனவரி மாதம் முதலே டெங்கு, பன்றிக் காய்ச்சலின் தாக்கம் உள்ளது. ஆனால் கடந்த இரண்டு மாதமாக பருவமழை பெய்ய தொடங்கிய பிறகு டெங்கு பன்றிக் காய்ச்சலுக்கு பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகமாகி விட்டது. குறிப்பாக கடந்த மாத இறுதியில்தான் டெங்கு, பன்றிக் காய்ச்சல் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மிக வேகமாக பரவி நிறைய பேரை நிலை குலைய செய்துள்ளது.

    கிராமங்களில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவுதான். சென்னை, திருச்சி, கோவை, மதுரை, நெல்லை போன்ற நகர்ப்பகுதிகளில் வசிப்பவர்கள்தான் டெங்கு வைரசால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். நகர்ப் பகுதிகளில் பல இடங்களில் தண்ணீர் தேங்குவதால் டெங்கு கொசு உற்பத்தி அதிகமாகி விடுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரை அரசு பொது மருத்துவமனையில் பதிவான தகவல்களின்படி 917 பேர் பன்றிக் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது. இவர்களில் 17 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டனர். தற்போது சுமார் 600 பேர் பன்றிக் காய்ச்சலுக்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையை விட மிக அதிகமாக உள்ளது. நேற்று அரசு மருத்துவமனைகளில் சுமார் 2700 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது.

    டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடலில் வெள்ளை ரத்த அணுக்கள் குறைந்து உயிரிழப்பை ஏற்படுத்தி விடுகின்றன. அந்த வகையில் இந்த சீசனில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் 17 பேர் பலியாகி இருப்பது தெரிய வந்துள்ளது.

     


     

    தற்போது தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவுவது கட்டுப்பாட்டுக்குள் வரத் தொடங்கியுள்ளது. பருவ மழை அதிக அளவில் பெய்வதால் டெங்கு பாதிப்பவர்கள் குறைவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவுவது அதிகாரிகளுக்கு சவாலை ஏற்படுத்தி உள்ளது.

    சுற்றுப்புறச்சூழல் மற்றும் சுகாதார குறைவு காரணமாக பன்றிக் காய்ச்சல் மிக, மிக எளிதாக பரவுவதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். எனவே வீட்டில் யாராவது ஒருவருக்கு காய்ச்சல் வந்தாலும் உடனே முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள விழிப்புணர்வு பிரசாரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் எவ்வளவு விழிப்புணர்வு பிரசாரம் செய்தாலும் பன்றிக் காய்ச்சல் வந்த பிறகும் பலர் அசட்டையாக இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் வேதனை தெரிவித்தனர். நேற்று நெல்லை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் முத்துகிருஷ்ணன், செல்வம் இருவர் பன்றி காய்ச்சலுக்கு உயிரிழந்திருப்பதை அதிகாரிகள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

    டெங்கு, பன்றி காய்ச்சலுக்கு தமிழகத்தில் இது வரை 34 பேர் பலியாகி விட்ட நிலையில் சுகாதார நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. டெங்கு, பன்றிக் காய்ச்சலை கட்டுப்படுத்த போதுமான மருந்து, மாத்திரைகள் கைவசம் இருப்பதால் அதிகாரிகள் விழிப்புணர்வு பிரசாரத்தை அதிகப்படுத்தி உள்ளனர்.

    டெங்கு, பன்றிக் காய்ச்சலுக்கு சுமார் 3,600 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அடிக்கடி கை கழுவுங்கள் என்ற பிரசாரம் தீவிரமாகி உள்ளது. #Swineflu #Dengue

    உகாண்டா நாட்டில் பெய்து வரும் கனமழையால் அங்கு ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் சிக்கி இதுவரை 34 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #UgandaMudslides
    கம்பாலா: 

    உகாண்டா நாட்டில் தற்போது கனமழை பெய்து வருகிறது. உகாண்டாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள புடுடா மாவட்டத்தில் பலத்த மழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    கனமழையை தொடர்ந்து அங்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 34 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.



    மேலும், வெள்ளப் பெருக்கால் அங்குள்ள மூன்றுக்கு மேம்பட்ட கிராமங்கள் முழுவதும் மூழ்கியுள்ளன. அங்குள்ள வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன.

    இதுதொடர்பாக மீட்புக்குழு அதிகாரிகள் கூறுகையில், நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் பலர் புதைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும். ஆற்றங்கரையோரம் உள்ள மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர் என மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். #UgandaMudslides
    கானாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்ப்ட்ட வெள்ளத்தில் சிக்கி 34 பேர் பலியாகியுள்ளனர் என மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். #GhanaHeavyRains
    அக்ரா:

    ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கானாவில்  தற்போது கன மழை பெய்து வருகிறது. கானாவின் வடக்கு பகுதியில் மிகவும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அங்குள்ள அனைத்து அணைகளும் நிரம்பி வருகின்றன.

    இந்நிலையில், கானாவில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அங்குள்ள புர்கினா பாஸோ என்ற இடத்தில் உள்ள பாக்ரே அணை முழுவதும் நிரம்பியது. இதனால் அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டது. இதைத்தொடர்ந்து, கரையோரம் வசித்த மக்கள் அணையில் இருந்து வெளியான வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். 



    இந்த வெள்ளத்தில் சிக்கி சுமார் 34 பேர் பலியாகியுள்ளனர். மேலும் சிலர் மாயமாகி உள்ளதாக  அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    கானாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால், 52 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். #GhanaHeavyRains
    2018-19-ம் ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட்டை முதல்-மந்திரி குமாரசாமி தாக்கல் செய்தார். அதில் ரூ.34 ஆயிரம் கோடிக்கு விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. #KarnatakaBudget
    பெங்களூரு:

    2018-19-ம் ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட்டை முதல்-மந்திரி குமாரசாமி தாக்கல் செய்தார். அதில் ரூ.34 ஆயிரம் கோடிக்கு விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. பெட்ரோல், டீசல், மதுபானம், மின்சாரம் மீதான வரி உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    கர்நாடக முதல்-மந்திரியாக பொறுப்பேற்றுள்ள குமாரசாமி அரசின் முதல் பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் 4-வது நாள் கூட்டம் நேற்று காலை விதான சவுதாவில் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும், நிதித்துறையை தன்வசம் வைத்துள்ள முதல்-மந்திரி குமாரசாமி, 2018-19-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

    ரூ.2 லட்சத்து 18 ஆயிரத்து 488 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது ரூ.106 கோடி உபரி பட்ஜெட் ஆகும்.



    பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    * முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது கடந்த பிப்ரவரி மாதம் 16-ந் தேதி இந்த சபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் அமல்படுத்தப்படும். அதுபோல் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட அனைத்து நலத்திட்டங்களும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

    * 1,000 அரசு தொடக்கப்பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்பு தொடங்கப்படும்

    * அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்படும்.

    * 1 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவாக உள்ள 28 ஆயிரத்து 847 பள்ளிகள் அருகாமையில் உள்ள 8 ஆயிரத்து 530 பள்ளிகளுடன் இணைக்கப்படும்.

    * கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி வரையில் நிலுவையில் உள்ள அனைத்து விவசாய கடன்களும் தள்ளுபடி செய்யப்படும். அதாவது ரூ.34 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும்.

    * கடனை சரியாக செலுத்தி வரும் விவசாயிகளுக்கு மொத்த கடனில் ரூ.25 ஆயிரம் தள்ளுபடி செய்யப்படும்.

    * சம்பந்தப்பட்ட அமைப்பின் அனுமதியை பெற்று மேகதாதுவில் புதிய அணை கட்டும் திட்டத்தை விரைவாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    * பெங்களூரு 3-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தின் கீழ் புதிதாக 95 கிலோ மீட்டர் நீளத்திற்கு மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்படும்.

    * பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விற்பனை வரி தலா 2 சதவீதம் உயர்த்தப்படுகிறது.

    * மதுபானங்கள் மீதான கூடுதல் கலால் வரி 4 சதவீதம் உயர்த்தப்படுகிறது.

    * மின்சார பயன்பாடு மீதான வரி 9 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.

    இவ்வாறு பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளது.  #KarnatakaBudget #Tamilnews
    ×