search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "10ம் வகுப்பு மாணவி"

    • 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது
    • முதல் நாளான நாளை, தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது

    பொதுத்தேர்வு எழுதும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து

    தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நாளை தொடங்குகிறது. இத்தேர்வை 9.38 லட்சம் மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர்.

    10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் நாளான நாளை, தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது.

    இந்நிலையில், பொதுத்தேர்வு எழுதும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதில், "தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை நாளை எழுதவுள்ள என்னருமை தம்பி, தங்கைகள் அனைவரும் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற, நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

    • பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த 10 பேர் கைது
    • ரூ. 44 ஆயிரத்து 190 ரொக்கப் பணம் மற்றும் சீட்டு கட்டுகள் பறிமுதல்

    ஈரோடு

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஆசனூர் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையி லான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டி ருந்தனர்.

    அப்போது பசுவேஸ்வரா கோவில் அருகே ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தது. அந்த கும்பலை போலீசார் சுற்றி வளைத்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த உல்லாஸ் (27), மகாதேவசவாமி (32), சங்கரா (37), மகந்தேஸ் (29), மகாதேவசாமி (34) அஞ்சு (30), ஹர்தான் (24), சந்தான், ஹரிஷ் (29), மகேஷ்(46) ஆகியோர் என்பதும் அவர்கள் பணம் வைத்து சூதாடியது தெரிய வந்தது.

    இது குறித்து ஆசனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து 10 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ. 44 ஆயிரத்து 190 ரொக்கப் பணம் மற்றும் சீட்டு கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதே போல் பங்களா புதூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது பங்களாபுதூர் அடுத்த கொண்டையம் பாளையம் பகுதியில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த சக்திவேல்(37), சந்திர மூர்த்தி (51), கணேசன் (62), உதயகுமார் (52), முருகே சன், சதீஷ்(28) ஆகியோரை பங்களப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    அவர்களிடமிருந்து ரூ.600 ரொக்க பணம், சீட்டு கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. 

    • 10-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
    • சகோதரி மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

    மதுரை

    மதுரை அச்சம்பத்து பாக்கியலட்சுமி நகரை சேர்ந்தவர் காளீஸ்வரன். இவர் அனுப்பானடியில் உள்ள சில்வர் பட்டறையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் ஹரிகரன்(வயது14). இவர் நாகமலை புதுக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    கடந்த சில வாரங்களாக பள்ளி முடிந்ததும் ஹரிகரன் வீட்டிற்கு தாமதமாக வந்ததாக தெரிகிறது. இதனை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் ஹரிகரன் மனவேதனை அடைந்தார்.

    இந்த நிலையில் நேற்று அவரது சகோதரி பிரியதர்ஷினி பள்ளி முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தபோது கதவு உள்பக்க மாக தாழிடப்பட்டிருந்தது. நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்கவில்லை. இதையடுத்து சகோதரி ஜன்னல் வழியாக பார்த்த போது, ஹரிகரன் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார் .

    இதைப்பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார்.

    தற்கொலை குறித்து தகவல் அறிந்த நாகமலை புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவரின் உடலை கைப்பற்றி மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

    பெற்றோர் கண்டித்ததால் ஹரிகரன் தற்கொலை முடிவை எடுத்ததாக தெரிகிறது. முன்னதாக மகனின் உடலை பார்த்து அவரது பெற்றோர், சகோதரி மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

    • பண்ருட்டி டி.எஸ்.பி. தனி படை போலீசார் இரவு முழுவதும் ரோந்து பணி.
    • போலீசார் 10 பேரை கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


    கடலூர்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பம் வம்பாமேடு பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 3 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்டம் பண்ருட்டி, காடாம்புலியூர், முத்தாண்டிக்குப்பம் பகுதியில் பண்ருட்டி டி.எஸ்.பி. தனி படை போலீசார் இரவு முழுவதும் நடத்திய அதிரடி வேட்டையில் காடாம்புலியூர் அடுத்த புதுப்பாளையம் சதாசிவம், கானஞ்சாவடி ஏழுமலை, வேலன்குப்பம் விக்ரமன் (25) அன்னகாரன்குப்பம் சக்திவேல்(35) எலவத்தடிகிழக்கு தெரு கட்டை என்ற சந்திரசேகர் (50)உள்ளிட்ட 10 பேரை கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் பண்ருட்டி டி.எஸ்.பி. தனி படை போலீசார் இரவு முழுவதும் நடத்திய அதிரடி வேட்டையில் திருவள்ளுவர் நகர்முத்து (30), அம்பேத்கர் நகர்சரவணன் (37), சக்திவேல்(63),பாரதி நகர் சின்னையன் (62)ஆகியோர்கள் மதுபாட்டில் வைத்திருந்ததாக போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.

    • எதிர்பாராத விதமாக சோப்பு தவறி தண்ணீரில் விழுந்தது.
    • பிரியதர்ஷினி தண்ணீருக்குள் சென்ற போது திடீரென அவரை தண்ணீர் அடித்து சென்றது.

    ஈரோடு, 

    ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த வெள்ளாங்கோவில், அம்மா நகரை சேர்ந்தவர் பழனியம்மாள். இவருக்கு பிரியதர்ஷினி (15) என்ற மகளும், நவீன்குமார் (13) என்ற மகனும் உள்ளனர்.

    இதில் பிரியதர்ஷினி வெள்ளாங்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு பொது தேர்வு எழுதி முடித்து விடுமுறையில் தற்போது வீட்டில் இருந்து வந்துள்ளார்.

    இந்நிலையில் கடந்த 29-ந் தேதி பழனியம்மாள் தனது மகள் பிரியதர்ஷினி மற்றும் மகன் நவீன் குமார் ஆகியோருடன் அதேப்பகுதியில் செல்லும் கீழ் பவானி வாய்க்கால் கரையில் துணி துவைத்து கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக சோப்பு தவறி தண்ணீரில் விழுந்தது. சோப்பை எடுப்பதற்காக பிரியதர்ஷினி தண்ணீருக்குள் சென்ற போது திடீரென அவரை தண்ணீர் அடித்து சென்றது.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தாய் கதறினார். இது குறித்து தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பிரியதர்ஷினியை தேடினர். இரவு முழுவதும் தேடி பார்த்தும் அவர் குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.

    அதனைத் தொடர்ந்து நேற்று காலை மீண்டும் உறவினர்கள் பிரியதர்ஷினியை தேடினர். அப்போது நீச்சாம் பாளையத்திலிருந்து தாசம்புதூர் செல்லும் கீழ பவானி வாய்க்காலில் துரைசாமி கோவில் அருகே பிரியதர்ஷினி பிணமாக மிதந்து வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து சிறுவல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவியின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தமிழ்நாடு அரசு தேர்வு துறையால் நடத்தப்படும் பிளஸ்-2 தேர்வு முடிவடைந்துள்ளது.
    • தேர்வினை 106 மையங்களில் எழுத இருக்கிறார்கள்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதனை 32 ஆயிரத்து 171 பேர் எழுதுகிறார்கள்.தமிழ்நாடு அரசு தேர்வு துறையால் நடத்தப்படும் பிளஸ்-2 தேர்வு முடிவடைந்துள்ளது. இதுபோல் பிளஸ்-1 தேர்வு இன்று (புதன்கிழமை) முடிவடைகிறது. இந்நிலையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை அதிகா ரிகள் செய்துள்ளனர்.

    அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் நாளை தொடங்கும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு வருகிற 20-ந் தேதி வரை நடைபெ றுகிறது. இந்த தேர்வினை 106 மையங்களில், 354 பள்ளிகளை சேர்ந்த 30 ஆயிரத்து 687 மாணவ-மாணவிகள் மற்றும் தனித்தேர்வர்கள் 1484 பேர் என மொத்தம் 32 ஆயிரத்து 171 பேர் எழுத இருக்கிறா ர்கள்.தேர்வு மையங்களில் பணியாற்ற முதன்மை கண்காணிப்பாளர்களாக 106 தலைமை ஆசிரிய ர்களும், 106 துறை அலுவலர்களும், அறை கண்காணிப்பாளராக பணியாற்ற 1780 ஆசிரி யர்களும் நியமிக்கப்ப ட்டுள்ளனர். மேலும், காப்பி அடித்தல் போன்றவற்றை தவிர்க்கும் வகையில் 178 ஆசிரியர்களை கொண்ட பறக்கும் படையும் அமைக்கப்பட்டுள்ளது. இதுபோல் தேர்வு மையத்தில் புகார் பெட்டி மற்றும் ஆலோசனை பெட்டி போன்றவைகளும் வைக்கப்பட்டுள்ளன. அனைத்து ஏற்பாடுகளும் மாவட்டத்தில் தயார் நிலையில் உள்ளன. மேலும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் வைக்கப்பட்டுள்ள மையத்திற்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளன.

    • 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது.
    • போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள ஒங்கன்புரம் மற்றும் மரூர் பகுதியில் 10 பேர் கொண்ட 2 குழுவினர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தாளவாடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது

    அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒங்கன்புரம் பகுதியில் 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர்.

    விசாரணையில் அவர்கள் தாளவாடி பகுதியை சேர்ந்த விஜய குமார் (40), பசுவராஜ் (30), சித்துராஜ் (25), அருள்ராஜ் (26), மாதேஷ் (50) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்கள் 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.மேலும் அவர்களி டமிருந்த இருசக்கர வாகனங்கள், 52 சீட்டுகள், பணம் ரூ.1,000 ஆகியவ ற்றையும் பறிமுதல் செய்த னர்.

    இதேபோல் மரூர் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த தாளவாடி பகுதியை சேர்ந்த பசுவராஜ் (35), நசீப் (52), சிவராமு (35), சிவகுமார் (41), நந்தேஷ் (47) ஆகிய 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடமிருந்து 52 சீட்டுகள், பணம் ரூ.52 ஆயிரத்து 60 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

    • அதிர்ச்சியடைந்த பெற்றோர் குளச்சல் போலீசில் புகார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து அபிலாஷை தேடி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    குளச்சல் அருகே மேற்கு நெய்யூர் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் மகன் அபிலாஷ் (வயது 15). குளச்சலில் ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.கடந்த 9-ந் தேதி மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த அபிலாஷிற்கு லேசான காய்ச்சல் இருந்த நிலையில் அறையில் படுக்க சென்றார்.

    மறுநாள் காலை பெற்றோர் அறைக்கு சென்று பார்த்த போது அபிலாஷை காணவில்லை. வீட்டிலிருந்த தந்தையின் ஸ்கூட்டர் மற்றும் பீரோவி லிருந்து ரூ.7 ஆயிரம் மற்றும் துணி மணிகளையும் எடுத்துக்கொண்டு மாய மானது தெரிய வந்தது.

    இதனால் அதிர்ச்சிய டைந்த பெற்றோர் அறையை சோதித்து பார்த்த னர். அப்போது அபிலாஷ் எழுதிய கடிதம் சிக்கியது.

    அதில் அன்புள்ள அப்பா அம்மாவுக்கு என்னை மன்னித்து விடுங்கள். எனக்கு படிப்பதற்கு விருப்பமில்லை. வீட்டில் என்னை அடிக்கடி படிக்க வற்புறுத்துவதால் வீட்டை விட்டு நான் கண்காணாத இடத்திற்கு செல்கிறேன்.

    என்னை அப்பாவும், அம்மாவும் தேட வேண்டாம். நான் கண்காணாத இடத்தில் ஓர் சிறிய கூலி வேலை செய்தாவது வாழ்கையில் முன்னேறுவேன்.அதனால் என்னை தேட வேண்டாம்.

    நான் இனி இந்த கன்னி யாகுமரி மாவட்டத்திற்கு வரவே மாட்டேன். நீங்கள் என்னை போலீசில் புகார் செய்தால், போலீஸ் என்னை பிடித்தால் நான் வரும் வழியிலேயே இறந்து விடுவேன். அதை மீறி அவர்கள் வீட்டிற்கு அழைத்து வந்தார்கள் என்றால் நான் என் வீட்டிலேயே தூக்கில் தொங்குவேன். எனவே நான் கண்காணாத இடத்தில் போய் எனக்கு பிடித்த வாழ்க்கையை வாழ்வேன். சாரி என எழுதப்பட்டிருந்தது. இது குறித்து தந்தை சதீஷ்குமார் குளச்சல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அபிலாஷை தேடி வருகின்றனர்.

    • சுமித்ராவுக்கு கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளது.
    • மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுமித்ரா மூச்சு திணறல் ஏற்பட்டு பரிதாபமாக இறந்தார்.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அடுத்த சதுமுகை முனியப்பன் கோவில் வீதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி சுந்தரி. இவர்களது மகள் சுமித்ரா (15). இவர் டி.என்.பாளையம் அருகே டி.ஜி.புதூரில் உள்ள சத்திரம் புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்நிலையில் சுமித்ராவுக்கு கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று காலை அரையாண்டு தேர்வு எழுத பள்ளிக்கு சென்ற சுமித்ராவின் உடல் நிலை மோசமானதால் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுமித்ரா மூச்சு திணறல் ஏற்பட்டு பரிதாபமாக இறந்தார். இது குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தளி பகுதியில் மஞ்சுநாத் (46) ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
    • 9ஆயிரத்து 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனை நடத்தி கஞ்சா விற்றவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.10,000 மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    திம்மாபுரம் பகுதியில் மாரியப்பன் (வயது 23), ஓசூரில் மூர்த்தி (21), காவேரிபட்டணத்தில் வசந்த் (34), பேரிகையில் ஹ்ரீஷீத்தப்பா (45), பர்கூரில் வளர்மதி (50), தளி பகுதியில் மஞ்சுநாத் (46) ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

    இதேபோல ராயக்கோட்டை பகுதியில் கோபிநாத் (46), தேன்கனிக்கோட்டை பகுதியில் செந்தில் (48), கெலமங்கலம் பகுதியில் முரளி (21), கல்லாவி பகுதியில் சார்லஸ் (23) ஆகியோரையும் கைது செய்தனர்.

    இவர்களிடமிருந்து ரூ.10.000 மதிப்பிலான 9ஆயிரத்து 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    மாங்காடு அருகே கத்திமுனையில் மிரட்டி ரியல் எஸ்டேட் அதிபரை காரில் கடத்திய சம்பவம் குறித்து 10 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
    சென்னை:

    மாங்காட்டை அடுத்த கோவூரில் வசித்து வருபவர் சுரேஷ்குமார். இலங்கையைச் சேர்ந்த இவர் கோவூரில் குடியேறி ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

    இவர் கோவூரில் உள்ள தனது வீட்டை விற்பனை செய்வதற்காக ஆன்லைனில் விளம்பரம் செய்திருந்தார். இதனை பார்த்து வீடு வாங்குவது போல 10 பேர் கொண்ட கும்பல் வந்தது.

    நேற்று மதியம் 2 மணி அளவில் சுரேஷ்குமாரின் வீட்டுக்குள் புகுந்த இந்த கும்பல் வீட்டை விலை பேசியது. அப்போது திடீரென 10 பேரும் எழுந்து சுரேஷ்குமாரை மிரட்டி கைகளை பின்னால் கட்டினர். சத்தம் போடாமல் இருப்பதற்காக வாயையும் கட்டி கத்திமுனையில் காரில் கடத்தினர்.

    இதுபற்றி சுரேஷ்குமாரின் உறவினர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீஸ் படை முடுக்கி விடப்பட்டது. ஆவடி கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் மகேஷ் தலைமையிலான 5 தனிப்படையினர் கடத்தப்பட்ட சுரேஷ்குமாரை மீட்க களம் இறங்கினர்.

    எஸ்.ஆர்.எம்.சி. உதவி கமிஷனர் பிரின்ஸ் ஆரோன், பூந்தமல்லி உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டி மற்றும் இன்ஸ்பெக்டர்கள் ராஜீவ், சந்திரசேகர், ரவிக்குமார், சிதம்பர முருகேசன், முத்துராமலிங்கம் ஆகியோர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

    கடத்தல் கும்பல் சேலம் மற்றும் சிதம்பரம் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.

    சுரேஷ்குமாரின் உறவினர் ஒருவர் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களிடம் ரூ.5 கோடி வரையில் ஏமாற்றி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இந்த பணத்துக்காகவே சுரேஷ்குமார் கடத்தப்பட்ட தும் விசாரணையில் தெரிய வந்தது.

    இதையடுத்து சேலம் மற்றும் சிதம்பரத்தில் அதிரடி வேட்டை நடத்திய போலீசார் ரியல் எஸ்டேட் அதிபர் சுரேஷ்குமாரை இன்று அதிகாலையில் மீட்டனர். 10 பேர் கொண்ட கடத்தல் கும்பலையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். சுரேஷ்குமாரின் உறவினர் ரூ. 5 கோடியை ஏமாற்றி விட்டு தலைமறைவாக உள்ளார். அவரை கண்டு பிடிப்பதற்காக கடத்தல் கும்பல் சுரேஷ்குமாருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து அச்சுறுத்தி வந்துள்ளனர்.

    மாங்காட்டை அடுத்த கோவூரில் உள்ள சுரேஷ்குமாரின் வீட்டை எழுதி தருமாறும் கடத்தல் கும்பல் மிரட்டி வந்துள்ளது. இப்படி கடத்தல் கும்பல் தொடர்ந்து தொல்லை கொடுத்து அச்சுறுத்தி வந்ததால் சுரேஷ்குார் அவர்களுக்கு தெரியாமல் வீட்டை விற்பனை செய்ய முடிவு செய்து அதற்காக ஓ.எல்.எக்சில் விளம்பரம் செய்துள்ளார்.

    இந்த விளம்பரத்தை கடத்தல் கும்பல் பார்த்து விட்டது. தங்களுக்கு தெரியாமல் சுரேஷ்குமார் வீட்டை விற்பனை செய்ய முயற்சி செய்ததை அறிந்தது. ஆத்திரம் அடைந்த கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் வீடு வாங்குவது போல நடித்து சுரேஷ்குமாரின் வீட்டுக்கு வெளிஆட்களை அனுப்பி உள்ளனர்.

    பின்னர் குண்டு கட்டாக காரில் தூக்கி போட்டு கடத்தி உள்ளனர். போலீஸ் விசாரணையில் இது தெரிய வந்துள்ளது.

    கடத்தல் கும்பலிடமிருந்து 2 கார்கள், மிரட்டலுக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைதான 10 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர்.
    ராமநாதபுரத்தில் 10-ம் வகுப்பு கணித தோ்வை 879 போ் எழுதவில்லை.
    ராமநாதபுரம்

    தமிழகத்தில் கடந்த 6-ந்தேதி முதல் 10-ம் வகுப்புக்கான அரசு பொதுத் தோ்வு நடந்து வருகிறது. நேற்று (24-ந்தேதி) கணித தோ்வு நடைபெற்றது. 

    இந்த தோ்வுக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் 17ஆயிரத்து 180 போ் அனுமதிக்கப்பட்டிருந்தனா். அவா்களில் 16 ஆயிரத்து 349 போ் தோ்வு எழுதினா். 831 போ் தோ்வு எழுதவில்லை. 

    தனித்தோ்வா்கள் 303 போ் கணித தேர்வு எழுதுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அவா்களில் 255 பேர் எழுதினா். 48 போ் தோ்வு எழுதவில்லை. 

    பள்ளி மாணவ, மாணவியா் மற்றும் தனித் தோ்வா்கள்  மொத்தம் 879 போ் கணித தோ்வு எழுதவில்லை என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

    தேர்வில் 1, 2 மதிப்பெண் வினாக்கள் எளிதாகவும், 5 மதிப்பெண் வினாக்களில் ஓரிரண்டு கடினமாக இருந்ததாகவும் மாணவ, மாணவிகள் கூறினா். அரசுப் பள்ளிகளில் பயில்வோா் தோ்ச்சி பெற்றாலும் கூடுதல் மதிப்பெண் பெறுவது கடினம் என்று ஆசிரியா்கள் தெரிவித்தனர்.
    ×