search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 people"

    • சொக்க நாச்சி அம்மன் கோவிலில் கதவின் பூட்டு உடைக்க ப்பட்டு பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் கொள்ளை யடிக்கப்பட்டது.
    • இதை பற்றி அறிந்த அந்த பகுதி பொதுமக்கள் கோவிலுக்கு வந்து பார்த்தனர்.

    பவானி:

    பவானி அருகே உள்ள அம்மாபேட்ைட அடுத்த சித்தார் கேசரிமங்கலம் கொம்புத்தோட்டம் பகுதியில் உள்ள சொக்க நாச்சி அம்மன் கோவிலில் கதவின் பூட்டு உடைக்க ப்பட்டு பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் கொள்ளை யடிக்கப்பட்டது.

    இதை பற்றி அறிந்த அந்த பகுதி பொதுமக்கள் கோவிலுக்கு வந்து பார்த்தனர். அப்போது அருகே உள்ள ரைஸ்மில் பகுதியில் 2 பேர் சாக்கு மூட்டையில் பொரு ட்களை கட்டி கொண்டு இருந்தனர்.

    இதனைத் தொடர்ந்து மக்கள் அவர்களிடம் இருந்த சாக்கு மூட்டையை சோத னை செய்தனர். அதில் சாமி கழுத்தில் அணிந்திருந்த 2 கிராம் தங்கத் தாலி, குத்து விளக்கு 4, செம்பு குடம் 1, சொம்பு 1 உள்பட பல்வேறு பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. விசாரணை யில் இந்த பொருட்கள் சொக்கநாச்சி அம்மன் கோவிலில் திருடப்பட்டது தெரிய வந்தது.

    இதனைத் தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் பவானி போலீசாரிடம் பொது மக்கள் ஒப்படை த்தனர். போலீசாரின் விசார ணையில் அவர்கள் அம்மா பேட்டை அருகே உள்ள குறிச்சி முனியப்பன் கோவில் பகுதியை சேர்ந்த ரவி விஜய் (42) மற்றும் குறிச்சி சமத்துவபுரம் பகுதி யை சேர்ந்த வேல்முருகன் (45) என்பது தெரியவந்தது.

    இதை தொடர்ந்து அவர்க ளிடம் இருந்து கோவிலில் திருடப்பட்ட பொருட்கள் அனைத்தும் மீட்கப்பட்டது.

    இது குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் 2 பேரை யும் கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் அவர்கள் 2 பேரையும் பவானி கோர்ட்டில் ஆஜர் படுத்தி பவானி கிளை சிறையில் அடைத்தனர்.

    • சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்
    • திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் பழனி என்கிற பழனியாண்டி சின்னபூசாரி (வயது 65). இவர் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கீரனூர் அனைத்து மகளிர் போலீசார் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். இதை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே பரிந்துரையின் பேரில், மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, பழனியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    இதேபோல் அறந்தாங்கி இந்திரா நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் சரவணன் (46). இவர் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அறந்தாங்கி அனைத்து மகளிர் போலீசார் அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். இதை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே பரிந்துரையின் பேரில், மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, சரவணனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து சரவணனிடம் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான சான்றிதழை போலீசார் காண்பித்து அவரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

    • வனச்சரகர் தினேஷ் தலைமையில் வன பகுதியில் சென்று வனத்துறையினர் ஆய்வு மேற்கொ ண்டனர்.
    • வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்த குற்றத்திற்காக 2பேருக்கு 45 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வனகோட்டத்திக்கு உட்பட்ட கேர்மாளம் வனச்சரகத்தில் ஏராளமான வனவிலங்கு வசித்து வருகின்றன. வன விலங்குகள் அவ்வப்போது விவசாய நிலத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகிறது.

    இந்த நிலையில் கோட்டமாளம் கிராமத்தைச் சேர்ந்த திம்மையன் (55) என்பவரை மாடு மேய்த்துக் கொண்டிருந்த போது கரடி தாக்கியதாக கூறி அதே பகுதியை சேர்ந்த நாராயணன் என்பவர் வனச்சரக அலுவகத்திக்கு நேரில் வந்து தகவல் தெரிவித்தார்.

    அதைத் தொடர்ந்து வனச்சரகர் தினேஷ் தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்று வனத்து றையினர் ஆய்வு மேற்கொ ண்டனர். ஆய்வில் மாடு மேய்த்த திம்மையன் என்பவரை கரடி தாக்கவில்லை என்பது உறுதியானது.

    இதையடுத்து திம்மையன், நாராயணன் ஆகிய 2 பேரும் வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்த குற்றத்திற்காக 45 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. 

    • வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொணடார்.
    • இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு எல்லீஸ்பேட்டை ஏசுநாதர் கோவில் வீதியை சேர்ந்தவர் சாமிநாதன் (58). இவரது மனைவி எலிசபத் (52). இவர்களுக்கு திருமணமாகி 30 வருடம் ஆகிறது. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

    இந்நிலையில் கணவன்- மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. இதேப்போல் சம்பவத்தன்றும் சாமிநா தனுக்கும், எலிசபத்துக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதில் ஆத்திரமடைந்த எலிசபெத் இனிமேல் நான் உங்களுடன் வாழ மாட்டேன் என்று கூறி தூங்க சென்று விட்டார். இந்நிலையில் சம்பவத்தன்று காலை சாமிநாதன் வாந்தி எடுத்துள்ளார். இதுகுறித்து எலிசபத் கேட்டபோது வீட்டை சுத்தம் செய்ய வைத்திருந்த டெட்டாலை எடுத்து குடித்து விட்டதாக சாமிநாதன் கூறினார்.

    இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த எலிசபத் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சாமிநாதனை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பின்னர் சாமிநாதன் மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சாமிநாதன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து காஞ்சி கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம் மாவட்டம் மேட்டூர் பி.என்.பட்டி, சின்னகவுர் பகுதியை சேர்ந்தவர் சிவன் (54). கூலித்தொழிலாளி. இவரது மகன் ஜெயக்குமார். ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருணகிரிநாதர் தெருவில் வசித்து வருகிறார். சிவன் கடந்த 2 வருடங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் சிவன் சென்னிமலையில் உள்ள தனது மகன் வீட்டிற்கு கடந்த 9-ந் தேதி வந்து தங்கி இருந்தார். சம்பவத்தன்று மீண்டும் வயிற்று வலி அதிகமாக இருந்ததால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சிவன் மதுவில் விஷம் கலந்து குடித்து உள்ளார்.

    போலீசார் விசாரணை

    இது குறித்து அவர் தனது மகனிடம் கூறினார். இதனால் அதிர்ச்சடைந்த ஜெயக்குமார் தந்தையை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தார். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சிவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டி.என்.பாளையம் அருகே சந்தன மரம் வெட்டி கடத்த முயன்ற சிறுவன் உள்பட 2 பேர் கைது 4 பேர் கும்பல் தப்பி ஓடினர்.
    • தப்பியோடிய 4-நபர்களும் பிடிபட்டால், சட்ட விரோதமாக சந்தன மரங்களை கடத்தி யாருக்கு? இந்த கும்பல் விற்பனை செய்கின்றனர் என்பது போன்ற தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட கணக்கம்பாளையம் கிராமம் வேதபாறை பள்ளம் கத்தாழைமடுவு என்ற இடத்தில் சந்தன மரங்களை ஒரு கும்பல் வெட்டி கடத்துவதாக டி.என்.பாளையம் வனத்துறையினருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.

    வனச்சரகர் கணேஷ் பாண்டியன் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடமான கத்தாழை மடுவு என்ற இடத்தில் சென்று பார்த்த போது 6-பேர் கொண்ட கும்பல் சந்தன மரங்களை வெட்டி கட்டைகளை எடுத்து வைத்து கொண்டு இருந்தனர்.

    வனத்துறையினர் வருவதை பார்த்த கடத்தல் கும்பல் தப்பியோட முயன்ற போது 2-பேரை வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர், இதில் 4-பேர் தப்பியோடினர்.

    பிடிபட்ட 2- நபரிடம் டி.என்.பாளையம் வனத்துறையினர் விசாரணை நடத்தியதில், கள்ளிப்பட்டி பகவதி நகர் பகுதியைச் சேர்ந்த சடையன் என்பவரது மகன் பெரியசாமி (24), நாகராஜ் (47), முத்து (45), சடையன் (55), மாருச்சாமி (40) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 6- பேர் கொண்ட கும்பல் சந்தன மரங்களை வெட்டி எடுத்து விற்பனை ஈடுபட முயன்றது தெரியவந்தது.

    சம்பவ இடத்தில் பிடிபட்ட பெரியசாமி மற்றும் 17-வயது சிறுவன் என இருவரிடம் இருந்து சுமார் 8 கிலோ அளவுள்ள சந்தன மரக்கட்டைகளை பறிமுதல் செய்த வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும், சந்தன மரங்களை வெட்டி கடத்த முயன்ற சம்பவத்தில் தப்பியோடிய நாகராஜ், முத்து, சடையன், மாருச்சாமி ஆகிய 4- நபர்களை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    வனத்துறையினர் கூறுகையில், இந்த 6 பேர் கொண்ட கும்பல் சந்தன மரங்களை வெட்டி டி.என்.பாளையம் அடுத்த கே.என்.பாளையம் பகுதியில் மொத்த விற்பனையில் ஈடுபட இருந்ததாக தெரிவித்தனர்.

    தப்பியோடிய 4-நபர்களும் பிடிபட்டால், சட்ட விரோதமாக சந்தன மரங்களை கடத்தி யாருக்கு? இந்த கும்பல் விற்பனை செய்கின்றனர் என்பது போன்ற தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • பட்டீஸ்வரன் ( வயது 30). இவர் மோட்டார் சைக்கிள் ஷோரூம் ஒன்றில் மார்க்கெட்டிங் பிரிவில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.
    • வழக்குப் பதிவு செய்த அன்னதானப்பட்டி போலீசார் எருமாபாளையம் பால்காரர் தெரு பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் (32), ரம்யா (31) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் சூரமங்கலம் ஜாகீர் அம்மாபாளையம் வீரபாண்டியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பட்டீஸ்வரன் ( வயது 30). இவர் மோட்டார் சைக்கிள் ஷோரூம் ஒன்றில் மார்க்கெட்டிங் பிரிவில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இவர் தாதகாப்பட்டி பில்லுக்கடை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அருகே ஒரு வேலை விஷயமாக தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த சிலர் பட்டீஸ்வரனிடம் தனியாக அழைத்து பேச்சு கொடுத்து , தங்களிடம் அழகான இளம்பெண்கள் இருப்பதாகவும் , ரூ.2000 கொடுத்தால் அவர்களுடன் ஜாலியாக உல்லாசம் அனுபவிக்கலாம் என்றும் கூறி அவரை விபசாரத்திற்கு அழைத்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து பட்டீஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த அன்னதானப்பட்டி போலீசார் எருமாபாளையம் பால்காரர் தெரு பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் (32), ரம்யா (31) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி அவர்களை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    • நிலமோசடி வழக்கு திண்டுக்கல் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
    • மோசடி செய்தவர்களுக்கு தலா 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    திண்டுக்கல்:

    பழனியில் நிலமோசடி யில் ஈடுபட்டதாக 25 ஆண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்ட வழக்கில் கேரளாவைச்சேர்ந்த 2 முதியவர்களுக்கு தலா 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பளித்து ள்ளது. கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலைப் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரகுமார். இவருக்கு சொந்தமான 38 செண்ட் நிலம் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்துள்ளது.

    அந்த நிலத்தை கேரள மாநிலம் வைக்கம் பகுதியை ச்சேர்ந்த பாலகோபாலன் நாயர் (வயது 60) மற்றும் கோட்டயம் அடுத்துள்ள புதுப்பள்ளியைச் சேர்ந்த தங்கச்சன் (76) ஆகிய இருவரும் கூட்டு சேர்ந்து கடந்த 1997-ஆம் ஆண்டு மோசடி செய்துள்ளனர்.

    ராஜேந்திரகுமாருக்கு சொந்தமான நிலத்தை பாலகோபாலன் நாயர் பவர் பத்திரம் மூலம் தங்கச்சனுக்கு விற்பனை செய்ததாக புகார் எழுந்தது.

    இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட குற்ற பிரிவில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்கு ப்பதிவு செய்து பாலகோபா லன் நாயர் மற்றும் தங்கச்சன் ஆகியோரை கைது செய்த னர்.

    இதுதொடர்பான வழக்கு திண்டுக்கல் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சுமார் 25 ஆண்டுகள் நடைபெற்று வந்த இந்த வழக்கில் மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மோகனா நேற்று தீர்ப்பு வழங்கினார்.

    4 பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் நிருபிக்க ப்பட்ட நிலையில் பால கோபாலன் நாயர் மற்றும் தங்கச்சன் ஆகிய இருவரு க்கும் தலா 14 ஆண்டுகள் சிறை தண்டனயும், தலா 7 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

    வெவ்வெரு பிரிவுகளுக்கு மொத்தம் 14 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கிய போதிலும், தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என உத்தர விட்டுள்ளதால் இருவரு க்கும் தலா 3 ஆண்டுகள் சிறைதண்டணையாக குறைந்துள்ளது. பின்னர் அவர்கள் இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட னர்.

    • மதுரையில் கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • மதுரை பெரியார் பஸ் நிலையம், ஆட்டோ ஸ்டாண்ட் அருகே வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பதாக போலீசுக்கு தகவல் வந்தது.

    மதுரை

    மதுரை தென்பரங்குன்றம், தேவர் சிலை அருகே வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பதாக திருப்பரங்குன்றம் போலீசுக்கு தகவல் வந்தது. இதன் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்தில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    அப்போது அங்கு பதுங்கி இருந்த ஒருவர் பிடிபட்டார். அப்போது அவரிடம் 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவர் தென்பரங்குன்றம் சேகர் மகன் நாகராஜ் (வயது 22) என்பது தெரிய வந்தது. அவரை திருப்பரங்குன்றம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை பெரியார் பஸ் நிலையம், ஆட்டோ ஸ்டாண்ட் அருகே வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பதாக போலீசுக்கு தகவல் வந்தது. இதன் அடிப்படையில் திடீர் நகர் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    அப்போது பெரியார் பஸ் நிலையத்தில் பதுங்கி இருந்த ஒருவர் பிடிபட்டார். அவரிடம் 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவர் சிவகங்கை மாவட்டம், திருபுவனத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (வயது 40) என்று தெரிய வந்தது. அவரை திடீர் நகர் போலீசார் கைது செய்தனர்.

    வீட்டுமனையை பதிவு செய்ய ரூ.1,000 லஞ்சம் வாங்கியதாக காஞ்சீபுரம் சார்பதிவாளர் உள்பட 2 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் தாலுகா அலுவலக வளாகத்தில், காஞ்சீபுரம் இணை சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்த சங்கரன்(வயது 55) என்பவர் சார்பதிவாளராக உள்ளார்.

    காஞ்சீபுரத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் நித்யா என்ற பெண் நேற்று மதியம் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு வந்தார். காஞ்சீபுரம் அருகே கூரம் பக்கத்தில் உள்ள ஒரு இடத்தில் வீடுகட்ட வீட்டுமனையை பதிவு செய்ய வேண்டும் என்று கூறி சார்பதிவாளர் சங்கரனிடம் விண்ணப்பித்தார்.

    அதற்கு அவர், ரூ.1,000 லஞ்சமாக கொடுத்தால்தான் வீட்டுமனை பதிவு செய்யப்படும் என்று நித்யாவிடம் கூறியதாக தெரிகிறது. ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத நித்யா, இதுபற்றி காஞ்சீபுரத்தில் உள்ள மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

    சார்பதிவாளரை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை நித்யாவிடம் கொடுத்து அதை லஞ்சமாக சார்பதிவாளரிடம் கொடுக்கும்படி அறிவுறுத்தினர்.

    பின்னர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு சிவபாதசேகரன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார், காஞ்சீபுரம் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு சென்று மறைந்து இருந்தனர்.

    நித்யா, சார்பதிவாளர் சங்கரனிடம் லஞ்சமாக ரூ.1,000 பணத்தை கொடுத்தார். அந்த பணத்தை வாங்கிய அவர், அருகில் இருந்த கம்ப்யூட்டர் ஆபரேட்டரான காஞ்சீபுரத்தை சேர்ந்த ரஞ்சித் என்ற பார்த்திபன்(30) என்பவரிடம் கொடுத்தார்.

    அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பாய்ந்து சென்று, சார் பதிவாளர் சங்கரனையும், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பார்த்திபனையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து லஞ்ச பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும், சார்பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத பணம் இருக்கிறதா? எனவும், அங்குள்ள ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆய்வு செய்தனர். 
    ×