என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "100 kg tobacco"
- தமிழகம் முழுவதும் கஞ்சா மற்றும் புகையிலை இல்லாத நிலையை உருவாக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
- வேடசந்தூர் கலைஞர் நகரில் ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருந்த 100 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல் :
தமிழகம் முழுவதும் கஞ்சா மற்றும் புகையிலை இல்லாத நிலையை உருவாக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். கஞ்சா வியாபாரிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டு அவர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு வருகின்றன.
அதன் வரிசையில் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக தென் மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க்கிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் அறிவுரையின் பேரில் வேடசந்தூர் டி.எஸ்.பி. மகேஷ் தலைமையிலான போலீசார் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
வேடசந்தூர் கலைஞர் நகரில் ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருந்த 100 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
போலீசார் விசாரணையில் இதனை பதுக்கி வைத்திருந்தது நிஜாமுதீன், நசுருதீன் என தெரிய வந்தது. இவர்கள் எங்கிருந்து இதனை வாங்கி வந்தார்கள்? யார் யாருக்கெல்லாம் விற்பனை செய்ய வைத்திருந்தார்கள். இதில் தொடர்புடைய நபர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்