என் மலர்
நீங்கள் தேடியது "கே.ஜி.எப்.2"
- 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடந்தது
- ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர்
குடியாத்தம்:
75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 2000 சதுர அடி பரப்பில் பாரதமாதா படம் வரையும் நிகழ்ச்சி நேற்று காலையில் தொடங்கியது.
75 மாணவிகள் கலந்து கொண்ட இந்த பாரதமாதா உருவப்படம் 40 அடி அகலத்திலும் 50 அடி நீளத்திலும் சுமார் எட்டு மணி நேரம் பணியாற்றி வரைந்தனர்.
சிறப்பாக பாரதமாதா உருவப்படத்தை வரைந்த மாணவிகளை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எம்.எஸ்.அமர்நாத், பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயஸ்ரீலி கிறிஸ்டி, நகர மன்ற உறுப்பினர் ஜாவித் அகமது, அபிராமி கல்லூரி தலைவர் எம்.என்.ஜோதிகுமார் உள்ளிட்டோர் பாராட்டினார்கள்.
மாணவிகள் வரைந்த பாரதமாதா உருவப்படத்தை ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்து பாராட்டி வருகின்றனர்.
- வங்கி கணக்கு முடக்கம் செய்யப்ப ட்டுள்ள தாகவும்,லிங்கை தொடர்புகொண்டு அப்டேட் செய்யும்படி எஸ்.எம்.எஸ். வந்துள்ளது.
- வங்கிக் கணக்கில் இருந்து ரூ.2 லட்சத்து 64 ஆயிரத்து 538 எடுக்கப்பட்டதாக எஸ்.எம்.எஸ். வந்தது.
சேலம்:
கர்நாடக மாநிலம் பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் திலக்நகர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் பதுங்கியிருந்த அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த தீவிரவாதி அக்தர் உசேன் என்பவரை கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்தனர். பின்னர் அவரை தேசிய புலனாய்வு சிறப்பு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி 10 நாட்கள் காவலில் எடுத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய மேற்கு வங்கத்தை சேர்ந்த அப்துல் அலிமுல்லா (வயது 20) சேலத்தில் பதுங்கி இருப்பதும், அவர் சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த சுரேஷ் (40) என்பவர் நடத்தி வரும் எருமாபாளையம் குட்டப்பன்காட்டில் உள்ள துணி உற்பத்தி நிறுவனத்தில் (கார்மெண்ட்ஸ்) வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார், சேலத்திற்கு வந்து அப்துல் அலிமுல்லாவை கைது செய்தனர். மேலும் அவருடன் வேலை பார்த்த மேற்கு வங்கத்தை சேர்ந்த 12-க்கும் மேற்பட்டோரிடம் சிறப்பு நுண்ணறிவுப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.சேலத்தில் பிடிபட்ட அப்துல் அலி முல்லா சமூக வலைதளங்கள் மூலம் தீவிரவாத தாக்குதல் காட்சிகள் உள்பட பல்வேறு புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்துள்ளார். இந்த நிலையில் அவரை 10 நாட்கள் காவலில் எடுத்துள்ள பெங்களூரு போலீசார், அப்துல் அலி முல்லாவை சேலம் அழைத்து வந்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர்.
சேலத்தில் புதியதாக வேலைக்கு வரும் வெளிமாநிலத்தவர்கள் குறித்த தகவலை அந்தந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில் தெரிவிக்குமாறு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
- உடன்குடி சுற்றுவட்டார காமராஜர் நற்பணி மன்றஅறக்கட்டளை சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜரின் 120-வது பிறந்த நாள் விழா உடன்குடிமேல பஜாரில்நேற்று கொண்டாடப்பட்டது.
- சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் காமராஜரின் வாழ்கை வரலாறு பற்றி விரிவாக பேசினார்.
உடன்குடி:
உடன்குடி சுற்றுவட்டார காமராஜர் நற்பணி மன்றஅறக்கட்டளை சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜரின் 120-வது பிறந்த நாள் விழா உடன்குடிமேல பஜாரில்நேற்று கொண்டாடப்பட்டது.
இதில் 2000 பேருக்கு சமபந்தி பொது விரு ந்து அன்னதான நடந்தது. இரவு 7மணிக்கும் நடந்த விழாவிற்கு இந்த அமைப்பின் தலைவர் ராம்குமார் தலைமை தாங்கினார்.
நிர்வாகிகள் நடராஜன், சிவசுப்பிரமணியன், விஜயகுமார்ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடன்குடி பேரூராட்சி துணைத் தலைவர் சந்தையடியூர் மால்ராேஜஷ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் காமராஜரின் வாழ்கை வரலாறு பற்றி விரிவாக பேசினார்.
தொடர்ந்து 10 வகுப்பு மற்றும் 12 ம்வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு தங்கப்பதக்கம் ஊக்கபரிசுகள் ஆகியவற்றை வழங்கினார். பள்ளி மாணவ- மாணவிகளுக்கு இலவச சீருடைகள், சேலைகள் உட்பட சுமார் 2000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாணவரணி மாநில துணை தலைவர் உமரி சங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், மாவட்ட பொருளாளர் ராமநாதன், உடன்குடி யூனியன்சேர்மன் பாலசிங், கிறிஸ்தியா நகரம்ஜான்பாஸ்கர்,
உடன்குடி பேரூராட்சியின் முன்னாள் கவுன்சிலர் சலீம், மற்றும்ஆர்.எஸ்.யூ.சதீஸ், பரமன்குறிச்சி இளங்கோ, மதன்ராஜ், மகாவிஷ்ணு, ரவிராஜா, சிராஜுதீன், வெற்றிவேல், மணப்பாடு ஜெயபிரகாஷ், ஜெயராமன் உடன்குடி பேரூராட்சியின் முன்னாள் மற்றும் இந்நாள் கவுன்சிலர்கள், உடன்குடி யூனியன் கவுன்சிலர்கள் உட்பட இந்த அமைப்பு நிர்வாகிகள் மற்றும் பல்வேறு கட்சி சேர்ந்த பிரமுகர்கள் திரளாக கலந்து கொண்டு காமராஜரின் புகழ் பற்றி பேசினர்.
இதற்கான ஏற்பாடுகளை காமராஜர் நற்பணி மன்ற அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- நம்பியூர் பகுதியில் 2 வீடுகளிலும் நகை- பணம் ஏதும் கிடைக்காததால் கொள்ளையர்கள் ஏமாந்து சென்றனர்.
- இதுகுறித்து நம்பியூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நம்பியூர்:
ஈரோடு மாவட்டம் நம்பியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் வேணுகோபால், வெற்றிவேல்.
வேணுகோபால் நம்பியூர் அரசு போக்குவரத்து பணிமனை கிளையில் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். வெற்றிவேல் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் செயலாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் வேணு கோபால் தனது வீட்டை நேற்று முன்தினம் பூட்டி விட்டு தனது மற்றொரு வீடான திருப்பூரில் உள்ள வீட்டில் தனது குடும்பத்துடன் தங்கியுள்ளார்.
நேற்று தனது வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைத்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ மற்றும் அறைகளில் பொருட்கள் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதேபோல் வெற்றிவேல் தனது வீட்டை இந்திராணி என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். அவரது வீட்டிலும் கதவுகள் உடைக்கப்பட்டு உள்ளே பீரோ மற்றும் அறைகளில் உள்ள பொருட்கள் சிதறி கிடந்தது.
2 வீடுகளிலும் நகை- பணம் ஏதும் கிடைக்காததால் கொள்ளையர்கள் ஏமாந்து சென்றனர். மேலும் கைரேகை தெரியாதவாறு பனியன் துணி மூலம் கைகளை துடைத்து விட்டு சென்றுள்ளனர்.
இதுகுறித்து நம்பியூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆற்றில் மூழ்கி இறந்த 2 பேர் உடல்கள் பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
- மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.
கொடுமுடி:
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அடுத்த கிழக்கு சீராபாளையம் கருப்பராயன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி தீர்த்தம் எடுப்பதற்காக அந்த பகுதியை சேர்ந்த 40 ஆண்கள் 10 பெண்கள் என சுமார் 50 பேர் மன்னாதம்பாளையம் குல விளக்கு அம்மன் கோவில் எதிரில் உள்ள காவிரி ஆற்றுக்கு வந்தனர்.
அப்போது பெருமா நல்லூர் பள்ளபாளையம் பகுதியை சேர்ந்த இளங்கோ (21), பெருமா நல்லூர் கிழக்கு சீராம் பாளையத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (32) ஆகிய 2 பேர் காவிரி ஆற்றில் இறங்கி குளித்து கொண்டு இருந்தனர். அப்போது அவர்கள் காவிரி ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கி விட்டனர்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த உடன் வந்தவர்கள் மொடக்குறிச்சி தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். மொடக்குறிச்சி தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் மோகன் தலைமையில் தீயணைப்புத் துறை வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
அவர்கள் நீரில் மூழ்கியவர்களை தேடினர் அப்போது அவர்கள் இறந்த நிலையில் மீட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மலையம்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்தவர்களின் உடலை கைப்பற்றி ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்த 2 பேரில் உடல்கள் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவர்களது உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.



Surging Into Week 2.. Crossing Borders.. Redefining History. #2Point0 Enters the 500 Crore Club! #2Point0EpicBlockbuster#2Point0@2Point0movie@rajinikanth@akshaykumar@shankarshanmugh@arrahman@iamAmyJacksonpic.twitter.com/Agq5ZMsxGB
— Lyca Productions (@LycaProductions) December 6, 2018
The Next Major Milestone for Team #2Point0 ➡️ MEGA Release In CHINA.. #2Point0InChina#2Point0MegaBlockbuster 🔥 @rajinikanth@akshaykumar@shankarshanmugh@arrahman@iamAmyJacksonpic.twitter.com/RyWsNh5sUZ
— Lyca Productions (@LycaProductions) December 4, 2018
History in the making! 400 CRORES WORLDWIDE! Not just a blockbuster, it's a MEGA BLOCKBUSTER! 🎉🎊#2Point0MegaBlockbuster#2Point0@rajinikanth@akshaykumar@shankarshanmugh@iamAmyJackson@arrahmanpic.twitter.com/er1yxuo95N
— Lyca Productions (@LycaProductions) December 3, 2018