search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "anxiety"

    • உடல் மற்றும் மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் மன அழுத்தத்தை குறைக்கவும் சிறப்பு யோகா வகுப்பு நடைபெற்றது.
    • பயிற்சியில் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் கூடும் கூட்டத்தை கலைக்கவும், பயிற்சிகள் நடத்தப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவின்படி இ. ஜி.எஸ். பிள்ளை கல்லூரியில் காவலர்கள் உடல் மற்றும் மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் மன அழுத்தத்தை குறைக்கவும் சிறப்பு யோகா வகுப்பு நடைபெற்றது.

    இந்த வகுப்பில் பயிற்சிக் காவலர்கள் மற்றும் தாலுகா காவல் நிலைய காவலர்கள் 150 -க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து நாகை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் கலவர தடுப்பு ஒத்திகை நடைபெற்றது.

    இந்த பயிற்சியில் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் கூடும் கூட்டத்தை கலைக்கவும், பயிற்சிகள் வழங்கப்பட்டது.

    ×