search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரூ.1000 பரிசு"

    • மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் செப்டம்பர் முதல் அமல்படுத்தப்படும் என்று அமைச்சர் மூர்த்தி கூறினார்.
    • வருவாய் கோட்டாட்சியர் சுகி பிரேமலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    வாடிப்பட்டி

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யிலான தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை பயணத்தை முன்னிட்டு வாடிப்பட்டியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

    இதில் அமைச்சர் பி.மூர்த்தி பங்கேற்று பல்வேறு துறைகளின் சார்பில் 960 பயனாளிகளுக்கு ரூ.9 கோடியே 57 லட்சத்து 54 ஆயிரத்து 693 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    இந்தியாவில் இருக்கக்கூடிய எல்லா மாநிலங்களுக்கும் முன்னோடி மாநிலமாக தமிழக அரசு விளங்க வேண்டும் என்பதுதான் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் எண்ணமாகும். இதனை மெய்ப்பிக்கும் வகையில் கடந்த 2 ஆண்டு ஆட்சிக்காலத்தில் முதல்-அமைச்சர் தேர்தல் அறிக்கையில் அறிவித்த திட்டங்களையும், அறிவிக்காத பல்வேறு சிறப்பு திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்.

    தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை சட்ட மன்றத்தில் நிறைவேற் றப்பட்டு வருகிற செப்டம்பர் மாதம் முதல் இந்த தொகையை தொடர்ந்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் அனீஷ் சேகர், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேசன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் விவேகா னந்தன், கூட்டுறவு சங்க ங்களின் இணைப்பதிவாளர் குருமூர்த்தி, வருவாய் கோட்டாட்சியர் சுகி பிரேமலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் தாலிக்கு தங்கம் என்ற பெயரில் வழங்கப்பட்டது.
    • உயர்கல்வி பயிலும் மாணவிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

    திருப்பூர்:

    சமூக நலத்துறையின் கீழ், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண நிதி உதவி திட்டம், ஈ.வெ.ரா., மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண நிதி உதவித்திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண் திருமண நிதி உதவித்திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதி உதவித்திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதி உதவித்திட்டம் என, 5 திட்டங்களின் கீழ் கடந்த 10 ஆண்டுகளாக பெண்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வந்தன.

    கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் தாலிக்கு தங்கம் என்ற பெயரில் வழங்கப்பட்டது. இதில் ஒரு மாணவி 10, பிளஸ் 2 முடித்திருந்தால் திருமணத்தின்போது 25 ஆயிரம் தொகை, ஒரு பவுன் தங்க காசு, டிகிரி முடிந்திருந்தால், 50 ஆயிரம் ரூபாய் மற்றும் ஒரு பவுன் தங்க காசு பெற்றுவந்தனர்.நிதிபற்றாக்குறையை காரணம் காட்டி தி.மு.க., அரசு இத்திட்டத்தையே உயர்கல்வி உறுதி திட்டமாக மாற்றியுள்ளது. இதன்கீழ் அரசு பள்ளிகளில், 6-ம்வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்த மாணவிகள், கல்லுாரி, பாலிடெக்னிக் அல்லது ஐ.டி.ஐ.,யில் சேர்ந்து படிக்கும்போது அவர்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

    இதுகுறித்து திருப்பூர் மாவட்ட கல்வித்துறையினர் கூறுகையில், ''உயர்கல்வி பயிலும் மாணவிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. பள்ளி மாணவிகளின் விவரங்களை சமூக நலத்துறையிடம் ஒப்படைத்துள்ளோம். கல்லூரி மாணவிகளின் விவரங்கள் திரட்டும் பணி மும்முரமாக நடக்கிறது.மாணவிகள் விண்ணப்பிக்க ஏதுவாக பிரத்யேக இணையதளம் மற்றும் ெசல்போன செயலி வடிவமைக்கப்பட்டு வருகிறது. நிறைவடையும் பட்சத்தில் ஆன்லைனிலே விண்ணப்பிக்கலாம் என்றனர்.

    • சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி ஊட்டியில் நடைபெற்றது
    • மீண்டும் மஞ்சப்பை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு

    ஊட்டி:

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், வனத்துறை, ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி ஊட்டியில் நடைபெற்றது.

    பேரணியை கலெக்டர் அம்ரித் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடங்கி சேரிங்கிராஸ் வழியாக தாவரவியல் பூங்கா வரை சென்றது. இதில் கல்லூரி மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர்.அவர்களுக்கு மஞ்சப்பைகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தாவரவியல் பூங்காவில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் அம்ரித் மரக்கன்றுகளை நட்டு வைத்து தண்ணீர் ஊற்றினார்.இதுகுறித்து கலெக்டர் அம்ரித் கூறியதாவது:-

    உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடும் நாளில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. நடப்பாண்டில் ஒரே பூமி என்ற கருபொருளை மையமாக வைத்து கொண்டாடப்படுகிறது. மேலும், பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் மீண்டும் மஞ்சப்பை குறித்து மாணவிகள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்ப ட்டது. நீலகிரியில் சுற்றுப்புற சூழலை பாதுகாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீலகிரியில் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டு உள்ளது. இதனை பயன்படுத்திய கடை உரிமையாளர்களுக்கு ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்க 1,000 மரக்கன்றுகள் நடவு செய்யும் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத், ஊட்டி நகராட்சி ஆணையாளர் காந்திராஜன், தோட்டக்கலை இணை இயக்குனர் (பொறுப்பு) சிபிலா மேரி, உதவி இயக்குநர் ராதாகிருஷ்ணன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.  

    வசதியானவர்களுக்கும் பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் தரக்கூடாது என பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அதிமுக சார்பில் இன்று தாக்கல் செய்யப்பட்ட முறையீட்டு மனுவை சென்னை ஐகோர்ட் நிராகரித்தது. #Pongalgift #MadrasHC
    சென்னை:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, உலர்ந்த திராட்சை, ஏலக்காய், 2 அடி நீளமுள்ள கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1,000 கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ரொக்கப்பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு நேற்று முன்தினம் முதல் பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், ரூ.1,000 ரொக்கமாக கொடுப்பதற்கு தடை விதிக்கக்கோரி கோவையை சேர்ந்த டேனியல் என்பவர்  சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனுவை தாக்கல் செய்தார்.

    இந்த மனுவை நேற்று விசாரித்த சென்னை ஐகோர்ட்,  வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ.1000 பொங்கல் பரிசு வழங்க தடை விதித்து உத்தரவிட்டது.



    மேலும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 வழங்கப்படுவது ஏன்? என கேள்வியெழுப்பியதுடன் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களை தவிர மற்றவர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.1000 வழங்கக்கூடாது எனவும் உத்தரவிட்டது.

    இதனால் வெள்ளை ரேசன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்காது என தெரியவந்தது. ஏற்கனவே வெள்ளை அட்டை வைத்துள்ள பலர் பணம் பெற்றுள்ள நிலையில் கிடைக்காத சிலர் வேதனை பட்டு வந்தனர்.

    இந்நிலையில், ஐகோர்ட் விதித்த தடையை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரணைக்கு ஏற்க ஐகோர்ட் மறுத்துவிட்டது. தேவைபட்டால் சுப்ரீம் கோர்ட்டை அணுகி அ.தி.மு.க. நிவாரணம் தேடலாம் என மனுதாரருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். #Pongalgift #MadrasHC
    சென்னை மாநகர பஸ்களில் சீசன் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த போக்குவரத்து கழகம் முடிவு செய்திருக்கிறது. #BusFareHike #TNTransport

    சென்னை:

    தமிழ்நாட்டில் கடந்த ஜனவரி 20-ந் தேதி பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது. சென்னை மாநகர பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.5 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.23-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது. ஏ.சி.பஸ்களில் குறைந்த பட்சமாக ரூ.25 ஆகவும், அதிகபட்சம் ரூ.150 ஆகவும் உயர்த்தப்பட்டது.

    கட்டண உயர்வால் போக்குவரத்து கழகத்திற்கு வருவாய் உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்தபடி வருமானம் வரவில்லை.

    கட்டண உயர்வுக்கு முன்பு சென்னை மாநகர பஸ்களில் சுமார் 60 லட்சம் பேர் பயணம் செய்து வந்தனர். கட்டண உயர்வுக்கு பிறகு மாநகர பஸ்களில் பயணம் செய்வோர் எண்ணிக்கை 40 லட்சமாக குறைந்தது.

    அதிகளவில் விரைவு பஸ்கள் இயக்கப்பட்டதால் பயணிகள் மாநகர பஸ்களில் பயணம் செய்வதை தவிர்த்து மின்சார ரெயில், ஷேர் ஆட்டோ போன்ற மாற்று போக்கவரத்துக்கு மாறினர்.

    இதையடுத்து மாநகர பஸ்களில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகப் படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    சென்னையில் வேலைக்கு செல்வோர் மாநகர பஸ்களில் மாதாந்திர சீசன் பாஸ் எடுத்து பயணம் செய்து வருகிறார்கள். இதே போல் ஒரு வழித்தடத்தில் செல்லும் மாதாந்திர பாஸ் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

     


    ஏற்கனவே பயணிகள் வருகை குறைவால் வருவாய் குறைந்த நிலையில் அதிக அளவில் மாதாந்திர பாசில் ஏராளமானோர் பயணம் செய்வதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    தற்போது 21.5 லட்சம் பேர் மாதாந்திர பாசில் பயணம் செய்வதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் தினமும் வசூலாகும் வருவாயில் பாதிப்பு ஏற்படுவதாகவும் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் மாதாந்திர பாஸ் கட்டணத்தை உயர்த்த போக்குவரத்து கழகம் முடிவு செய்திருக்கிறது.

    இதன் மூலம் 1000 ரூபாய் மாதாந்திர பாஸ் விலை உயர்த்தப்படுகிறது. எவ்வளவு கட்டணம் உயர்த்தப்படும் என்று விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

    இது குறித்து போக்கு வரத்து அதிகாரி ஒருவர் கூறுகையில், “பஸ் கட்டண உயர்வுக்கு பிறகு பயணிகள் பலர் மாதாந்திர பாஸ் எடுத்து பயணம் செய்து வருகிறார்கள். 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மாதாந்திர பாஸ் வைத்துள்ளனர். இதில் வேலைக்கு செல்வோர் அதிக அளவில் 1000 ரூபாய் மாதாந்திர பஸ் பாசை பயன்படுத்தி இருந்தனர்.

    இதனால் தினமும் வசூலாகும் தொகை குறைவதாக கண்டக்டர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஒரு பஸ்சில் 20 பயணிகள் இருந்தால் அதில் பாதி பேர் மாதாந்திர பாஸ் வைத்துள்ளனர்” என்றார்.

    1000 ரூபாய் மாதாந்திர பயண அட்டையை பயன்டுத்துவோரின் எண்ணிக்கையும் கட்டண உயர்வுக்கு பிறகு அதிகரித்துள்ளது. #BusFareHike

    சென்னை:

    பஸ் கட்டண உயர்வுக்கு பிறகு சென்னை மாநகர பஸ்களில் பயணிகள் கூட்டம் குறைந்தது. தினமும் 40 லட்சம் பயணிகள் பஸ்சில் பயணம் செய்து வந்த நிலையில் இந்த எண்ணிக்கை கணிசமாக குறைந்தது.

    ரெயில், ஷேர் ஆட்டோக்களை பஸ் பயணிகள் அதிகம் நாடினார்கள். இதனால் தினசரி இயக்கப்படும் 3000 மாநகர பஸ்களில் சாதாரண கட்டண பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.

    தற்போது 1200 சாதாரண கட்டண பஸ்கள் இயக்கப்படுவதால் பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. மேலும் பஸ் பயணிகளுக்கு வழங்கப்பட்ட கட்டண சலுகை பாஸ்களிலும் மாற்றம் கொண்டு வரப்பட்டது.

    ஒருநாள் பயண பாஸ் முறை கைவிடப்பட்டது. அதனால் போக்குவரத்து கழகத்திற்கு அதிக இழப்பு ஏற்படுவதால் அத்திட்டம் கைவிடப்பட்டு மாதாந்திர பாஸ் திட்டம் மட்டும் செயல் படுத்தப்பட்டு வருகிறது.

     


    தற்போது மாதம் முழுவதும் மாநகர பஸ்களில் எங்கும் பயணம் செய்து கொள்ளக்கூடிய ரூ.1000 பஸ் பாஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மற்றொரு சலுகை கட்டண பயணமும் பஸ் பயணிகளுக்கு வழங்கப்படுகிறது.

    ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு தினமும் பயணம் செய்யக்கூடிய பயண அட்டைக்கு மூன்றில் ஒரு பங்கு சலுகை அளிக்கப்படுகிறது. வேலைக்கு செல்லக் கூடியவர்கள் அதிகம் இதனை பயன்படுத்துகிறார்கள். 2 லட்சத்து 50 ஆயிரம் பயணிகள் இச்சலுகை பயணத்தில் பயணிப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    அதேபோல 1000 ரூபாய் மாதாந்திர பயண அட்டையை பயன்டுத்துவோரின் எண்ணிக்கையும் கட்டண உயர்வுக்கு பிறகு அதிகரித்துள்ளது. ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் அந்த பயண சலுகையை பெற்று வருகிறார்கள். இதன் மூலம் போக்குவரத்து கழகத்திற்கு மாதத்திற்கு ரூ.12 கோடி வருவாய் ஒரு மாதத்திற்கு முன்பே கிடைத்து விடுகிறது.

    ரூ.1000 பயண அட்டை திட்டம் போக்குவரத்து கழகத்திற்கு நஷ்டம் ஏற்படுவதாக இருந்த போதிலும் அதனை கைவிடுவதாக இல்லை என்றே தெரிகிறது.

    ஒரு பஸ்சில் பயணம் செய்ய முடியாமல் 2 அல்லது 3 பஸ்களில் மாறி மாறி பயணம் செய்யக் கூடியவர்களுக்கு ரூ.1000 பஸ் பாஸ் பயன் உள்ளதாக இருப்பதால் அதிகளவு விற்பனையாகிறது.

    ஒன்றிற்கும் மேற்பட்ட பஸ்கள் மாறி செல்வதால் கட்டணம் அதிகமாக உள்ளது. இதனால் தினசரி பஸ் பயணம் மேற்கொள்ளக் கூடியவர்கள் மாதாந்திர பஸ் பாஸ்க்கு மாறி வருகிறார்கள். இதனால் அரசுக்கு கூடுதல் இழப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. அதனால் ரூ.1000 மாதாந்திர பாசை உயர்த்த இருப்பதாகவும் தகவல் வெளியானது.

    ஆனால் அப்படிப்பட்ட எந்த முடிவும் தற்போது எடுக்கப்படவில்லை என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    140 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் இன்று இங்கிலாந்து 1000-மாவது டெஸ்டில் கால் எடுத்து வைத்துள்ளது. இந்தியா 4-வது இடத்தில் உள்ளது. #ENGvIND #1000thTest
    1877-ம் ஆண்டு முதன்முதலாக இங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்தது. அப்போது இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் மட்டுமே போட்டி நடத்தப்பட்டது. அதன்பின் தற்போது 12 அணிகள் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாட அங்கீகாரம் பெற்றுள்ளது.

    இங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் இன்று தொடங்கியது. இந்த டெஸ்டின் விளையாடியதன் மூலம் சுமார் 140 வருட காலத்தில் இங்கிலாந்து 1000-மாவது டெஸ்டில் விளையாடிய முதல் அணி என்ற சாதனையைப் படைத்துள்ளது.



    ஆஸ்திரேலியா 812 டெஸ்ட் போட்டிகளுடன் 2-வது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் 535 போட்டிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளது.



    இந்தியா 523 போட்டிகளில் விளையாடி 4-வது இடத்தில் உள்ளது. தென்ஆப்பிரிக்கா 427 போட்டிகளுடன் 5-வது இடத்திலும், நியூசிலாந்து (426) 6-வது இடத்திலும், பாகிஸ்தான் (415) 7-வது இடத்திலும், இலங்கை (274) 8-வது இடத்திலும், வங்காள தேசம் (108) 9-வது இடத்திலும் உள்ளது.
    1000 ஆண்டு பின்தேதியிட்டு டிக்கெட் வழங்கிய ரெயில்வே நிர்வாகத்தின் தவறால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக பயணிக்கு ரெயில்வே ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்க நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது. #IndianRailway #Fined
    சஹரன்பூர்:

    உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற பேராசிரியர் விஷ்ணுகாந்த் சுக்லா. இவர் கன்னஜ் நகருக்கு செல்ல ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்தார். ரெயிலில் ஏறியும் விட்டார். டிக்கெட் பரிசோதகர் அவரை பரிசோதனை செய்தபோது டிக்கெட்டில் பயண தேதியில் 2013-ம் ஆண்டு என்பதற்கு பதிலாக 3013 என்று அச்சிடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதற்காக அவர் ரூ.800 அபராதம் செலுத்துமாறு டிக்கெட் பரிசோதகர் கேட்டார். அவர் தர மறுத்தார். உடனே டிக்கெட் பரிசோதகர் அவரை நடுவழியில் இறக்கி விட்டார்.



    மன உளைச்சலுக்கு ஆளான பயணி விஷ்ணுகாந்த் சுக்லா, சஹரன்பூர் நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடுத்தார்.

    விசாரணையின்போது பயணி தான் டிக்கெட்டில் பயண தேதி சரியாக இருக்கிறதா என்று பார்த்திருக்க வேண்டும் என்று ரெயில்வே தரப்பில் வாதாடினர். ஆனால் அதை கோர்ட்டு நிராகரித்தது.

    முடிவில் பயணிக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக ரெயில்வே ரூ.10 ஆயிரம் இழப்பீடு, வழக்கு செலவு ரூ.3 ஆயிரம் வழங்க நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் டிக்கெட் கட்டணத்தை வட்டியுடன் திரும்ப செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.  #IndianRailway #Fined 
    போடி மெட்டு பகுதியில் கன மழை பெய்ததால் 1000 ஏக்கர் ஏலக்காய் கெடிகள் நாசமாகி உள்ளது.
    போடி:

    தேனி மாவட்டம் போடி ராசிங்காபுரம், சில்லமரத்துப்பட்டி, சிலமலை, தேவாரம், உத்தமபாளையம், கம்பம், கூடலூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த ஏலக்காய் விவசாயிகளுக்கு பல ஆயிரக்கணக்கான ஏலக்காய் விவசாய தோட்டங்கள் கேரள மாநிலத்தில் உள்ளது.

    கடந்த 4 நாட்களாக ஏலக்காய் விளையும் தோட்டங்கள் உள்ள கேரளா ஏலமுடி, பூப்பாறை, சாந்தாதாம்பாறை, கஜனாப்பாறை, சுண்டல், மூணாறு, வண்டன்மேடு உள்பட பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழையும், சூறாவளி காற்றுடன் பெரும் மழையும் பெய்து வருகிறது.

    இது சமயம் நேற்று வீசிய சூறாவளி காற்றுடன் கூடிய பெரும் மழையால் ஏலத்தோட்டங்களில் ஏலச்செடி நிழலுக்காக உள்ள பெரிய சிறிய மரங்கள் வேரோடு சாய்ந்தது. சாய்ந்த மரங்கள் அருகில் உள்ள ஏலச்செடிகளில் விழுந்து நாசம் ஆகின.

    சூறாவளி காற்றால் ஏலச் செடிகள் ஒன்றுக்கொன்று முறுக்கி ஒடிந்து கீழே விழுந்துது உள்ளது. இதனால் தற்போது பறிக்கும் நிலையில் உள்ள ஏலக்காய், பழங்காய்கள், கருங்காய்கள், பிஞ்சுகள் பலத்த சேதம் அடைந்தன. இதை கண்ட ஏலக்காய் விவசாயிகள் மனமுடைந்து காணப்பட்டனர். கடன் வாங்கி ஏலக்காய் விவசாயம் செய்தவர்கள் குத்தகைக்கு எடுத்தவர்கள் பல லட்சகணக்கான ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளனர்.

    இடுக்கி மாவட்டத்தில் ஏலத்தோட்டங்கள் வழியாகவும், தெருச்சாலைகள் வழியாக மின்சாரத்தை கொண்டு செல்லும் நூற்றுக்கணக்கான மின் கம்பங்கள் சூறாவளி காற்றால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 3 நாட்களாக ஏல விவசாயிகள் குடியிருக்கும் வீடுகள், ஏலக்காயை பதப்படுத்தும் ஸ்டோர்கள், இடுக்கி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் வீடுகள், கடைகள், ஓட்டல்களில் முற்றிலும் மின்சாரம் சப்ளை இல்லாமல் பெரும் திண்டாட்டத்தில் உள்ளனர்.

    ஏலக்காய் விவசாயிகள், வியாபாரிகள் ஆகியோர் போர்க்கால அடிப்படையில் கேரள மாநில அரசு செயல்பட்டு தேனி மாவட்ட ஏலக்காய் விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×