search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "103 வயது மூதாட்டி"

    மேட்டுப்பாளையத்தை சேர்ந்த 103 வயதான மூதாட்டி அரசியலில் ஈடுபடுத்தி கொள்வதுடன் தனது இரண்டரை ஏக்கர் விவசாய நிலத்தில் விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகிறார். #Pappammal
    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் பாப்பம்மாள் என்கிற ரங்கம்மாள் (வயது 103). இவர் 1914-ம் ஆண்டு தேவனாபுரம் கிராமத்தில் பிறந்தார்.

    தனது சிறு வயதிலேயே தாய் தந்தையை இழந்து விட்டார். இவருடைய பாட்டி இவரையும் இரு சகோதரிகளையும் தேக்கம்பட்டி அழைத்துவந்து அங்கு மளிகை கடை வைத்து தன்னுடைய வாழ்க்கையை தொடங்கியுள்ளார்.

    பாட்டி இறந்த பிறகு மளிகை கடையை பாப்பம்மாள் எடுத்து நடத்த தொடங்கினார். இதே கிராமத்தில் ஓட்டலும் வைத்துள்ளார். சிறுக, சிறுக சேர்க்கப்பட்ட பணத்தில் தேக்கம்பட்டி கிராமத்தில் 10 ஏக்கர் விவசாய நிலத்தை வாங்கி விவசாய பணியிலும் பாப்பம்மாள் ஈடுபட்டு வந்துள்ளார்.

    திருமணமாகி குழந்தைகள் இல்லாமல் இருந்த இவர் தனது சகோதரிகளின் குழந்தைகளை தத்து எடுத்துள்ளார். தி.மு.க.வில் தன்னை சிறுவயதிலேயே இணைத்துக் கொண்ட பாப்பம்மாள் 1959 -ம் ஆண்டு தேக்கம்பட்டி பஞ்சாயத்து உறுப்பினராகவும். 1964 -ம் ஆண்டு யூனியன் கவுன்சிலராகவும், மாதர் சங்கத் தலைவியாகவும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக விவாதக் குழு அமைப்பாளராகவும் பதவிகளை வகித்துள்ளார்

    தற்போது பாப்பம்மாளுக்கு 103 வயது தொடங்கி உள்ளது. இந்த வயதிலும் அவர் தன்னை அரசியலில் ஈடுபடுத்தி கொள்வதுடன் தனது இரண்டரை ஏக்கர் விவசாய நிலத்தில் விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

    இது தொடர்பாக பாப்பம்மாளிடம் கேட்ட போது, வயது மூப்பு காரணமாக அளவான உணவு எடுத்துக் கொள்வதாகவும் அதிலும் குறிப்பாக காலையில் குளித்துவிட்டு தான் கடந்த 50 ஆண்டுகளாக வாழை இலையில் உணவுகளை உட்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.


    தனக்குப் பிடித்தமான உணவு வெள்ளாட்டுக் கறி குழம்பு என்றும், பிரியாணியை விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். தனது சிறுவயதில் தங்கள் கிராமத்தில் பள்ளிக்கூடம் எதுவும் இல்லாத காரணத்தினால் சத்திரம் ஒன்றில் மணல் பரப்பி அதில் எழுதி பழகியதாகவும் கூறினார்.

    அன்றைய காலகட்டத்தில் வீட்டு வேலைகளையும் விவசாய வேலைகளையும் அனைத்தையும் தாங்களே செய்து வந்த காரணத்தினால் தங்கள் உடம்பில் நோய்கள் எதுவும் வந்ததில்லை.

    இதனால் கிராமங்களில் மருத்துவமனைகளே இல்லை எனவும் தெரிவித்தார். அந்த காலத்தில் வயிற்றுவலி வந்தால் வெற்றிலையில் உப்பை வைத்து சாப்பிடுவதும் தலைவலி வந்தால் நெற்றியில் பாக்குக் கொட்டை வைத்து அதை குணப்படுத்துவோம் எனவும் தெரிவித்தார்.

    தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்திக்க வேண்டும் என்று நீண்ட நாள் ஆசைப்பட்டேன். ஆனால் அந்த ஆசை நிறைவேறாமல் போனது தன்னுடைய வாழ்க்கையில் ஒரு பெரிய மனவருத்தத்தைத் தந்துள்ளதாக பாப்பம்மாள் தெரிவித்தார். #Pappammal
    லிபியா படகு விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 103 அகதிகள் பலியான சம்பவத்திற்கு ஐ.நா. சபை ஆழந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளது. #Libyaboattragedy #Boatsink
    திரிபோலி:

    ஆப்பிரிக்க நாடான லிபியாவில் இருந்து கடந்த 29-ந் தேதி 123 அகதிகள் ஐரோப்பிய நாடுகளுக்கு ஒரு ரப்பர் படகில் மத்திய தரைக்கடல் வழியாக பயணம் மேற்கொண்டனர். அவர்களுடைய படகு தஜோரா கடற்கரையோரம் சென்றபோது திடீரென படகுக்குள் நீர் புகுந்து அது கடலில் மூழ்கியது.

    இந்த விபத்தில் படகில் இருந்த 70 ஆண்கள், 30 பெண்கள், 3 குழந்தைகள் என 103 பேர் கடலில் மூழ்கி உயிர் இழந்தனர். சிறிய படகில் அதிகமானோர் பயணம் செய்ததும், கடல் சீற்றமும்தான் விபத்துக்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது.

    இந்த தகவலை உறுதி செய்த ஐ.நா. சபையின் அகதிகளுக்கான கமிஷனர் வெளியிட்ட அறிக்கையில், “இந்த துயர சம்பவம் வேதனை அளிக்கிறது. இதற்காக ஆழந்த அனுதாபங்கள். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்” என்று தெரிவித்து உள்ளார்.

    படகு விபத்தில் உயிர் தப்பிய ஒருவர் கூறுகையில், “எனது வாழ்க்கையில் இது மிகவும் கடினமான நாள். என்னைக் காப்பாற்றிக்கொள்வதா? அல்லது எனது குழந்தைகள், நண்பர்களை காப்பாற்றுவதா? என்பது தெரியாமல் பரிதவிப்புக்கு உள்ளாகிவிட்டேன்” என்றார். #Libyaboattragedy #Boatsink #tamilnews 
    ×