என் மலர்
நீங்கள் தேடியது "3 பேர் கைது"
- கருங்கல்பாளையம் போலீசார் கே.என்.கே. ரோடு, மூலப்பட்டறை ஆகிய பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- செந்தில்குமார் சட்டவிரோதமாக விற்பனை செய்ய 5 மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருப்பதும் தெரியவந்தது.
ஈரோடு:
ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் கே.என்.கே. ரோடு, மூலப்பட்டறை ஆகிய பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கே.என்.கே. ரோட்டில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். அவர் அதே பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (47) என்பதும், சட்டவிரோதமாக விற்பனை செய்ய 5 மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருப்பதும் தெரியவந்தது.
அதேபோல மூலப்பட்டறை பகுதியில் உள்ள பேக்கரி அருகில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த நபர் ஒருவரை பிடித்து விசாரித்ததில் அவர் மூலப்பட்டறை, காந்திபுரம் பகுதியை சேர்ந்த சங்கர் (35) என்பதும், 6 மதுபான பாட்டில்களை அதிக விலைக்கு விற்பதற்காக வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து 2 பேர் மீதும் கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 11 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
இதேபோல பெருந்துறை போலீசார் மேற்கொண்ட சோதனையில் பெருந்துறை அருகே உள்ள வாய்க்கால்மேடு பகுதியில் உள்ள டாஸ்மாக் அருகில் ஒருவர் சட்டவிரோதமாக அரசு மதுபான பாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
போலீசார் அவரை பிடித்து விசாரித்ததில் அவர் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை பகுதியை சேர்ந்த ராமலிங்கம் (37) என்பது தெரியவந்தது.
இதையடுத்து பெருந்துறை போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 5 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
- விவசாயி ஒருவர் கோத்தகிரி ரோட்டில் நடந்து சென்றார்.
- போலீசார் அந்த 2 பெண்களையும் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்
ஊட்டி,
ஊட்டி பர்ன் ஹில் பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் கோத்தகிரி ரோட்டில் நடந்து சென்றார்.அங்போது அங்கு நின்றிருந்த வாலிபர் தங்களிடம் அழகிகள் உள்ளனர். விருப்பம் இருந்தால் பணம் கொடுத்து உல்லாசம் அனுபவிக்கலாம் என்றார். இதனை கேட்டு அந்த விவசாயி அவருடன் ஒரு ஓட்டலுக்கு சென்றார். அங்கு சென்றதும் பணம் எடுத்து வருவதாக அங்கிருந்தவர்களிடம் கூறி வெளியே சென்றார். பின்னர் இதுகுறித்து அவர் ஊட்டி மத்திய போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் உடனே சம்பவ இடத்துக்கு சென்று அந்த ஓட்டலில் சோதனை செய்தனர். அதில் 2 பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த 2 பெண்களையும் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். விபசாரத்தில் ஈடுபட்ட புேராக்கர்கள் தென்காசியை சேர்ந்த சையது அலி (வயது 43), மேலூரை சேர்ந்த ரகுபதி (36), தூத்துக்குடியை சேர்ந்த அபுதாகீர் (47) ஆகியோரை கைது செய்தனர்.
- சக்திவேல் சுடுகாடு பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 9-ந் தேதிநள்ளிரவு படுகொலை செய்யப்பட்டார்.
- சக்திவேலின் கொலைக்குபிறகு மிகவும் மன உளைச்சலில் இருந்தார் பூமிகா.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி, தட்டாஞ்சாவடி காந்தி நகர் காலனியில் வசித்து வருபவர் சக்திவேல். இவர் ஆட்டோ டிரைவர். திருமணமான இவர், தட்டாஞ்சாவடி காளிகோ வில் சுடுகாடு பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 9-ந் தேதிநள்ளிரவு படுகொலை செய்யப்பட்டார். இன்ஸ்டாகிராம் காதலிபூமிகா என்பவரை பங்கு போட்டு கொள்வதில்ஆட்டோ டிரைவர்கள் சக்திவேல்சுமன்ஆகியஇருவருக்கும்இடையே மோதல்இருந்து வந்தது.சுமன் சக்திவேலை கொலை செய்ய சதி திட்டம்தீட்டி, சம்பவத்தன்று தனது கூட்டாளிகள் உதவியுடன் சக்திவேலை காளிகோவில் சுடுகாட்டுக்கு மதுபானம் அருந்த அழைத்து சென்று தீர்த்துக்கட்டியுள்ளனர்.
இந்த விஷயம் தொடர்பாகபண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டுசபியுல்லா,இன்ஸ்பெக்டர் நந்தகுமார்வழக்குப்பதிந்து சுமன், வசந்தகுமார், குணா ஆகியோரை கைது செய்தனர். இது தொடர்பாக மேலும் 3 பேரை போலீசார் வலை வீசி தேடி வந்தனர். சக்திவேலின் கொலைக்குபிறகு மிகவும் மன உளைச்சலில் இருந்த பூமிகா தனது வீட்டை விட்டு வெளியேறிஓடும் பஸ்ஸில் விஷம் குடித்து மயங்கி ய நிலையில் உயிரிழந்தார். இந்த வழக்கில்தலை மறைவாக இருந்த 3 பேரை பிடிக்க பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா தலைமையிலான போலீசார் தேடி வந்தனர். இன்று காலை களத்துமேடு மகேஷ்,மணிகண்டன், கொக்கு பாளையம்அஜீத் ஆகிய 3 பேரை அதிரடியாக கைது செய்தனர்.
- போலீசாரிடம் துப்பாக்கி காட்டி மிரட்டிய வழக்கு மேலும் ஒருவரை பிடித்து விசாரணை
- இது தொடர்பாக தெர்மல் போலீசார் கமலம் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனர்.
கடலூர்:
நெய்வேலி அருகே உள்ள தொப்புளிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கமலம் இவர் தனது வீட்டில் வேலை செய்த குத்தண்டி ராஜேஸ்வரி தம்பதியரின் 5 வயது பெண் குழந்தையை தன்னுடைய மகள் மற்றும் மகனுடன் சேர்ந்து கொலை செய்தார். இது தொடர்பாக தெர்மல் போலீசார் கமலம் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனர். இதனையடுத்து ஜாமினில் வெளிவந்த கமலம் கொலை வழக்கில் சாட்சி சொல்லாமல் இருக்க ராஜேஸ்வரி உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பணம் கொடுப்பதாக கூறியிருந்தார். பின்னர் கமலம் பணம் தராததால் சம்பவத்தன்று கமலத்தை ராஜேஸ்வரி உறவினர்கள் கொலை செய்ய முயன்றனர் அப்போது அங்கு வந்த போலீசார் அந்த கும்பலை தடுத்த போது அவர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். தப்பி ஓடியவர்களை பிடிக்க போலீசார் 2 தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த தேடுதல் வேட்டையில் நெய்வேலி மாற்று குடியிருப்பு பி2 இளங்கோவன் மனைவி சுந்தரி (வயது 33) வடலூர் அருகே கல்லுக்குழி காலணியை சேர்ந்த விஜய் (24) ஆகியோரை தெர்மல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போலீசார் பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர் இந்நிலையில் வடலூர் பகுதியைச் சேர்ந்த வீரமுத்து என்பவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்தனர். பிடிபட்ட மூன்று பேரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது.
விசாரணையில் இவர்களிடம் சமூக வலை தளங்களில் விற்பனை செய்வோர் மூலம் ஏர்கான் துப்பாக்கியை வாங்கி இருப்பது தெரியவந்தது. மேலும் சம்பவம் நடந்த முன்தினம் நள்ளிரவு அந்தப் பகுதியில் மினிலாரி ஒன்று இரும்பு பொருட்களை ஏற்றி கொண்டு வந்தது. அந்த மினி லாரியை மடக்கி துப்பாக்கியை காட்டி மிரட்டி இரும்பு பொருட்களுடன் மினி லாரியை தூக்கி சென்றதும் தெரிய வந்தது. அந்த மினி லாரியை இவர்கள் வடலூர் சந்தை பின்புறம் கொண்டு சென்று நிறுத்தி இருந்தனர். உடனே போலீசார் அங்கு சென்று பார்த்தபோது இரும்பு பொருட்கள் இல்லாமல் லாரி மட்டும் இருந்தது. இதன்பின்னர் மினி லாரியை ஓட்டி வந்த நபர் கொடுத்த புகாரின் பேரில் இதற்குப் பின்னால் சந்தேகத்தின்பேரில் 10 பேர் கொண்ட கும்பல் இருக்கக்கூடும் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் போலீசார் இதற்கு பின்னால் பலர் இருக்கக்கூடும் என்பதால் 3 நபர்களிடம் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
- 419 மது பாட்டில்கள் பறிமுதல்
- குடியரசு தினத்தையொட்டி மதுபானங்கள் விற்க தமிழக அரசு தடை விதித்து இருந்தது.
கன்னியாகுமரி:
குடியரசு தினத்தையொட்டி மதுபானங்கள் விற்க தமிழக அரசு தடை விதித்து இருந்தது.
இதையடுத்து அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டு இருந்தன. மேலும் தனியார் மதுபான கடைகளும் திறக்கப்பட வில்லை.
இதனால் குடிமகன்கள் மது வாங்க முடியாமல் தவித்தனர். இதனை பயன்படுத்தி சிலர் மதுபானங்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்றனர்.
இது பற்றி தகவல் கிடைத்ததும் குலசேகரம் போலீசார் அந்த பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் ஒரு வீட்டில் மறைத்து வைத்து விற்பனை செய்த 319 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அங்கிருந்த றாபி (வயது 46) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இதுபோல சேக்கல் பகுதியில் அனுமதியின்றி விற்பனை செய்த 55 மது பாட்டில்களை போலீசார் கைப்பற்றினர். இதனை விற்றதாக ரமேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார்.
மேலும் கல்லடிமாமூடு பகுதியில் அனுமதியின்றி மது விற்ற ராஜேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 45 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் 419 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- பெருமாள் கோவில் அருகே சூதாடி கொண்டிருந்த 3 பேர் பிடிபட்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி அருகே பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சாமல்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அதளியூர் பெருமாள் கோவில் அருகே சூதாடி கொண்டிருந்த 3 பேர் பிடிபட்டனர்.
அவர்கள் அதே பகுதியை சேர்ந்த வீரசேகர் (வயது 30), ரஞ்சிதுகுமார் (36), பிரபு (28) என்பது தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ரூ.1,950 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
- ஆறுமுகம் (வயது 28), சத்யா (32) ஆகிய 2 பேரும் சாராயம் விற்றனர்.
- போலீசார் இவர்களி டமிருந்து 30 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம்:
மரக்காணம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தீபன் தலைமையில் போலீசார் ஆய்வு செய்தனர். இதில் மாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் ஆறுமுகம் (வயது 28), சத்யா (32) ஆகிய 2 பேரும் சாராயம் விற்றனர். இவர்களை கைது செய்த போலீசார் இவர்களி டமிருந்து 30 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். அதேபோல கோட்டி க்குப்பம் மெயின் ரோட்டில் சாராயம் விற்பனை செய்து கொண்டி ருந்த குப்பு (45) கைது செய்து 15 லிட்டர் சாரா யம் பறிமுதல் செய்தனர். இந்த 3 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- சந்தனம், தேக்கு உள்ளிட்ட விலை உயர்ந்த மரங்கள் உள்ளது.
- மரங்கள் வெட்டி கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட முதுமலை புலிள் காப்பகத்தின் வெளி மண்டல பகுதியாக மசினகுடி, சிங்காரா, சீகூர் வனச்சரகங்கள் உள்ளன.
இங்கு சந்தனம், தேக்கு உள்ளிட்ட விலை உயர்ந்த மரங்கள் உள்ளது. இதுதவிர காட்டு யானைகள், புலிகள், செந்நாய்கள், கரடிகள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
இந்தநிலையில் மசினகுடி அருகே உள்ள சீகூர் வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்டது தெரிய வந்தது.
இதை தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் உத்தரவின் பேரில், துணை இயக்குனர் அருண்குமார் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து சந்தன மரங்களை வெட்டி கடத்தியவர்களை பிடிக்க நடவடிக்கை மேற்கொ ள்ளப்பட்டது.
இதையடுத்து சந்தேகத்தின் பேரில் 3 பேரை பிடித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் சந்தன மரங்களை வெட்டி கடத்தியது உறுதி செய்யப்பட்டது. மேலும் பலர் அதற்கு உடந்தையாக இருப்பது கண்டுபி டிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக தெங்குமரஹாடா பகுதியை சேர்ந்த பண்டன் (வயது 32), மசினகுடி பகுதியை சேர்ந்த பாலன், சந்திரன் ஆகிய 3 பேர் மீது சீகூர் வனச்சரகர் முரளி உள்ளிட்ட வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
தொடர்ந்து பண்டன், பாலன், சந்திரன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை கூடலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது, சந்தன மரங்கள் வெட்டி கடத்திய வழக்கில் மேலும் பலருக்கு தொடர்பு உள்ளது. இதனால் அவர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர். மசினகுடி அருகே வனப்பகுதியில் சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- 3 ஆசாமிகள் புகுந்து திருட முயன்றுள்ளது தெரியவந்தது.
- மூன்று பேரையும் பிடித்து மத்திகிரி போலீசில் ஒப்படைத்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி போலீஸ் சரகம் ஓசூர் வெங்கடேஸ்வரா லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த 13-ந்தேதி வெளியூர் சென்றிருந்தார்.
நேற்று இவரது வீட்டின் முன்பக்க கதவை உடைத்து யாரோ மர்ம நபர்கள் உள்ளே புகுந்துள்ளதாக செல்போன் மூலம் ரவிச்சந்திரனுக்கு அவரது மகள் தகவல் தெரிவித்துள்ளார்.
உடனே ரவிச்சந்திரன் புறப்பட்டு வந்து பார்த்தபோது வீட்டுக்கு 3 ஆசாமிகள் புகுந்து திருட முயன்றுள்ளது தெரியவந்தது.
இதையடுத்து வெட்டுக்குள் செல்ல முயன்ற ரவிச்சந்திரனை இரும்புகம்பியல் தாக்கி விடுவோம் அன்று அவர்கள் மிரட்டினர்.
பின்னர் அக்கம் பக்கம் உள்ள பொதுமக்கள் உதவியுடன் அந்த மூன்று பேரையும் பிடித்து மத்திகிரி போலீசில் ஒப்படைத்தனர்.
இதையடுத்து முருகன் (வயது 38), சந்தோஷ்குமார் (26), யாரப்பாஷா (27) ஆகியோரை கைது எய்தனர்.
- 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
- ரகசிய தகவல் கிடைத்தது.
கூடலூர்,
ஓவேலி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து தனிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் இப்ராகிம், முத்து முருகன், அசோக் உள்ளிட்ட போலீசார் கூடலூர், ஓவேலி பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா விற்றதாக கூடலூரை சேர்ந்த அலி(வயது 47), 1-ம் மைல் கோகோகாடு பகுதியை சேர்ந்த முகமது ரபிக்(45), ஓவேலி பேரூராட்சி சூண்டி மரப்பாலம் பகுதியை சேர்ந்த ரமேஷ்(24) ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் வைத்திருந்த சுமார் 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
- போலீசார் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர்.
- தனித்தனியாக சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட் டம் சங்கராபுரம் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்ம ஜோதி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது குளத்தூர் பகுதியை சேர்ந்த ஏழுமலை (வயது42), மூரார்பாளையத்தை சேர்ந்த கருப்பன் (50), விரியூரை சேர்ந்த ரமேஷ் (39) ஆகிய 3 பேரும் தனித்தனியாக சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 200 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.
- குந்துபையூர் தென்றல் நகரில் சிலர் சேவல் வைத்து சூதாடி கொண்டிருந்தனர்.
- இது குறித்து வெள்ளி திருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் வெள்ளிதிருப்பூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சிறப்பு உதவி சப்- இன்ஸ்பெக்டர் ஸ்ரீராமன் தலைமையில் போலீசார் வெள்ளி திருப்பூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது குந்துபையூர் தென்றல் நகரில் சிலர் சேவல் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். அந்த கும்பலை போலீசார் மடக்கி பிடிக்க முயன்ற போது அதில் 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். 3 பேர் சிக்கினர்.
போலீஸ் விசாரணையில் அவர்கள் மயிலம்பாடி பகுதியை சேர்ந்த விஜயகுமார்(28), சித்தூர் பகுதியை சேர்ந்த மோகன் பிரசாத் (28), முருகன் (30) என தெரிய வந்தது. இவர்கள் பணம் வைத்து சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
இது குறித்து வெள்ளி திருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். மேலும் போலீசார் அவர்கள் பயன்படுத்திய 3 சேவலையும் பறிமுதல் செய்து தப்பி ஓடியவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.