search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "3 பேர் கைது"

    • கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த ஜெய தீபன் என்பவரை பவானிசாகர் போலீசார் கைது செய்தனர்.
    • 750 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கோபி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீ சார் அங்கு கஞ்சா எனும் போதை பொருளை விற்பனை செய்து கொண்டி ருந்த சத்தியமங்கலம் சிக்கரசம்பாளையம் பகுதியை சேர்ந்த மனோகரன் மகன் சதீஷ் (வயது 26) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 500 கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்து வருகின்றனர்.

    இதேபோல் பவானிசாகர் இலங்கை அகதிகள் முகாம் பகுதியில் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த அதே பகுதியை சேர்ந்த முனீஸ்வரன் மகன் ஜெய தீபன் (28) என்பவரை பவானிசாகர் போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர் வைத்திருந்த 750 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போதை பொருள் விற்பனை செய்து கொண்டிருந்த பிரகாஷ், டார ராம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
    • மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு டவுன் பகுதியில் போதை பொருள் விற்பனை நடைபெறுவதாக ஈரோடு டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு தடை செய்ய ப்பட்ட போதைப் பொருள்களை விற்பனை செய்து கொண்டிருந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பிரகாஷ் (வயது 20) டார ராம் (38) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த பான் மசாலா, ஹான்ஸ், கூலிப் உள்ளிட்ட ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 275 மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதை போல் புளிய ம்பட்டி-சக்தி ரோடு பகுதியில் போதை பொருள் விற்பனை செய்து கொண்டிருந்த குரும்பபாளையம் பகுதியை சேர்ந்த நாகராஜ் மகன் நஞ்சப்பன் என்ற முருகேசன் (37) என்பவரை புளியம்பட்டி போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர் வைத்திருந்த போதை பொருள்களை போலீசார் பறி முதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மலையம்பாளையம், சிறுவலூர் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • 19 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட பகுதி களில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என மலையம்பாளையம், சிறுவலூர் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்ட னர்.

    அப்போது சின்னம்மா புரம், கெட்டிசெவியூர்-நம்பியூர் ரோடு, வெள்ளப்பம்பாளையம் எல்.பி.பி. வாய்க்கால் சுற்று வட்டார பகுதிகளில் அனுமதியின்றி மது விற்றுக்கொண்டிருந்த ஈரோடு புஞ்சை கணபதி பாளையம் பகுதியை சேர்ந்த வீரன் மகன் பெரியசாமி (வயது 53), கொடுமுடி இலுப்பு தோப்பு பகுதியை சேர்ந்த பால சுப்பிரமணியன் மகன் வினோத்குமார் (32), நம்பியூர் சூரியம்பாளையம் பழனி மகன் நாகராஜன் (34) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அவர்கள் விற்ப னைக்காக வைத்திருந்த 19 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    இதே போல் காஞ்சி கோவில்-பெருந்துறை ரோடு, இச்சிபாளையம் வாய்யக்கால் கரை பகுதியில் அனுமதியின்றி மது விற்று கொண்டிருந்த பெருந்துறை முள்ளம்பட்டி அடுத்த கண்ணவேலம் பாளைய த்தை சேர்ந்த மூர்த்தி (50), கொடுமுடி விருப்பம்பா ளையம் ராமகி ருஷ்ணன் மகன் சீனிவாசன் (28) ஆகி யோர் மீது காஞ்சி கோவில், கொடுமுடி போலீ சார் வழ க்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அவர்கள் விற்ப னைக்காக வைத்திருந்த 16 மதுபாட்டில்களை போலீ சார் பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் பொது இடத்தில் மது அருந்திய குற்றத்தி ற்காக மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த சின்ன ப்பன் மகன் முருகன் (41) என்பவரை மலையம்பாளையம் போலீ சார் கைது செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஓட்டலில் 3 பேர் உணவு சாப்பிட்டுவிட்டு பணம் கேட்டால் கொலை செய்துவிடுவதாக உரிமையாளரை மிரட்டியுள்ளனர்.
    • புகாரின்பேரில் போலீசார் 3 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    உத்தமபாளையம்:

    உத்தமபாளையம் அருகே காமயகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் காசிபாண்டியன்(61). இவர் அதேபகுதியில் ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். இந்த கடைக்கு விக்னேஷ்(21), வாஞ்சிநாதன்(22), ரவீந்திரன்(25) ஆகிய 3 பேரும் அடிக்கடி வந்து செல்வார்கள்.

    தீபாவளி பண்டிகையின்போது பார்சல் வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் மிரட்டியுள்ளனர். மேலும் சம்பவத்தன்று 3 பேரும் உணவு சாப்பிட்டுவிட்டு பணம் கேட்டால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளனர்.

    நாங்கள் அடிக்கடி வருவோம். எங்களுக்கு உணவு தரவேண்டும். பணம் கேட்ககூடாது என்றனர். மேலும் காசிபாண்டியனிடம் மதுகுடிக்க ரூ.1000 கேட்டனர். இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

    • போலி லாட்டரி சீட்டு விற்பனை பல இடங்களில் நடப்பதாக குமாரபாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி, சப்-இன்ஸ்பெக்டர் சந்தியா, முருகேசன் உள்ளிட்ட போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர்.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் போலி லாட்டரி சீட்டு விற்பனை பல இடங்களில் நடப்பதாக குமாரபாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி, சப்-இன்ஸ்பெக்டர் சந்தியா, முருகேசன் உள்ளிட்ட போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். இதில் பள்ளிபாளையம் சாலை சத்தியநாராயண மருத்துவமனை பகுதியில் வெள்ளை சீட்டில் சில எண்களை எழுதி வெளி மாநில லாட்டரி சீட்டு என 3 பேர் விற்றுக்கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் கையும், களவுமாக பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் குமாரபாளையத்தை சேர்ந்த அங்கப்பராஜ் (43), ராமச்சந்திரன் (33), மணிகண்டன் (30) என்பது தெரியவந்தது. 3 பேரையும் போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை அடுத்து மஞ்சபுத்தூர் கிராமத்தில் கிருஷ்ணர் கோவில் கட்ட சிலர் முடிவு செய்தனர். இதற்கான பணத்தை தயார் செய்வதற்காக அதே ஊரைச் சேர்ந்த மணிகண்டன் (34) என்பவர் சிலருடன் சேர்ந்து சீட்டு நடத்தி வந்தார். இதில் அதே ஊரைச் சேர்ந்த பெரியசாமி (40) உட்பட 11 பேர் பணம் கட்டாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மணிகண்டன் பெரியசாமி இடம் கேட்டார்.

    இதில் ஆத்திரம் அடைந்த பெரியசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஏழுமலை, சதீஷ்குமார் (24), கலியமூர்த்தி (28) ஆகியோர் மணிகண்டனை திட்டி தாக்கினர். இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் சப்-இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரன் வழக்கு பதிவு செய்து ஏழுமலை, சதீஷ்குமார், கலியமூர்த்தி ஆகியோரை கைது செய்தனர். மேலும் பெரிய சாமியை தேடி வருகின்றனர்.

    • அரசாங்கம் மகன் சுபாஷ் சந்திரபோஸ்
    • தியாகதுருகத்தில் இருந்து குன்னியூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் சந்தைமேடு பகுதியைச் சேர்ந்தவர் அரசாங்கம் மகன் சுபாஷ் சந்திரபோஸ் (வயது 22) இவர் சம்பவத்தன்று தியாகதுருகத்தில் இருந்து குன்னியூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது பேட்டை தெரு பகுதியில் சென்றபோது. இளைஞர்கள் சிலர் மோட்டார் சைக்கிள்கள் மோதியது சம்பந்தமாக முதியவரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அங்கு சென்று ஏன் முதியவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறீர்கள் என சுபாஷ் சந்திரபோஸ் கேட்டார்.

    இதனால் ஆத்திரமடைந்த பேட்டை தெரு பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் மகன் விஷ்ணு (20), சிவசண்முகம் மகன் விக்கி (19), சீனிவாசன் மகன் அருண்குமார் (26) ஆகி யோர் சுபாஷ் சந்திரபோஸை திட்டி, தாக்கினர். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விஷ்ணு, விக்கி, அருண்குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்

    • மோகனா திருமணம் ஆகி தனது கணவர் சிவம்பரசனுடன் வேல கவுண்டம்பட்டியில் உள்ள திருவள்ளுவர் நகரில் வசித்து வருகிறார்.
    • வீட்டின் கதவை அடையாளம் தெரியாத 3 பேர் இரும்பு கம்பியால் உடைத்துக்கொண்டி ருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் வேல கவுண்டம்பட்டி அருகே உள்ள மானத்தியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 59). இவரது மகள் மோகனா.

    மோகனா திருமணம் ஆகி தனது கணவர் சிவம்பரசனுடன் வேல கவுண்டம்பட்டியில் உள்ள திருவள்ளுவர் நகரில் வசித்து வருகிறார்.

    திருட முயற்சி

    இந்த நிலையில் மோகனாவிற்கு உடல் நிலை சரியில்லாததால் செல்வராஜ் தனது காரில் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துவிட்டு மீண்டும் வேலகவுண்டம்பட்டி திருவள்ளுவர் நகரில் உள்ள தனது மகள் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவை அடையாளம் தெரியாத 3 பேர் இரும்பு கம்பியால் உடைத்துக்கொண்டி ருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர் திருடர்கள் திருடர்கள் என சத்தம் போட்டு அருகில் உள்ளவர்களை அழைத்தார். அப்போது அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பியோட முயன்ற 3 பேரையும் பொதுமக்கள் பிடித்து வேலகவுண்டம்பட்டி போலீசாரிடம் ஒப்ப டைத்தனர்.

    போலீசார் 3 பேரிடமும் நடத்திய விசாரணையில் அவர்கள் சென்னை புதிய பெருங்களத்தூர் கருமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த குமார் என்பவரின் மகன் பாஸ்கர் என்கிற பல்லு பாஸ்கர் (25), திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா பாரதி நகரை சேர்ந்த சவுந்தர்ராஜ் மகன் யாழின் (23), அதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவரின் மகன் அஸ்வின் (20) ஆகியோர் என்பது தெரிய வந்தது.

    இவர்கள் 3 பேரும் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வந்ததும் திருவள்ளுவர் நகரில் மோகனா என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்ததும் தெரிய வந்தது.

    ஜெயிலில் அடைப்பு

    அதனையடுத்து வேல கவுண்டம்பட்டி போலீசார் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற பாஸ்கர் என்கிற பல்லு பாஸ்கர், யாழின், அஸ்வின் ஆகிேயாரை கைது செய்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

    • புகையிலை பொருள்கள் பறிமுதல்
    • அந்த வழியாக ரோந்து வந்த தனிப்படை போலீசார் பார்த்தனர்.

    ஆரல்வாய்மொழி:

    ஆரல்வாய்மொழி நான்கு வழிச்சாலையில் ஒரு கார் வெகு நேரமாக நின்றது. அதன் டிரைவர் காருக்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அதனை அந்த வழியாக ரோந்து வந்த தனிப்படை போலீசார் பார்த்தனர். அவர்கள் டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர் கிருஷ்ணகிரி குப்பச்சிபாறை பகுதியைச் சேர்ந்த பெரியசாமி என்பவரின் மகன் பிரகாஷ் (வயது 24) என்பது தெரியவந்தது.

    அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் காருக்குள் போலீசார் சோதனை செய்தனர். அப்போது காரில் 20 சாக்கு மூடைகளில் குட்கா, பான்மசாலா போன்ற புகையிலை பொருட்கள் இருந்தன. அதுபற்றி விசாரித்த போது, விஜயன் என்பவர் கூறியதின் பேரில் கிருஷ்ணகிரியில் இருந்து குமரி மாவட்டத்திற்கு கொண்டு வந்ததாக பிரகாஷ் தெரிவித்தார்.

    புகையிலை பொருட்களை அவர் குமரி மாவட்டத்தில் சப்ளை செய்வதற்காக கிருஷ்ணகிரியில் இருந்து கடத்தி கொண்டு வந்துள்ளார். இதையடுத்து புகையிலை பொருட்கள் மற்றும் அதனை கடத்த பயன்படுத்திய காரை போலீசார் பறிமுதல் செய்து ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் டிரைவர் பிரகா சும் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். அவரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.3 லட்சம் என்று கூறப்படுகிறது.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணெலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்
    • கலெக்டர் ஸ்ரீதர் குத்துவிளக்கேற்றியதுடன் அந்த இடத்தில் அடிக்கல் நாட்டி முதல்- அமைச்சருக்கு நன்றி தெரிவித்து பேசினார்.

    திருவட்டார்:

    பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, திருவட்டார் வட்டம், குல சேகரம் பேரூராட்சி செருப்பாலூர் கல்லடிமா மூடு பகுதியில் பொதுப்ப ணித்துறைக்கு சொந்தமான 4.83 ஏக்கர் நிலத்தினை தமிழ்நாடு அரசின் அனுமதி பெற்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறைக்கு ஒப்படைக்கப் பட்டதைத் தொடர்ந்து ரூ.3 கோடி மதிப்பில் புதிய மினி விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கான பணியை முதல்-அமைச்சர் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இதையடுத்து செருப்பாலூர் கல்லடிமா மூட்டில் மினி விளையாட்டரங்கம் அமையவுள்ள இடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் குத்துவிளக்கேற்றியதுடன் அந்த இடத்தில் அடிக்கல் நாட்டி முதல்- அமைச்சருக்கு நன்றி தெரிவித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    பத்மநாபபுரம் தொகு திக்குட்பட்ட கல்லடி மாமூட்டில் மினி விளை யாட்டரங்கம் அமைக்கும் பணியினை தொடங்கி வைத்த தமிழக முதல்-அமைச்சருக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும், பொதுமக்களின் சார்பிலும் நன்றி தெரி வித்துக்கொள்கி றேன். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்கனவே நாகர்கோ வில் சட்டமன்ற தொகுதியில் அண்ணா விளை யாட்டரங்கம் உள்ளது. மீதமுள்ள 5 தொகுதிகளிலும் மினி விளையாட்டரங்கங் கள் அமைய உள்ளன.

    இதில் முதற்கட்டமாக பத்மநாபபுரம் தொகு திக்குட்பட்ட குல சேகரம் கல்லடிமாமூட்டில் அமைக் கப்படுகிறது. அடுத்த கட்டமாக குளச்சல் தொகுதியில் அமைக்கப்படும். அதனை தொடர்ந்து கிள்ளியூர், விளவங்கோடு, கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளில் நிலம் தேர்வு செய்யப்பட்டு அமைக்கப்படும். குறிப் பிட்ட ஒரு இடத்தை மையமாக கொண்டு இந்த அந்த விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்படாமல் அனைத்து பகுதி மக்க ளுக்கும் பயன் கிடைக்க வேண்டுமென்பதற்காக இதுபோன்ற திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட செய்தித்தொடர்பு அலுவலர் ஜான் ஜெகத் பிரைட் வரவேற்றார். குலசேகரம் பேரூராட்சி தலைவி ஜெயந்தி ஜேம்ஸ் நன்றி கூறினார். மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜேஷ், திருவட்டார் தாசில்தார் முருகன், மாவட்ட அரசு வக்கீல் ஜான்சன், குலசேரம் பேரூராட்சி செயல் அலுவலர் எட்வின் ஜோஸ், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் ரெமோன் மனோ தங்கராஜ், குலசேகரம் பேரூராட்சி துணை தலைவர் ஜோஸ் எட்வர்ட், தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் அலாவுதீன், மாவட்ட வர்த்தகர் அணி தலைவர் ஜே.எம்.ஆர். ராஜா, கலை இலக்கிய பகுத்தறிவு அணி தலைவர் ஜெஸ்டின் பால்ராஜ், குலசேகரம் பேரூர் தி.மு.க. செயலாளர் வக்கீல் ஜெபித் ஜாஸ், வட்டார காங்கிரஸ் பொருளாளர் ஜேம்ஸ் ராஜ் மற்றும் குலசேகரம் பேரூராட்சி கவுன்சிலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • திலகவதி துப்பட்டாவால் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.
    • ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு திண்டல், வித்யா நகரை சேர்ந்தவர் திலகவதி (71). இவரது கணவர் 2 வருடங்களுக்கு முன்னர் இறந்து விட்டார். இவரது மகள் கோவையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    திலகவதி மட்டும் வித்யா நகரில் தனியாக வசித்து வந்தார். அவரை கவனித்து கொள்ளவும், வீட்டு வேலை கள் செய்யவும் காந்திமதி என்பவரை திலகவதியின் மகள் நியமித்து இருந்தார்.

    திலகவதிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று காந்திமதி ரேஷன் கடைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து பார்த்தபோது கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்துள்ளது.

    இதையடுத்து காந்திமதி ஜன்னல் வழியாக பார்த்த போது பேன் மாட்டும் கொக்கியில் திலகவதி துப்பட்டாவால் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

    அக்கம்பக்கத்தினர் உதவியுடன் உடனடியாக அவரை மீட்டு ஈரோடு அரசுத் தலைமை மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவரை பரி சோதித்த டாக்டர் வரும் வழி யிலேயே திலகவதி இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

    இது குறித்து திலகவதியின் மகள் அளித்த புகாரின் பேரில் ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு சூரம்பட்டி காந்திஜி தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (34). இவரது மனைவி நித்யா. இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. சுரேஷ் சென்ட்ரிங் வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் சுரேஷ்க்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததால் தினமும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகரா றில் ஈடுபட்டுள்ளார். இதே போல் நேற்றும் மது போதை யில் வீட்டுக்கு வந்த சுரேஷ் மனைவியையும், குழந்தை யையும் அடித்து வீட்டை வி ட்டு வெளியே துரத்தி விட்டு உள்ளே சென்று கதவை தாழ்யிட்டுகொண்டார்.

    நீண்ட நேரம் ஆகியும் கணவர் வெளியே வரா ததால் சந்தேகம் அடைந்த நித்தியா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் உள்ள அறை யில் சுரேஷ் தூக்குபோட்டு தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே சுரேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டம் அந்தி யூர் எம்.எம்.கே. தெருவை சேர்ந்தவர் தாமரை க்கண்ணன் (24). ஆக்டிங் டிரைவர் ஆக வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் தாமரை கண்ணனுக்கு வலது காலில் புண் ஏற்பட்டு கடந்த 3 மாதமாகியும் ஆராத நிலையில் மிகுந்த மன வேதனைகள் இருந்து வந்துள்ளார்.

    சிகிச்சை எடுத்தும் குணமா கவில்லை. சம்பவத்தொன்று வீட்டில் தனியாக இருந்த தாமரைக்கண்ணன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விற்பனைக்காக வைத்திருந்த 30 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • சரவணன் என்பவரை பெருந்துறை போலீசார் கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட பகுதி களில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என பங்களாபுதூர், அந்தி யூர் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்

    அப்போது தண்ணீர் பந்தல் பஸ் ஸ்டாப், அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதியின்றி மது விற்ப னை செய்து கொண்டிருந்த ஈரோடு மாவட்டம் அந்தியூர் மேற்கு தெருவை சேர்ந்த அப்புசாமி மகன் குமார் (வயது 54), கோபிசெட்டி பாளையம் கொங்கராபாளையம் பழனிச்சாமி மகன் மகேந்திரன் (35) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 30 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் பெருந்துறை சுற்றுவட்டார பகுதிகளில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்த ராம நாதபுரம் மாவட்டம் எல்லி முள்ளி பகுதியை சேர்ந்த சண்முகவேல் மகன் சரவணன் (30) என்பவரை பெருந்துறை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர் விற்பனை க்காக வைத்திருந்த குட்கா, மசாலா உள்ளிட்ட போதைப் பொருள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×