search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2nd ODI"

    • டாசில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
    • வெஸ்ட் இண்டீஸ் 175 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

    வெஸ்ட் இண்டீஸ்- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மெல்போர்னில் நடந்த முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி சிட்னியில் இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 258 ரன்கள் அடித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சீன் அப்போட் 69 ரன்கள் அடித்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக குடகேஷ் மோட்டி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    இதனையடுத்து 259 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலியாவின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விரைவில் ஆட்டமிழந்தனர். 43.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த வெஸ்ட் இண்டீஸ் 175 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

    இதன் மூலம், ஆஸ்திரேலியா 83 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக கீசி கார்ட்டி 40 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக ஜோஷ் ஹெசில்வுட் மற்றும் சீன் அப்போட் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

    • வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது.
    • அதிகபட்சமாக ஷாய் ஹோப் அரை சதம் அடித்து 63 ரன்களை எடுத்தார்.

    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 3 ஒருநாள் போட்டிகளில் முதல் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இரண்டாவது போட்டி இன்று பிரிட்ஜ்டவுன் நகரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் விராட் கோலி, கேப்டன் ரோகித் சர்மா ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

    அவர்களுக்குப் பதில் சஞ்சு சாம்சன், அக்சர் பட்டேல் ஆகியோர் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில், இந்திய அணி முதலில் பேட்டிங்கை தொடங்கியது. இதில், துவக்க வீரர்களாக இஷான் கிஷன், ஷுப்மன் கில் களமிறங்கினர்.

    இதில், அதிகபட்சமாக இஷான் கிஷன்- 55 (55), ஷூப்மன் கில்- 34(49) ரன்கள் எடுத்தனர்.

    தொடர்ந்து, சூர்யகுமாா் யாதவ் 24 ரன்களும், ஷர்துல் தகூர் 16 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 10 ரன்களும், சஞ்சு சாம்சான் 9 ரன்களும், குல்தீப் யாதவ் 8 ரன்களும், ஹர்திக் பாண்டியா 7 ரன்களும், முகேஷ் குமார் 6 ரன்களும், அக்சர் பட்டேல் ஒரு ரன்னும் எடுத்தனர். உம்ரான் மாலிக் ரன் எடுக்காமல் அவுட்டானார்.

    இந்நிலையில், 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன்கள் சேர்த்தது.

    இதன்மூலம், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது.

    இதைதொடர்ந்து, வெற்றி இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி தனது ஆட்டத்தை தொடங்கியது.

    இதில், அதிகபட்சமாக ஷாய் ஹோப் அரை சதம் அடித்து 63 ரன்களை எடுத்தார். தொடர்ந்து, கியாஸி கார்டி 48 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    மேலும், கெயில் மேயர்ஸ் 36 ரன்களும், பிரான்டன் கிங் 15 ரன்களும், ஷம்ரான் ஹெட்மெயர் 9 ரன்களும், அலிக் 6 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி வெகு விரைவாக தனது வெற்றி இலக்கை எட்டி வெற்றி வாகையை சூடியது.

    வெஸ்ட் இண்டீஸ் அணி 36.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்களை எடுத்து அபாரமாக வெற்றிப்பெற்றுள்ளது. 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் வெற்றிப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய அணி 10 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன்கள் சேர்த்தது.
    • அதிகபட்சமாக இஷான் கிஷன்- 55 (55), ஷூப்மன் கில்- 34(49) ரன்கள் எடுத்தனர்.

    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 3 ஒருநாள் போட்டிகளில் முதல் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இரண்டாவது போட்டி இன்று பிரிட்ஜ்டவுன் நகரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது.

    இந்திய அணியில் விராட் கோலி, கேப்டன் ரோகித் சர்மா ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்குப் பதில் சஞ்சு சாம்சன், அக்சர் பட்டேல் ஆகியோர் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளனர்.

    இந்நிலையில், இந்திய அணி முதலில் பேட்டிங்கை தொடங்கியது. இதில், துவக்க வீரர்களாக இஷான் கிஷன், ஷுப்மன் கில் களமிறங்கினர்.

    இதில், அதிகபட்சமாக இஷான் கிஷன்- 55 (55), ஷூப்மன் கில்- 34(49) ரன்கள் எடுத்தனர்.

    தொடர்ந்து, சூர்யகுமாா் யாதவ் 24 ரன்களும், ஷர்துல் தகூர் 16 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 10 ரன்களும், சஞ்சு சாம்சான் 9 ரன்களும், குல்தீப் யாதவ் 8 ரன்களும், ஹர்திக் பாண்டியா 7 ரன்களும், முகேஷ் குமார் 6 ரன்களும், அக்சர் பட்டேல் ஒரு ரன்னும் எடுத்தனர். உம்ரான் மாலிக் ரன் எடுக்காமல் அவுட்டானார்.

    இந்நிலையில், 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன்கள் சேர்த்தது.

    இதன்மூலம், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.

    இதைதொடர்ந்து, வெற்றி இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி தனது ஆட்டத்தை தொடங்கியுள்ளது.

    • முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது.
    • இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.

    மிர்புர்:

    வங்காளதேசம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இரு அணிகள் இடையே தற்போது ஒருநாள் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. மிர்புரில் நடந்த முதல் போட்டியில் வங்காளதேசம் வெற்றி பெற்றது.

    இந்நிலையில் இன்று 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மிர்புர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களம் இறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர் அனாமுல் ஹக் 11 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    இந்திய வீரர் சிராஜ் அவரது விக்கெட்டை கைப்பற்றினார். 5 ஓவர்கள் முடிவில் அந்த அணி 1 விக்கெட் இழப்பிற்கு 23 ரன்கள் எடுத்திருந்தது. இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய வீரர்கள் விளையாடி வருகின்றனர். 

    • முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றிருந்தது.
    • தலா ஒரு வெற்றி மூலம் ஒருநாள் கிரிக்கெட் தொடர் சம நிலையில் உள்ளது.

    மான்செஸ்டர்:

    இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், டி20 தொடர் மற்றும் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. தற்போது இரு அணிகளுக்கும் இடையே ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது.

    முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றிருந்து. இந்நிலையில் 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. மழை காரணமாக இந்த போட்டி 29 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

    முதலில் பேட் செய்த இங்கிலாந்து 28.1 ஓவர்களில் 201 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. அதிபட்சமாக அந்த அணி வீரர் லிவிங்ஸ்டோன் 38 ரன்கள் அடித்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் டுவைன் பிரிட்டோரியஸ் நான்கு விக்கெட்களை கைப்பற்றினார்.

    பின்னர் விளையாடிய தென்ஆப்பிரிக்க அணி 20.4 ஓவர்கள் முடிவில் 83 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியின் ஜானிமேன் மலான், வான்டெர் டஸன், மார்க்ராம் ஆகிய 3 பேரும் டக்-அவுட் ஆனார்கள்.

    இதனால் 118 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இங்கிலாந்து தரப்பில் அடில் ரஷித் 3 விக்கெட்டும், மொயீன் அலி, ரீஸ் டாப்லே தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றி மூலம் இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளது.

    • முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 275 ரன்கள் எடுத்திருந்தது.
    • பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் 77 ரன்கள் அடித்தார்.

    முல்டன்:

    பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி அந்நாட்டு அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியை பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

    இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி முல்டன் நகரில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் படி முதலில் களமிறங்கிய அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரரான இமாம் உல் ஹாக் 72 ரன்கள் எடுத்தார். அதிகபட்சமாக கேப்டன் பாபர் ஆசம் 77 ரன்கள் அடித்தார்.

    பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 275 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அகில் ஹுசேன் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதையடுத்து 276 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பின்னர் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 32.2 ஓவர் முடிவில் 155 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    அதிகபட்சமாக அந்த அணி வீரர் ஷமர் ப்ரூக்ஸ் 42 ரன்கள் அடித்தார். கைல் மேயர்ஸ் 33 ரன்களும், கேப்டன் நிகோலஸ் பூரன் 25 ரன்னும் எடுத்தனர்.

    பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக முகமது நவாஸ் 4 விக்கெட்களும், வாசிம் 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். இதனையடுத்து பாகிஸ்தான் 120 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. #PAKvAUS
    சார்ஜா:

    ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகள் மோதிய 2-வது ஒருநாள் போட்டி சார்ஜாவில் நேற்று பகல்- இரவாக நடந்தது.

    முதலில் விளையாடிய பாகிஸ்தான் 7 விக்கெட் இழப்புக்கு 284 ரன் குவித்தது. முகமது ரிஸ்வான் சதம் அடித்தார். அவர் 126 பந்தில் 115 ரன்னும் (11 பவுண்டரி) கேப்டன் சோயிப் மாலிக் 60 ரன்னும் எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா 47.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 285 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் ஆரோன் பிஞ்ச் மீண்டும் சதம் அடித்தார். அவர் 143 பந்தில் 153 ரன்னும் (11 பவுண்டரி, 6 சிக்சர்), உஸ்மான் கவாஜா 88 ரன்னும் எடுத்தனர். இருவரும் தொடக்க விக்கெட்டுக்கு 209 ரன் எடுத்தனர். ஆரோன் பிஞ்ச் முதல் ஆட்டத்தில் 116 ரன்களை எடுத்து இருந்தார்.



    இந்த வெற்றி மூலம் ஆஸ்திரேலியா 5 போட்டிக் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது.

    முதல் ஆட்டத்திலும் 8 விக்கெட்டில் வெற்றி பெற்று இருந்தது. 3-வது போட்டி வருகிற 27-ந்தேதி அபுதாபியில் நடக்கிறது. #PAKvAUS
    தம்புல்லாவில் நடைபெற்று வரும் 2-வது ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றது. #ENGvIND
    தம்புல்லா:

    இலங்கைக்கு சென்றுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. 2-வது ஒரு நாள் போட்டி தம்புல்லாவில் நேற்று நடந்தது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த இலங்கை அணி 8 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்தது. விக்கெட் கீப்பர் டிக்வெல்லா (69 ரன்), கேப்டன் மேத்யூஸ் (79 ரன்) அரைசதம் அடித்தனர். தென்ஆப்பிரிக்க தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் நிகிடி, பெலக்வாயோ தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.



    தொடர்ந்து ஆடிய தென்ஆப்பிரிக்க அணி 42.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 246 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குயின்டான் டி காக் 87 ரன்களும் (78 பந்து, 13 பவுண்டரி, ஒரு சிக்சர்), கேப்டன் பிளிஸ்சிஸ் 49 ரன்களும், அம்லா 43 ரன்களும் விளாசினர்.

    வெற்றியின் மூலம் தென்ஆப்பிரிக்க அணி தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 3-வது ஆட்டம் வருகிற 5-ந்தேதி கண்டியில் நடக்கிறது.  #SriLanka #SouthAfrica #2ndODI  #கிரிக்கெட்  #தென்ஆப்பிரிக்கா #இலங்கை 
    ×