search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 Youngman"

    • நண்பர்களான முகமது உஸ்மானி, முகமது நசீர் ஆகியோர் இடைகால்-அம்பை சாலையில் நின்று பேசிக்கொண்டிருந்தனர்.
    • அக்கம்பக்கத்தினர் வெட்டுப்பட்ட 2 பேரையும் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    நெல்லை:

    முக்கூடலை அடுத்த பள்ளக்கால் புதுக்குடி பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் பைசல். இவரும், இவரது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த முகமது உஸ்மானி(19), முகமது நசீர்(16) ஆகியோர் நேற்றிரவு இடைகால்-அம்பை சாலையில் நின்று பேசிக்கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் ஒன்று பைசல் மீது லேசாக உரசிவிட்டு நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் பைசல் மற்றும் அவர்களது நண்பர்கள் மோட்டார் சைக்கிளை எடுத்து கொண்டு காரை பின்தொடர்ந்துள்ளனர்.

    அம்பை அருகே கோவில்குளத்தில் வைத்து காரை வழிமறித்து 3 பேரும் கார் டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த கார் டிரைவர் தனது காரில் வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.

    இதில் முகமது உஸ்மானிக்கு தலையில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. முகமது நசீருக்கு இடது கையில் பலத்த வெட்டு விழுந்தது.

    உடனே அக்கம்பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மெடிக்கல் வைத்ததில் பாலசுப்பிரமணியனுக்கு கடன் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
    • விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்த சுப ஆனந்த் நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    நெல்லை:

    களக்காடு அருகே உள்ள படலையர்குளம் அம்மன் கோவில் நடு தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 35). இவருக்கு வைஷ்ணவி என்ற மனைவியும், 4 வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. வைஷ்ணவி மருந்தாளுனருக்கு படித்துள்ளார். இதனால் அவரது கிராமத்தில் மெடிக்கல் வைத்து நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பாலசுப்பிரமணியம் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பாலசுப்பிரமணியன் உயிரிழந்தார்.

    இது தொடர்பாக களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மெடிக்கல் வைத்ததில் பாலசுப்பிரமணியனுக்கு கடன் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.அதனை திருப்பி செலுத்த முடியாமல் அவர் சிரமப்பட்டு வந்துள்ளார். இதன் காரணமாக அவர் தற்கொலை செய்தாரா?அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    பழவூர் அருகே உள்ள வண்ணார் குளம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் சுப ஆனந்த் (வயது 20). இவர் கேட்டரிங் முடித்துவிட்டு சென்னையில் வேலை செய்து வந்தார்.

    சமீபத்தில் விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்த சுப ஆனந்த் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தகவல் அறிந்த பழவூர் போலீசார் அங்கு விரைந்து சென்று சுப ஆனந்த் உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×