search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2019 ஹோன்டா சி.பி.150ஆர் ஸ்டிரீட்ஸ்டர்"

    ஹோன்டா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2019 ஹோன்டா சி.பி.150ஆர் ஸ்டிரீட்ஸ்டர் மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #Honda



    ஹோன்டா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சி.பி.150ஆர் ஸ்டிரீட்ஸ்டர் மோட்டார்சைக்கிள் மாடல் தாய்லாந்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தாய்லாந்தில் இதன் விலை 99,800 பட் (இந்திய மதிப்பில் ரூ.2.16 லட்சம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    புதிய 2019 சி.பி.150ஆர் ஸ்டிரீட்ஸ்டர் மோட்டார்சைக்கிள் புதிய பெயின்ட் ஸ்கீம் மற்றும் பிரேக் கேலிப்பர்களில் ரெட் நிற டிடெயிலங் செய்யப்பட்டுள்ளது. சி.பி.300ஆர் மாடலை போன்றே புதிய சி.பி.150ஆர் மாடலும் நியூ-ரெட்ரோ ஸ்டைலிங் செய்யப்பட்டிருக்கிறது. ஹோன்டா சி.பி.150ஆர் மோட்டார்சைக்கிள் முன்னதாக 2017 பேங்காக் சர்வதேச மோட்டார் விழாவில் கான்செப்ட் வடிவில் அறிமுகம் செய்யப்பட்டது. 



    சி.பி.150ஆர் மோட்டார்தைக்கிளில் 149சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகபட்சம் 20 பி.ஹெச்.பி. திறன் வழங்கும் என்றும் இத்துடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படலாம் என தெரிகிறது. ஹோன்டா சி.பி.150ஆர் மாடலின் முன்புறம் 41எம்.எம். அப்சைடு-டவுன் ஃபோர்க், பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டிருக்கிறது. 

    பிரேக்கிங் அம்சங்களை பொருத்தவரை முன்புறம் 296 எம்.எம். மற்றும் பின்புறம் 220 எம்.எம். டிஸ்க் பிரேக்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுடன் டூயல்-சேனல் ஏ.பி.எஸ். ஸ்டேன்டர்டு வசதியாக வழங்கப்படுகிறது. இத்துடன் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது.

    சமீபத்தில் ஹோன்டா சி.பி.300ஆர் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் இதன் விலை ரூ.2.41 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் இந்தியாவில் சி.கே.டி. முறையில் இறக்குமதி செய்யப்படுகிறது.
    ஏ.பி.எஸ். வசதி கொண்ட 2019 ஹோன்டா சி.பி. யுனிகான் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #CBUnicorn150ABS



    ஹோன்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் சி.பி. யுனிகான் 150 மோட்டார்சைக்கிளை ஏ.பி.எஸ். வசதியுடன் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 

    புதிய சி.பி. யுனிகான் 150 ஏ.பி.எஸ். விலை ரூ.78,815 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விநியோகம் விரைவில் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. யுனிகான் ஏ.பி.எஸ். வேரியண்ட் விலை ஸ்டான்டர்டு மாடலை விட ரூ.6,500 வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    ஹோன்டா யுனிகான் 150 மாடலில் சிங்கிள் சேனல் ஏ.பி.எஸ். வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்திய ஆட்டோமொபைல் சந்தையின் 150 சிசி பிரிவில் ஹோன்டா சி.பி. யுனிகான் பிரபல மோட்டார்சைக்கிளாக இருக்கிறது. எளிய வடிவமைப்பு கொண்டிருக்கும் யுனிகான் விற்பனை நிறுத்தப்பட்டு யுனிகான் 160 வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டது. 



    எனினும், அதிகளவு பிரபலமாக இருந்ததோடு, தட்டுப்பாடு ஏற்பட்டதால் மீண்டும் விற்பனைக்கு அறிவிக்கப்பட்டது. தோற்றத்தின் படி ஏ.பி.எஸ். வேரியண்ட்டில் சிறிய ஏ.பி.எஸ். ஸ்டிக்கர்கள் முன்பக்க மட்கார்டில் ஒட்டப்பட்டுள்ளது. இதுதவிர மோட்டார்சைக்கிளில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.

    இந்திய சந்தையில் ஹோன்டா யுனிகான் தொடர்ந்து கணிசமான விற்பனையை பதிவு செய்து வருகிறது. புதிய ஏ.பி.எஸ். வேரியண்ட் சில்வர், பிளாக் மற்றும் ரெட் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது.

    ஹோன்டா சி.பி. யுனிகான் ஏ.பி.எஸ். மோட்டார்சைக்கிளில் 150சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 12.73 பி.ஹெச்.பி. பவர், 12.8 என்.எம். டார்க் மற்றும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் வருகிறது. இத்துடன் பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன் மற்றும் முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க் கொண்டிருக்கிறது.

    அதிகளவு பிரபலமாக இருப்பதால் ஏப்ரல் 1, 2019 வரை ஏ.பி.எஸ். இல்லாத மாடல் ஏ.பி.எஸ். மாடலுடன் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ×