search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "207 ஜோடிகள் திருமணம்"

    கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள குருவாயூர் கோவிலில் நேற்று இதுவரை இல்லாத அளவு ஒரே நாளில் 207 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்று உள்ளது. #Guruvayurtemple
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள குருவாயூரில் பிரசித்திபெற்ற ஸ்ரீகிருஷ்ண சாமி கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் திருமணம் செய்வது மிகவும் சிறப்பு பெற்றதாக கருதப்படுகிறது. அதே போல குழந்தைகளுக்கு முதல் சோறு ஊட்டுதல் நிகழ்ச்சியும் குருவாயூர் கோவிலில் அதிக அளவு நடைபெறும்.

    கேரளா மட்டுமின்றி வெளி மாநிலங்களை சேர்ந்தவர்களும் குருவாயூர் கோவிலில் வந்து திருமணம் செய்வது, குழந்தைகளுக்கு முதல் சோறு ஊட்டுவது போன்றவற்றில் அதிக ஆர்வத்துடன் ஈடுபடுவது வழக்கம்.

    இந்த நிலையில் நேற்று குருவாயூர் கோவிலில் இதுவரை இல்லாத அளவு ஒரே நாளில் 207 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்று உள்ளது.

    தை மாத வளர்பிறையில் வரும் கடைசி முகூர்த்தம் என்பதால் இந்த அளவுக்கு திருமணம் அங்கு நடைபெற்று உள்ளது. முகூர்த்த நேரமான காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை 3 மணி நேரத்தில் 207 ஜோடிகளும் மாலை மாற்றி தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர்.

    இதன் காரணமாக திருமண வீட்டாரும், பக்தர்களும் திரண்டதால் குருவாயூர் கோவிலில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாக காணப்பட்டது.

    அதேபோல நேற்று ஒரே நாளில் 851 குழந்தைகளுக்கு முதல் சோறு ஊட்டுதல் நிகழ்ச்சியும் குருவாயூர் கோவிலில் நடந்தது. #Guruvayurtemple
    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான 207 வழக்குகளின் ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தனர். #Thoothukudifiring
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் 22-ந்தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்தில் துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் இறந்தனர். இது தொடர்பாக 249 வழக்குகளை போலீசார் பதிவு செய்தனர். இதில் 5 வழக்குகள் மட்டும் சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. பின்னர் ஐகோர்ட்டு உத்தரவுபடி மொத்தம் 207 வழக்குகளை ஒரே வழக்காக மாற்றி சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வந்தனர்.

    இந்நிலையில் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி கடந்த ஆகஸ்டு மாதம் 14-ந்தேதி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஏற்கனவே உள்ள 5 வழக்கு தொடர்பாக திரட்டிய ஆவணங்களை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தனர். அதன்பேரில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.

    இதைத்தொடர்ந்து நேற்று 207 வழக்குகளின் ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தனர். இந்த வழக்கு ஆவணங்களை சி.பி.ஐ. அதிகாரிகள் சரிபார்த்து வருகின்றனர். #Thoothukudifiring
    ×