என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "3 members arrested"
- கும்பக்கரை அருவியில் பெண்களை கேலி செய்தவர்களுக்கும், வனக்காப்பாளருக்கும் இடையே மோதல் உருவானது.
- இந்த நிலையில் அவரை 3 பேரும் தாக்கும்காட்சி சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்குதொடர்ச்சி மலையடிவாரத்தில் கும்பக்கரை அருவி உள்ளது. விடுமுறை தினத்தையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர். மதுரை மாவட்டம் எழுமலையை சேர்ந்த சரவணக்குமார்(52). இவர் தனது நண்பர்கள் கந்தசாமி(51), பாலமுருகன்(44) ஆகியோருடன் கும்பக்கரை அருவிக்கு குளிக்க சென்றார்.
அப்போது அங்கு இருந்த பெண்களை கேலி செய்தனர். இதனை பெண்கள் கண்டித்ததுடன் வனக்காப்பாளர் பீமராஜிடம் புகார் அளித்தனர்.
இதுகுறித்து அவர் தட்டிகேட்டார். இதனால் ஆத்திரமடைந்த சரவணக்குமார் மற்றும் அவரது நண்பர்கள் பீமராஜை சரமாரியாக தாக்கினர். இதனால் பீமராஜூம் திரும்பி தாக்கியதால் மோதல் உருவாகியது. இதுகுறித்து பெரியகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தாக்குதலில் காயமடைந்த பீமராஜ் மற்றும் சரவணக்குமாரை மீட்டு தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து கந்தசாமி, பாலமுருகன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். வனக்காப்பாளரை தாக்கிய 3 பேரும் முன்னாள் ராணுவவீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவரை 3 பேரும் தாக்கும்காட்சி சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்