search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "108 ambulance"

    • பெண்கள் துணிவு மிக்கவர்களாக செயல்பட வேண்டும்.
    • பெண்கள் அனைவரும் வாட்ஸ்அப் குழுக்கள் அமைத்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

    சென்னை:

    சென்னை ராணி மேரி கல்லூரியில் "பெண்களின் ஆரோக்கியம்" குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கு இன்று நடந்தது. கல்லூரி முதல்வர் உமா மகேஸ்வரி தலைமை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பசுமைத்தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி பேசியதாவது:-

    பெண்களுக்கு பேறுகால பிரசவம் மிகவும் சவால் மிக்கதாகும். கிராமங்களில் இரவு நேரங்களில் பெண்களுக்கு பிரசவவலி ஏற்படும்போது கர்ப்பிணிகள் துயரம் அடைவார்கள். அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு செல்ல மிகவும் கஷ்டப்படுவார்கள்.

    இந்த வேதனையை போக்குவதற்காக தான் 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது. அதனை எனது கணவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான அன்புமணி ராமதாஸ் சுகாதார மந்திரியாக இருந்தபோது தொடங்கி வைத்தார்.

    இப்போது கர்ப்பிணி பெண்களின் பிரசவ மரணங்கள் குறைந்து வருகின்றன. இரவு நேரங்களில் எப்போது வேண்டுமானாலும் 108 ஆம்புலன்சை அழைத்தால் உடனே வருகிறார்கள். இதனால் பிரசவங்கள் எளிதாக நடைபெற்று வருகின்றன. இதனால் நாடு முழுவதும் கர்ப்பிணி தாய்மார்கள் மரண விகிதம் குறைந்துள்ளது.

    கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக நேரிடும் போது உடனடியாக அது குறித்து தைரியமாக புகார் செய்ய வேண்டும். பெண்கள் துணிவு மிக்கவர்களாக செயல்பட வேண்டும். பெண்கள் அனைவரும் வாட்ஸ்அப் குழுக்கள் அமைத்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அப்போது தான் பிரச்சினைகளை தீர்க்க முடியும்.

    மகளிர் சத்து மிகுந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். உடல்நலம் பேண வேண்டும். மனநல பாதிப்புகளில் இருந்து விடுபட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • 108 ஆம்புலன்சை வரவழைத்து ஜெனிபரை திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
    • ஆம்புலன்சை டிரைவர் விஜயகுமார் ஓட்டினார். உடன் நர்சு தாட்சாயினி இருந்தார்.

    திருத்தணி:

    திருத்தணியை அடுத்த அருங்குளம் காலனியை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி ஜெனிபர் (23). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஜெனிபருக்கு நேற்று இரவு பிரசவ வலி ஏற்பட்டது.

    இதையடுத்து 108 ஆம்புலன்சை வரவழைத்து ஜெனிபரை திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். ஆம்புலன்சை டிரைவர் விஜயகுமார் ஓட்டினார். உடன் நர்சு தாட்சாயினி இருந்தார். போகும் வழியிலேயே ஜெனிபருக்கு பிரசவ வலி அதிகமானது. இதைத்தொடர்ந்து ஆம்புலன்சிலேயே ஜெனிபருக்கு அழகான பெண்குழந்தை பிறந்தது.

    பின்னர் தாயையும், குழந்தையையும் திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்கள் தற்போது நலமாக உள்ளனர். ஜெனிபருக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் தற்போது இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஈரோடு அரசு மருத்துவமனை டி.பி.ஹாலில் 108 ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளர், ஓட்டுனர் பணிக்கான நேர்காணல் நடக்க உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு அரசு மருத்துவமனை டி.பி.ஹாலில் வரும் 28-ந் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை 108 ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளர், ஓட்டுனர் பணிக்கான நேர்காணல் நடக்க உள்ளது.

    மருத்துவ உதவியாளர் பணிக்கு பி.எஸ்.சி., நர்சிங், ஜி.என்.எம்., ஏ.என்.எம்., டி.எம்.எல்.டி.,  பி.எஸ்.சி., விலங்கியல், உயிரியல், தாவரவியல், பயோகெமிஸ்டரி, மைக்ரோபயாலஜி, பயோடெக்னாலஜி, பிளான்ட் பயாலஜி படித்திருக்கலாம். இவர்களுக்கு மாதம் 15,435 ரூபாய் ஊதியம்.

    இதில் 19 முதல் 30 வயதினர் பங்கேற்கலாம். எழுத்து தேர்வு, மருத்துவ நேர்முகம், உடற்கூறியல், முதலுதவி, அடிப்படை செவிலியர் பணி தொடர்பான நேர்காணல் நடக்கும்.

    ஓட்டுனர் பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 24 முதல் 35 வயதினர் இலகு ரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற்று 3 ஆண்டுகள் அனுபவம் பேட்ஜ் பெற்றவர்கள் பங்கேற்கலாம்.

    இவர்களுக்கு 15,235 ரூபாய் ஊதியம். எழுத்து தேர்வு, தொழில் நுட்ப தேர்வு, மனித வள துறை நேர்காணல், கண் பார்வை, வாகனம் ஓட்டி தேர்வு நடத்தப்படும்.

    கூடுதல் விபரம் அறிய 73388 94971, 73977 24829, 73977 24813 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • சாலை விபத்துகளில் சிக்கிய 10 ஆயிரத்து 906 பேருக்கு முதல் உதவி சிகிச்சை அளித்து ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள்.
    • 80 கர்ப்பிணிகளுக்கு ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்க்கப்பட்டு இருக்கிறது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் 95 ஆயிரம் பேர் பயன் அடைந்து உள்ளனர். அவர்களில் 25 ஆயிரத்து 998 பேர் கர்ப்பிணிகள் ஆவர்.

    சாலை விபத்துகளில் சிக்கிய 10 ஆயிரத்து 906 பேருக்கு முதல் உதவி சிகிச்சை அளித்து ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள்.

    மேலும் 80 கர்ப்பிணிகளுக்கு ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்க்கப்பட்டு இருக்கிறது.

    இந்த தகவலை சென்னை-திருவள்ளூர் ஆம்புலன்சு சேவை திட்ட ஒருங்கிணைப்பாளர் சந்திப்குமார் தெரிவித்து உள்ளார்.

    • நெல்லை மாவட்டத்தில் 22 ஆம்புலன்ஸ்கள் மக்களுக்கு துரித சேவை அளித்து வருகிறது.
    • தற்போது வரை மொத்தம் 3,78,775 பேர் 108 ஆம்புலன்ஸ் மூலமாக பயன்பெற்றுள்ளனர்.

    நெல்லை:

    108 ஆம்புலன்ஸ் நெல்லை மாவட்ட மேலாண்மை அதிகாரி சோமநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகம் முழுவதும் 1,353 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் மட்டும் 22 ஆம்புலன்ஸ்கள் பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டு மக்களுக்கு துரித சேவை அளித்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் சேவை தொடங்கப்பட்டது முதல் தற்போது வரை மொத்தம் 3,78,775 பேர் 108 ஆம்புலன்ஸ் மூலமாக அவசர சிகிச்சைக்காக மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டு பயன்பெற்றுள்ளனர். இதில் பிரசவ தேவைக்காக மட்டும் 87,579 பேரும், சாலை விபத்துகளில் 76,652 பேரும் தீ விபத்து, மாரடைப்பு, மூச்சுத்திணறல், கோவிட்-19, பாம்புக்கடி, தற்கொலை முயற்சி போன்ற இதர மருத்துவ அவரச தேவைக்காக 2,14,544 பேரும் 108 ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தி உள்ளனர்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • 2008-ஆம் ஆண்டு தமிழக மக்களின் அவசர மருத்துவ பயன்பாட்டிற்காக 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது.
    • பிரசவத்திற்காக அழைக்கப்பட்டவர்களில் 411 கர்ப்பிணிகளுக்கு அவசர மருத்துவ உதவியாளரின் துரித நடவடிக்கையால் ஆம்புலன்சில் குழந்தையை பிரசவித்துள்ளனர்.

    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி மாவட்ட 108 ஆம்புலன்ஸ் ஒருங்கிணைப்பாளர் சுனில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ள தாவது:-

    2008-ஆம் ஆண்டு தமிழக மக்களின் அவசர மருத்துவ பயன்பாட்டிற்காக 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ்கள் மொத்தம் 26 இயக்கப்பட்டு வருகிறது.

    இதில் அடிப்படை உயிர்காக்கும் கருவிகள் கொண்ட ஆம்புலன்சுகள் 21-ம், அதிநவீன உயிர் காக்கும் வசதிகள் கொண்ட ஆம்புலன்ஸ் 3-ம், பச்சிளங்குழந்தை களுக்கான ஆம்புலன்ஸ்கள் 2-ம் இயக்கப்பட்டு வரு கின்றன.

    தூத்துக்குடி மாவட்டத்தில் 108 சேவை தொடங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை மொத்தம் 2 லட்சத்து 62 ஆயிரத்து 370 பேர் பயன்பெற்றுள்ளனர். இதில் பிரசவ தேவைக்காக மட்டும் 67 ஆயிரத்து 734 பேர்களும், சாலை விபத்துக்களில் 51 ஆயிரத்து 11 பேரும், இதர மருத்துவ அவசர தேவைக்காக 1 லட்சத்து 46 ஆயிரத்து 625 பேர்களும் சேவையை பயன்படுத்தி உள்ளனர்.

    இதில் பிரசவத்திற்காக அழைக்கப்பட்டவர்களில் 411 கர்ப்பிணிகளுக்கு அவசர மருத்துவ உதவியாளரின் துரித நடவடிக்கையால் ஆம்புலன்சில் குழந்தையை பிரசவித்துள்ளனர்.

    மேலும் பிரசவ அவசர அழைப்புக்காக அழைக்கப்பட்டவர்களில் அவசர மருத்துவ உதவியுடன் 450 கர்ப்பிணி தாய்மார்கள் அவர்களது இல்லங்களிலேயே குழந்தையை பெற்றெடுத்து, பின்னர் சிசிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதி க்கப்பட்டு உள்ளனர்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • பிற மருத்துவ அவசர தேவைக்காக 2 லட்சத்து 15 ஆயிரத்து 233 பேரும், 108 ஆம்புலன்ைஸ அழைத்து பயன்படுத்தி உள்ளனர்.
    • 24 மணி நேரமும், தேவையான உதவிகளை செய்து தர ஆம்புலன்ஸ் பைலட், டெக்னீசியன் தயாராக உள்ளனர்.

     திருப்பூர்

    திருப்பூர் மாவட்டத்தில், 108 ஆம்புலன்ஸ் சேவை 2008ல் துவங்கப்பட்டது. துவக்கத்தில் 15 ஆம்புலன்ஸ்கள் மட்டும் இருந்தன. தற்போது 25 உயிர் காக்கும் வாகனம், 3 அதிநவீன உடனடி உயிர் பாதுகாப்பு கருவிகள் கொண்ட வாகனம், பிறந்தது முதல் 5 வயதுடைய குழந்தைகளுக்கு இரண்டு ஆம்புலன்ஸ், ஒரு பைக் ஆம்புலன்ஸ் என மொத்தம் 31 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படுகின்றன.

    ஆம்புலன்ஸ் சேவை துவங்கியது முதல் கடந்த செப்டம்பர் 30-ந் தேதி வரை 3 லட்சத்து 82 ஆயிரத்து, 550 பேர் ஆம்புலன்ைஸ அழைத்து பயன்பெற்றுள்ளனர்.

    பிரசவத்துக்காக 75 ஆயிரத்து 296 பேரும், சாலை விபத்துக்காக 92 ஆயிரத்து, 21 பேரும், பிற மருத்துவ அவசர தேவைக்காக 2 லட்சத்து 15 ஆயிரத்து 233 பேரும், 108 ஆம்புலன்ைஸ அழைத்து பயன்படுத்தி உள்ளனர்.

    இது குறித்து திருப்பூர் மாவட்ட 108 ஆம்புலன்ஸ் மேலாளர் உதயநிதி கூறியதாவது:- 24 மணி நேரமும், தேவையான உதவிகளை செய்து தர ஆம்புலன்ஸ் பைலட், டெக்னீசியன் தயாராக உள்ளனர்.

    நள்ளிரவு, அதிகாலை நேரத்தில் தேவையான அவசர, பிரசவ உதவிகளை, கண்விழித்து தங்களால் இயன்றவரை பணியாற்றி வருகிறோம். அதன் வாயிலாக, 13 ஆண்டுகளில், 3.82 லட்சம் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. விபத்துக்கு அடுத்தப்படியாக பிரசவத்துக்கு 108 ஆம்புலன்சை அதிகளவில் மக்கள் தேடுகின்றனர். காரணம், அருகில் உள்ள மருத்துவமனைக்கு விரைந்து கொண்டு சேர்ப்பது, வரும் வழியில் தேவையான சிகிச்சை வழங்குவது உள்ளிட்ட காரணங்கள் தான்.

    அவ்வகையில் திருப்பூர் மாவட்டத்தில் ஆம்புலன்சில் 361 குழந்தைகள் பிறந்துள்ளன. ஆம்புலன்ஸ் டிரைவர், உதவியாளர் வாயிலாக வீடுகளில் 535 குழந்தைகள் பிறந்துள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • 108 ஆம்புலன்ஸ் மூலம் 1¾ லட்சம் பேர் பயனடைந்துள்ளனர் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • 17 வாகனம் இயக்கப்பட்டு வருகிறது

    பெரம்பலூர்

    2008-ஆம் ஆண்டு தமிழக மக்களின் அவசர மருத்துவ பயன்பாட்டிற்காக தொடங்கப்பட்ட 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் 108 ஆம்புலன்சுகள் 17 இயக்கப்பட்டு வருகிறது. இதில் அடிப்படை உயிர் காக்கும் கருவிகள் கொண்ட ஆம்புலன்சுகள் 15-ம், அதி நவீன உயிர்க்காக்கும் வசதிகள் கொண்ட ஆம்புலன்ஸ் ஒன்றும், பச்சிளம் குழந்தைகளுக்கான ஆம்புலன்ஸ் ஒன்றும் இயக்கப்பட்டு வருகிறது பெரம்பலூர் மாவட்டத்தில் சேவை தொடங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை மொத்தம் 1 லட்சத்து 68 ஆயிரத்து 800 பேர் பயன்பெற்றுள்ளனர் இதில் பிரசவ தேவைக்காக மட்டும் 36 ஆயிரத்து 904 பேரும், சாலை விபத்துகளில் 28 ஆயிரத்து 324 பேரும், இதர மருத்துவ அவசர தேவைக்காக 1 லட்சத்து 3 ஆயிரத்து 572 பேரும் சேவையை பயன்படுத்தி உள்ளனர். இதில் முக்கியமாக பிரசவத்திற்காக அழைக்கப்பட்டவர்களில் 308 கர்ப்பிணிகளுக்கு அவசர மருத்துவ உதவியாளரின் துரித நடவடிக்கையால் ஆம்புலன்சில் குழந்தையை பிரசவத்துள்ளனர். மேலும் பிரசவ அவசர அழைப்புக்காக அழைக்கப்பட்டவர்களில் அவசர மருத்துவ உதவியுடன் 318 கர்ப்பிணி தாய்மார்கள், அவர்களது இல்லங்களிலேயே குழந்தையை ஈன்றெடுத்துள்ளனர். பின்னர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பெரம்பலூர் மாவட்ட 108 ஆம்புலன்ஸ் மேலாளார் அறிவுக்கரசு தெரிவித்தார்."

    • பிரசவத்திற்காக மாதம்மாள் தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.
    • நேற்று மாலை பிரசவ வலி ஏற்படவே உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

    சேலம்:

    நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி சதீஷ்குமார் (வயது 28). இவருக்கும் சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே உள்ள தெப்பக்காடு அடுத்த காசிகல் பகுதியைச் சேர்ந்த மாதம்மாள் ( 22) என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. இந்த நிலையில் பிரசவத்திற்காக மாதம்மாள் தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.நேற்று மாலை பிரசவ வலி ஏற்படவே உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் ஊழியர் சிலம்பரசன் மற்றும் ஓட்டுநர் செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து மாதம்மாளை அழைத்துக்கொண்டு வாழவந்தி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அழகான பெண் குழந்தை பிறந்தது. அதை தொடர்ந்து சுதாரித்துக்கொண்டு, தாயையும், குழந்தையும் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் கொண்டுவந்து சேர்த்தனர். இருவருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • மதுரையில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு அடி-உதை விழுந்தது.
    • முத்து காலனி பகுதியில், வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள், ஆம்புலன்ஸ் மீது மோதியது.

    மதுரை

    மதுரை சித்தாலாட்சி நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 38). இவர் 108 ஆம்புலன்ஸ் டிரைவராக உள்ளார். இந்த நிலையில் 108 ஆம்புலன்ஸ், நேற்று மதியம் விராட்டிபத்துக்கு சென்றது. முத்து காலனி பகுதியில், வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் மோதியது.

    இதில் அந்த வாலிபர் படுகாயம் அடைந்தார். ஆம்புலன்சில் இருந்து இறங்கிய டிரைவர் செந்தில்குமார், மருத்துவ உதவியாளர் சூர்யா ஆகியோர் காயமடைந்த வாலிபருக்கு சிகிச்சை அளித்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கும்பல், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை தாக்கி விட்டு தப்பியது. இது குறித்த புகாரின் பேரில் எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் ஆம்புலன்ஸ் மீது மோட்டார் சைக்கிளால் மோதி விபத்தை ஏற்படுத்தியவர் அன்பு சூர்யா என்பது தெரியவந்தது. அவரை போலீசார் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து, தப்பி ஓடிய 6 பேர் கும்பலை தேடி வருகின்றனர்.

    • தனியார் நிர்வாகம் ஒன்று ஒப்பந்த முறையில் 108 ஆம்புலன்ஸ் சேவையை எடுத்து நிர்வகித்து வருகிறது.
    • ஊதியம் உள்ளிட்டவற்றில் முறைகேடுகள் நடைபெற்று வருவதாகவும், அதனை சரி செய்ய வேண்டும் எனவும் இந்த மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட ஒருங்கிணைந்த108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட மாநாடு நெல்லையில் இன்று நடைபெற்றது.

    சிறப்புரை

    மாநாட்டிற்கு நெல்லை மாவட்ட தலைவர் சுடலை குமார், தென்காசி மாவட்ட தலைவர் சரவணன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    நிர்வாகிகள் சுந்தர்ராஜ், முருகன், அருள் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நெல்லை மாவட்ட செயலாளர் ஜெயக்குமார், தென்காசி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் வரவேற்றனர். சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ராஜேந்திரன், தென்னிந்திய பொதுச் செயலாளர் ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

    கடந்த 2008-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் 108 ஆம்புலன்ஸ் சேவை திட்டத்தில் தமிழக முழுவதும் 5000-க்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இதனை தனியார் நிர்வாகம் ஒன்று ஒப்பந்த முறையில் எடுத்து நிர்வகித்து வருகிறது.

    நெல்லை, தென்காசி உள்பட 4 மாவட்டங்களில் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மற்றும் டெக்னீசியன்கள் என 300-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்த 4 மாவட்டங்களிலும் சுமார் 80 வாகனங்கள் ஓடிக்கொண்டிருக்கிறது.

    ஆனால் இந்த தொழிலாளர்களுக்கு வழங்கும் வேலை நேரம், ஊதியம் உள்ளிட்டவற்றில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாகவும், வாகன கொள்முதல் மற்றும் வாகன உதிரி பாகங்கள் கொள்முதலில் முறைகேடு நடைபெற்று வருவதாகவும், அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்த மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது.

    நெல்லை மாவட்டத்தில் மட்டும் திசையன்விளை, ஐகிரவுண்ட் அரசு ஆஸ்பத்திரி, முன்னீர்பள்ளம், கங்கைகொண்டான் உள்ளிட்ட 4 இடங்களில் 108 வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக அந்த ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படாமல் உள்ளது.

    அங்கு ஆட்களை வேலைக்கு அமர்த்தி மீண்டும் 108 ஆம்புலன்சுகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சீதபற்பநல்லூரில் புதிதாக 108 ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டு 6 மாதமே ஓடிய நிலையில், தற்போது அந்த ஆம்புலன்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    அதனை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் எனவும், இதே போல் தென்காசி, தூத்துக்குடி கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் உள்ள ஆட்கள் பற்றாக்குறை, ஆம்புலன்ஸ் தட்டுப்பாடு உள்ளிட்டவற்றை சரி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    சென்னையில் 108 ஆம்புலன்ஸ் சேவை நிறுவனத்தில் பணியாற்றிய போலி பெண் டாக்டரை போலீசார் கைது செய்தனர். #FakeDoctor
    சென்னை:

    வேலூரைச் சேர்ந்தவர் ரேச்சல் ஜெனிபர். இவர் சென்னையில் 108 ஆம்புலன்ஸ் சேவை நிறுவனத்தில் டாக்டராக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் அவரது சான்றிதழ்களை ஆய்வு செய்த போது அவை போலியானது என்பது தெரிய வந்தது.

    இதையடுத்து தேனாம்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்தார்.

    ரேச்சல் ஜெனிபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர் ரூ.35 ஆயிரம் சம்பளம் வாங்குவதும், போலி சான்றிதழ் பெற தினேஷ், விஜயலட்சுமி ஆகிய 2 பேர் உதவி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை தேடி வருகிறார்கள்.

    போலி சான்றிதழுடன் டாக்டர் வேலையில் சேர்ந்த ரேச்சல் ஜெனிபரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்கி உள்ளனர். #FakeDoctor
    ×