search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2014 வாக்குறுதி"

    2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளுக்கு இந்த தேர்தலில் பாஜக பதில் சொல்லியாக வேண்டும். மே 23-ம் தேதி மக்களின் ‘மன் கி பாத்’ வெளியாகிவிடும் என சிவசேனா குறிப்பிட்டுள்ளது. #2014pollpromises #ShivSena
    மும்பை:

    வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள சிவசேனா, அவ்வப்போது பாஜக மற்றும் பிரதமர் மோடிக்கு எதிரான சில கருத்துகளையும் வெளியிட்டு வருகிறது.

    அவ்வகையில், சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘சாமனா’வில் இன்று ஒரு தலையங்க கட்டுரை வெளியாகியுள்ளது.

    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடு தொடர்பாக நம் நாட்டு மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மற்ற பல நாடுகளின் தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பயன்பாடு முற்றிலுமாக ஒழிக்கப்பட்ட நிலையில் நாம் ஏன் இவற்றை இன்னும் நம்பிக் கொண்டிருக்க வேண்டும்? என அந்த கட்டுரையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.  



    காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டுவோம். அயோத்தியில் ராமர் கோவிலை கட்டுவோம் என்றெல்லாம் 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின்போது பாஜக வாக்குறுதி அளித்திருந்தது.

    (இதில் எதுவும் நிறைவேற்றப்படாததால்) இந்த தேர்தலில் மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லியாக வேண்டும். மக்களை நீண்டகாலத்துக்கு முட்டாள்களாக்க முடியாது என்பதை வரலாறு நமக்கு தெளிவுப்படுத்தி உள்ளது.

    மக்கள் தங்களிடம் உள்ள கேள்விகளுக்கு வாக்குமுறையின் மூலம் பதிலும் வைத்திருக்கிறார்கள். வரும் மே மாதம் 23-ம் தேதி மக்களின் பதில்கள் ‘மன் கி பாத்’ ஆக வெளியாகிவிடும் என்றும் அந்த கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. #2014pollpromises #ShivSena
    மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் மூலமாக 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தில்லுமுல்லு செய்யப்பட்டதாக மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களை வடிவமைத்த சையது சுஜா என்ற இணைய நிபுணர் தெரிவித்துள்ளார்.
    லண்டன்:

    கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று நரேந்திர மோடி பிரதமர் ஆனார். இந்நிலையில், அந்த தேர்தலில் தில்லுமுல்லு செய்யப்பட்டதாக மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களை வடிவமைத்த சையது சுஜா என்ற இணைய நிபுணர் தெரிவித்துள்ளார்.

    அவர் லண்டனில் இருந்து ‘ஸ்கைப்’ மூலமாக இந்திய பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-

    நான் 2009-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை, பொதுத்துறை நிறுவனமான இந்திய மின்னணு கழகத்தில் பணியாற்றினேன். 2014-ம் ஆண்டு தேர்தலில் பயன்படுத்தப்பட்ட ஓட்டுப்பதிவு எந்திரங்களை வடிவமைத்த குழுவில் நானும் இருந்தேன். அப்போது, அந்த எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியுமா? என்றும், எப்படி செய்யலாம்? என்றும் கண்டறியுமாறு எங்களை மின்னணு கழகம் கேட்டுக்கொண்டது. அதன்படி, அந்த தேர்தலில் தில்லுமுல்லு நடந்தது.

    இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட பா.ஜனதா மூத்த தலைவர் கோபிநாத் முண்டே, சாலை விபத்து என்ற பெயரில் கொல்லப்பட்டார். அதை ‘கொலை’ என்று வழக்கு பதிய முயன்ற என்.ஐ.ஏ. அதிகாரியும் கொல்லப்பட்டார். என் குழுவினரும் கொல்லப்பட்டதால், நான் பயந்துபோய் நாட்டை விட்டு வெளியேறி விட்டேன்.

    பா.ஜனதா மட்டுமின்றி, காங்கிரஸ், சமாஜ்வாடி போன்ற கட்சிகளும் தில்லுமுல்லுவில் ஈடுபட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே, தேர்தல் தில்லுமுல்லு விவகாரத்தை தேர்தல் கமிஷனின் கவனத்துக்கு எடுத்துச் செல்வோம் என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

    அதே சமயத்தில், ஓட்டுப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது என்று தேர்தல் கமிஷன் உறுதிபட தெரிவித்துள்ளது.
    நிக் லயான் இயக்கத்தில் ட்ரவர் டோனோவன் - ம்யா - லிண்டா ஹேமில்டன் நடிப்பில் வெளியாகி இருக்கும் `பெர்முடா' படத்தின் விமர்சனம். #2014RudramReview #BermudaTentaclesReview #TrevorDonovan #LindaHamilton
    அமெரிக்க அதிபர் செல்லும் விமானம் கடலுக்கு மேல் செல்லும் போது பருவநிலை மாற்றம் காரணமாக விபத்தில் சிக்குகிறது. இதையடுத்து விமானத்தில் இருக்கும் பாதுகாப்பு பெட்டகம் மூலம் அதிபரை மட்டும் தப்பிக்க வைக்கின்றனர். அந்த பெட்டகம் நேராக கடலில் சென்று விழுகிறது. இந்த தகவல் அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு தெரிவிக்கப்பட்டு அதிபரை தேடும் பணி தீவிரப்படுத்தப்படுகிறது.

    அமெரிக்க கப்பல் படையின் அட்மிரல் லிண்டா ஹேமில்டன். அவரது அறிவுறுத்தலின் பேரில் நாயகன் ட்ரவர் டோனாவன் தலையிலான குழு அதிபரை காப்பாற்ற கடலுக்கு அடியில் செல்ல தயாராகிறது. இந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் வித்தாசமான ஜந்து போன்ற வால்கள் மனிதர்கள் இருக்கும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துகிறது.



    இதற்கிடையே கடலுக்கிடையில் நரகம் போன்ற ஒரு இடத்தில் இருந்து அதிபரை காப்பாற்றி கூட்டிவருகின்றனர். இதில் ட்ரவர் டோனாவன் குழுவினர் உயிர்தியாகம் செய்கின்றனர்.

    அதிபரை அழைத்துக் கொண்டு கப்பல்தளத்திற்கு வருவதற்குள் அமெரிக்க கப்பல் படையில் பாதி அழிந்துவிடுகிறது. மேலும் தாக்குதல் நடத்துவது மிருகமா அல்லது வேறு எதுவுமா என்று தெரியாமல் மொத்த படையும் தவித்து வர, அந்த ராட்சத மிருகம் முழுவதும் கடலினுள் இருந்து மேலெழுகிறது.



    அந்த மிருகத்தை அழிக்க ட்ரவர் ஒரு ஹெலிகாப்டரில் செல்கிறார். இதற்கிடையே ட்ரவருக்கும், ம்யாவுக்கும் இடையே காதல் ஏற்படுகிறது.

    கடைசியில், ட்ரவர் அந்த மிருகத்தை அழித்தாரா? ம்யாவுடன் இணைந்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    ட்ரவர் டோனோவன் கதாபாத்திரம் ஹீரோயிசம் காட்டும்படியாக அமைந்திருக்கிறது. ஹிரோ என்பதால் அவரால் எதையும் செய்ய முடியும் என்ற தோற்றத்தை உருவாக்குகிறது. ம்யா பொறுப்புடன் கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். லிண்டா ஹேமில்டன் அட்மிரல் கதாபாத்திரத்தற்கு கச்சிதமாக பொறுந்தியிருக்கிறார். மற்ற கதாபாத்திரங்களும் படத்திற்கு வலுசேர்த்திருக்கின்றனர்.



    நிக் லயான் இயக்கத்தில் இதுஒரு புதுமையான முயற்சி என்றே கூறலாம். படத்தில் முக்கிய கதாபாத்திரங்கள் மற்றும் ஜந்து போன்ற தோற்றத்தை வைத்தே படத்தை முடித்துவிட்டார். மற்றவர்களுக்கு சொல்லும்படியான கதாபாத்திரம் எதுவும் இல்லை. திரைக்கதையில் விறுவிறுப்பு இருந்தாலும், ஜந்து போன்ற ஒன்று அங்கே எப்படி வந்தது. அது எப்படி செயல்படுகிறது என்பது போன்றவை ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை.

    கிறிஸ் ரிடென்ஹரின் இசையில் பின்னணி இசை படத்திற்கு படத்திற்கு பலம் தான். அலெக்சாண்டர் எல்லனின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன. 

    மொத்தத்தில் `பெர்முடா' த்ரில் பயணம். #BermudaTentaclesReview #TrevorDonovan #LindaHamilton

    ×