search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "106 கிலோ தங்கம் பறிமுதல்"

    மும்பையில் கைது செய்யப்பட்ட கடத்தல் கும்பலிடம் இருந்து 106 கிலோ தங்கம் மற்றும் ரூ.1 கோடியே 81 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. #Mumbai #GoldSmuggled
    மும்பை:

    மும்பை, டோங்கிரி பகுதிக்கு வெளிநாட்டில் இருந்து தங்கம் அதிகளவில் கடத்தி கொண்டு வரப்படுவதாக வருவாய் புலனாய்வு இயக்குனரக (டி.ஆர்.ஐ.) அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அதிகாரிகள் சம்பவத்தன்று டோங்கிரி பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு வந்த ஒரு கார், மோட்டார் சைக்கிளை அதிகாரிகள் வழிமறித்து நிறுத்தி சோதனை போட்டனர். இந்த சோதனையில் கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் அதிகளவில் தங்கம் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அவற்றை அதிரடியாக பறிமுதல் செய்தனர். 75 கிலோ எடை கொண்டதாக இருந்த அந்த தங்கத்தின் மதிப்பு ரூ.24 கோடி என்பது தெரியவந்தது.

    இதையடுத்து அதிகாரிகள் கார், மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த அப்துல் (வயது26), சேக் ஆகாத் (32) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் மேலும் சிலருக்கு இந்த கடத்தலில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

    அதன்பேரில் இதில் தொடர்புடைய கேரளாவை சேர்ந்த நிசார் அலி (வயது 43), டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வரும் சோயிப் (47), நகை வியாபாரி ராஜூ மனோஜ் ஜெயின் (32), பழவியாபாரி ஆகுல் (39), பித்தளை பொருள் வியாபாரி ஹாப்பி தக்காட் (34) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.

    முக்கிய குற்றவாளியான நிசார் அலி துபாயில் கால் சென்டர் நடத்தி வருகிறார். அவர் தான் தங்கத்தை பித்தளை என கூறி துபாயில் இருந்து கடத்தி மும்பைக்கு கொண்டு வருவார். இதற்கு பித்தளை பொருள் வியாபாரி ஹாப்பி தக்காட் உடந்தையாக இருந்து உள்ளார்.

    தங்கம் மும்பை வந்தவுடன் சோயிப், ராஜூ மனோஜ் ஜெயின் ஆகியோர் அதை கள்ள சந்தையில் விற்பனை செய்வார்கள். அந்த பணத்தை துபாய் திர்ஹாமாக மாற்றி பழ வியாபாரி ஆகுல், நிசார் அலிக்கு அனுப்பி வைத்து உள்ளார். அப்துல் மற்றும் சேக் ஆகாத் டிரைவர்கள் ஆவர்.

    கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளில் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் நடத்திய சோதனையில், அங்கும் அதிகளவில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த தங்கம் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.

    மொத்தமாக கைது செய்யப்பட்ட கடத்தல் கும்பலிடம் இருந்து ரூ.32 கோடி மதிப்பிலான 106 கிலோ தங்கம் மற்றும் ரூ.1 கோடியே 81 லட்சம் ரொக்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    கைது செய்யப்பட்ட கடத்தல் கும்பல் கடந்த 3 மாதங்களில் துபாயில் இருந்து மும்பைக்கு பித்தளை என கூறி 200 கிலோ தங்கத்தை கடத்தி வந்திருப்பதாக வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    கடத்தல் கும்பலிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    கர்நாடக மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், 9 மணி நிலவரப்படி 10.6 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. #KarnatakaElections2018 #KarnatakaVoterTurnout
    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபையின் பதவிக்காலம் வரும் 28-ம் தேதியுடன் நிறைவடைவதால் இன்று தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றுவருகிறது. பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களித்து வருகின்றனர்.

    ஆண் வாக்காளர்கள் 2.52 கோடி, பெண் வாக்காளர்கள் 2.44 கோடி, 4,552 மாற்றுப்பாலினத்தவர்கள் என மொத்தம் இந்த தேர்தலில் மொத்தம் 4.96 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். இதற்காக மாநிலம் முழுவதும் 55 ஆயிரத்து 600 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 3.5 அரசு பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு காலையிலேயே சென்று வாக்கை பதிவு செய்தனர்.



    பா.ஜ.க. முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா ஷிகர்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டார். மத்திய மந்திரியும் பா.ஜ.க. முக்கிய தலைவருமான சதானந்த கவுடா புத்தூர் வாக்குச்சாவடியில் வாக்களித்தார். ஹசன் மாவட்டம் ஹோலிநரசிபுரா நகரில் உள்ள வாக்குச்சாவடியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவே கவுடா தன் மனைவியுடன் வந்து ஓட்டு போட்டார்.

    அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், காலை 9 மணி நிலவரப்படி 10.6 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரியவந்துள்ளது.

    கர்நாடக மாநிலத்தில் மொத்தம் 224 தொகுதிகள் உள்ளன. இதில் ஜெயநகர் தொகுதி பாஜக வேட்பாளர் விஜயகுமார் மரணம் அடைந்ததால் அந்த தொகுதிக்கும், கட்டுக்கட்டாக வாக்காளர் அடையாள அட்டை பறிமுதல் செய்யப்பட்ட ஆர்.ஆர் நகர் தொகுதிக்கும் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 222 தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. #KarnatakaElections2018 #KarnatakaVoterTurnout

    ×