search icon
என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • அரக்கோணம் ரெயில் நிலைய அதிகாரிகள் இந்த ரெயிலை தனியாக 6-வது பிளாட்பாரத்தில் அனுமதித்தனர்.
    • நிலக்கரி இருந்த பெட்டியின் அடிப்பகுதியில் தீ எரிவது தெரியவந்தது.

    அரக்கோணம்:

    அரக்கோணம் வழியாக கும்மிடிப்பூண்டியில் இருந்து சேலம் அணுமின் நிலையத்திற்கு நிலக்கரி ஏற்றிக்கொண்டு சரக்கு ரெயில் நேற்று நள்ளிரவு சென்று கொண்டிருந்தது.

    அப்போது திருவள்ளூர் ரெயில் நிலையத்தை கடந்த போது கடைசி பெட்டியில் புகை வந்தது. இதைப் பார்த்த திருவள்ளூர் ரெயில் நிலைய போலீசார் அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    இதனைத் தொடர்ந்து அரக்கோணம் ரெயில் நிலைய அதிகாரிகள் இந்த ரெயிலை தனியாக 6-வது பிளாட்பாரத்தில் அனுமதித்தனர்.

    பின்னர் அந்த ரெயிலின் கடைசி பெட்டியில் சோதனை செய்தனர்.

    நிலக்கரி இருந்த பெட்டியின் அடிப்பகுதியில் தீ எரிவது தெரியவந்தது. அந்தப் பெட்டியை தனியாக துண்டித்தனர்.

    உயர் மின்னழுத்த ஒயர்கள் இல்லாத பகுதிக்கு தீ பற்றிய பெட்டியை எடுத்துச் சென்றனர். பின்னர் அரக்கோணம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

    இந்த சம்பவத்தால் நேற்று நள்ளிரவு அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    ரெயிலில் பற்றி எரிந்த தீயை கவனிக்காமல் இருந்திருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டு இருக்கும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த தீ விபத்து நிலக்கரி அழுத்தம் காரணமாக ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகாலை ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை மார்க்கமாக ரேனிகுண்டா செல்லும் சரக்கு ரெயில் வந்தது.
    • தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்ட சக்கரங்களை தூக்கி நிறுத்தும் எந்திரம் வரவழைக்க ஏற்பாடு செய்தனர்.

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே மகேந்திரவாடி ரெயில் நிலையம் உள்ளது. இங்கு அதிகாலை ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை மார்க்கமாக ரேனிகுண்டா செல்லும் சரக்கு ரெயில் வந்தது.

    அதிகாலை 4.20 மணி அளவில் மகேந்திரவாடி ரெயில் நிலையம் லூப் லைன் வழியாக வரும்பொழுது சரக்கு ரெயிலின் கடைசி பெட்டியின் 4 சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு விலகி தடம் புரண்டன.

    இதையடுத்து, தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்ட சக்கரங்களை தூக்கி நிறுத்தும் எந்திரம் வரவழைக்க ஏற்பாடு செய்தனர்.

    லூப் லைனில் சக்கரங்கள் தடம் புரண்டதால் பிரதான தடத்தில் ரெயில் போக்குவரத்து பாதிப்பு இல்லை.

    • பயணிகள் நடமாட்டம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.
    • ரெயில் நிலையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    அரக்கோணம்:

    அரக்கோணம் ரெயில் நிலையத்தில் மொத்தம் 8 பிளாட்பாரம் உள்ளன. இதில் பயணிகள் நடமாட்டம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.

    இந்நிலையில் நேற்று 5-வது பிளாட்பாரத்திற்கு அரக்கோணம் அரசு ஐ.டி.ஐ. சீருடையில் 2 மாணவர்கள் வந்தனர். அவர்கள் திடீரென தண்டவாளத்தில் குதித்து கட்டி பிடித்து புரண்டனர். ஒரு மாணவன் கஞ்சா போதையில் தண்டவாளத்தில் விழ இன்னொரு மாணவன் அவனை தாங்கிப் பிடித்தான்.

    அப்போது அந்த மாணவனும் போதையில் கீழே விழுந்தான். அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் எந்த ரெயில்களும் வரவில்லை. இது ஏதோ சினிமா சூட்டிங் நடப்பது போல் அரங்கேறியது.

    இதனை கண்டு பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த ரெயில்வே போலீசார் மாணவர்களை விரட்டியடித்தனர்.

    இந்தக் காட்சி தற்பொழுது அரக்கோணம் மக்களிடையே வீடியோவாக பரவிவருகிறது.

    கஞ்சா போதையில் மாணவர்கள் ரெயில் தண்டவாளத்தில் கட்டி புரண்ட சம்பவம் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    அரக்கோணம் பகுதியில் பள்ளி கல்லூரிகள் படிக்கும் மாணவர்களுக்கு கஞ்சா விற்கும் நபர்களையும் கஞ்சா வியாபாரிகளை கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • அரசு மதுபான கடை திறந்தால் வெளி சந்தையில் மது விற்கப்படுவது தடுக்கப்படும்.
    • கடை இல்லாததால் வெளிசந்தையில் மதுபானம் அதிக விலைக்கு விற்கப்படுகிறது.

    ராணிப்பேட்டை:

    பல்வேறு அடிப்படை வசதிகள் கேட்டும் டாஸ்மாக் கடை வேண்டாம் என்றும் பொதுமக்கள் மனு அளித்து வரும் நிலையில் குடிமகன்களின் கோரிக்கை அதிகாரிகளை வியப்படைய செய்தது.

    ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே உள்ள முள்ளுவாடி கிராமத்தில் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வந்தது. இதில் அந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமான குடிமகன்கள் வந்து மது வாங்கி குடித்து பொழுதை கழித்தனர். திடீரென அந்த கடை மூடப்பட்டது.

    இதனால் அந்த பகுதி குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த ஊரில் இருந்து 18 கிலோமீட்டர் தூரத்தில் மற்றொரு டாஸ்மாக் கடை உள்ளது. அங்கு சென்று மது குடித்து வருகின்றனர். இதனால் பெட்ரோல் பயண செலவு ஏற்படுகிறது.

    அதன் காரணமாக தற்போது கிராமத்தில் கள்ள சந்தையில் கூடுதல் விலைக்கு மது வாங்கும் நிலைக்கு குடிமகன்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

    இதற்கு முடிவு கட்ட குடிமகன்கள் முடிவு செய்தனர். 40-க்கும் மேற்பட்ட மது பிரியர்கள் ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்ததாக தெரிவித்தனர்.

    எங்கள் ஊரில் ஏற்கனவே அரசு மதுபான கடை இருந்தது. தற்போது கடை இல்லாததால் இந்த பகுதியில் நாள் முழுவதும் வெளிசந்தையில் மதுபானம் அதிக விலைக்கு விற்கப்படுகிறது.

    இங்கே அரசு மதுபான கடை திறந்தால் வெளி சந்தையில் மது விற்கப்படுவது தடுக்கப்படும் மற்றும் அரசு நிர்ணயத்த விலையில் எங்களுக்கு மதுபானம் கிடைக்கும். ஆகையால் எங்கள் பகுதிக்கு அரசு மதுபான கடை அமைத்து தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அதிகாரி நேரில் ஆய்வு
    • தற்காலிக முகாம் அமைக்கப்பட்டுள்ளது

    ராணிப்பேட்டை:

    காவேரிப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட உத்தரம்பட்டு ஊராட்சியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் தற்காலிக முகாம் அமைக்கப்பட்டு இருளர் இன மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கலெக்டர் வளர்மதி, மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், திட்ட இயக்குனர் லோகநாயகி, தாசில்தார் பாலச்சந்தர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சையப்புதீன், வெங்கடேசன் ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன், கிராம நிர்வாக அலுவலர் பூபாலன், ஊராட்சி செயலாளர் சங்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • அமைச்சர் ஆர்.காந்தி சான்றிதழ் வழங்கினார்
    • நாளை விபூதி அபிஷேகம் நடைபெறுகிறது

    ராணிப்பேட்டை:

    வாலாஜா அடுத்த கீழ் புதுப்பேட்டையில் உள்ள தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர். முரளிதர சுவாமிகளின் 63வது ஜெயந்தி விழாவை முன்னிட்டும் 64 நாட்கள் சிறப்பு ஹோம பூஜைகள் , அபிஷேக, ஆராதனை களும்,64 நாட்கள் பரதநாட்டிய கலைஞர்கள் ,மாணவிகளின் நாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது.

    விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக 1200 பரதநாட்டிய கலைஞர்கள், மாணவிகள் பங்கேற்கும் நாட்டிய மஹோத்சவம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

    இந்த நாட்டிய மஹோத்சவ நிகழ்ச்சியில் பரத நாட்டிய கலைஞர்கள், மாணவிகள் என 1200 பேர் பங்கேற்று பரத நாட்டிய கலைஞர் ஷன்மதி ஒருங்கிணைப்பில் நாட்டிய நிகழ்ச்சி நடத்தினர்.

    நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு நாட்டிய நிகழ்ச்சியை பார்வையிட்டு பரத நாட்டிய கலைஞர்கள் , மாணவிகளுக்கு சான்றி தழ்களை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் ஸ்ரீபுரம் நாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மைய இயக்குனர் டாக்டர். பாலாஜி நந்தகோபால், பெங்களூர் ஹெல்த் ப்ளஸ் மருத்துவ மனை டாக்டர்.பரசுராமன், வக்கீல் மோகனமுரளி, சென்னை சந்திரசேகர செட்டி, ஆடிட்டர் தேவராஜன் , வாலாஜா ஒன்றிய குழு தலைவர் சேஷா வெங்கட், பா.ம.க. மாவட்ட செயலாளர் சரவணன், வக்கீல்கள் சங்கர், ஜானகிராமன், ஒன்றிய குழு உறுப்பினர் வேலாயுதம், நகர மன்ற உறுப்பினர் முரளி ஆகியோர் உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த 1200 பரத நாட்டிய கலைஞர்கள், மாணவிகள் பங்கேற்று நடத்திய இந்த நாட்டிய நிகழ்ச்சிக்காக தன்வந்திரி ஆரோக்ய பீடத்திற்கு சாதனை சான்றிதழ் வழங்கப்பட்டது.

    நாட்டிய மஹோத்சவ நிகழ்ச்சியை முன்னிட்டு வந்த பக்தர்கள், பொது மக்களுக்கு பீடாதிபதி.டாக்டர். முரளிதர ஸ்வாமிகள் ஆசியும், பிரசாதமும் வழங்கினார். முன்னதாக அன்னதானமும் வழங்கப்பட்டது.

    மேலும் நாளை 5-ந் தேதி பைரவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு 64 பைரவர் யாகமும், அஷ்ட கால மகா பைரவருக்கு 1000 கிலோ விபூதி அபிஷேகமும் நடைபெறுகிறது.

    பைரவர் ஜெயந்தி விழாவிற்கான ஏற்பாடுகளை தன்வந்திரி குடும்பத்தினர் செய்துள்ளனர்.

    • 20 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு
    • வருவாய் துறையினர் தடுப்பு அமைத்து கண்காணித்து வருகின்றனர்

    காவேரிப்பாக்கம்:

    வடகிழக்கு பருவமழை கடந்த ஒரு வாரமாக பெய்து வருவதால் ராணிப்பேட்டை, காவேரிப்பாக்கம், ஒச்சேரி, வாலாஜா ஆகிய பகுதிகளில் உள்ள ஏரி, குளம், குட்டைகள் ஆகியவற்றுக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளது.

    இந்த நிலையில் நேற்று பனப்பாக்கத்திலிருந்து பன்னியூர் கூட்ரோடு செல்லும் சாலையில் உள்ள கல்பலாம்பட்டு தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது.

    இதனால் பனப்பாக்கத்தி லிருந்து கல்ப லாம்பட்டு, ஆலப்பாக்கம், பன்னியூர் கூட்ரோடு, சிறுவளையம், பெருவ ளையம், கர்ணாவூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லமுடியாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

    இதனால் அப்பகுதிகளிலிருந்து காஞ்சிபுரம், நெமிலி, பனப்பாக்கத்திற்கு கல்லூரி, வேலை, மருத்துவமனை செல்வதற்கு சுமார் 7 கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டியுள்ளது.

    மேலும் பொதுமக்கள் யாரும் அவ்வழியே செல்லக்கூடாது என்பதற்கு நெமிலி வருவாய் துறையினர் தடுப்பு அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

    மழைக்காலங்களில் தரைப்பாலம் நீரில் மூழ்குவதால் அடிக்கடி போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது. எனவே மேம்பாலம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினர்.

    • நெற்பயிர்கள் நீரில் மூழ்கின
    • விநாடிக்கு 452 கனஅடி நீர் திருப்பிவிடப்பட்டுள்ளது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட் டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. பருவமழை மற்றும் மிக்ஜம் புயல் முன்னெச்சரிக்கை யாக கலெக்டர் வளர்மதி உத்தர வின்பேரில் பேரிடர் மேலாண்மை துறை, வருவாய்த்துறை, மின் வாரியம், பொதுப்ப ணித்துறை, சுகாதாரத்துறை. நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள் உட்பட பல்வேறு துறைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    மேலும், தாழ்வான பகுதிகள், நீர்நிலைகளின் கரையோரம் தங்கி உள்ளவர்கள் அப்புறப் படுத்தப்பட்டு தற்காலிக மையங்களில் தங்க வைக்கப்பட்டு வரு கின்றனர். மேலும், காவேரிப் பாக்கம்-சோளிங்கர் சாலை, ஆற்காடு-செய்யாறு செல்லும் சாலையில் நேற்று மழை காரணமாக சாய்ந்த மரங்களை உடனடி யாக அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

    ஆற்காடு, செய்யாறு பகுதியில் மரம் விழுந்த காரணத்தினால் 7 மின்கம்பங்கள் சேதமடைந்தன. தகவல் அறிந்து சென்ற நகராட்சி அதிகாரி கள், காவல்துறை யினர், மின்வாரியத்து றையினர் மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.

    மழை காரணமாக நெமிலி கிராமத்தில் சிறுவளையம் பகுதியில் 50 ஏக்கருக்கு மேல் நெற் பயிர்கள் நீரில் மூழ்கின. பனப்பாக்கம் -பன்னியூர் செல்லும் தரைப்பாலத்தில் மழை வெள்ளம் வந்ததால், போக்கு வரத்து துண்டிக்க ப்பட்டு பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்க ப்பட்டது. வருவா ய்த்துறையினர் சார்பில் தடுப்பு அமைக் கப்பட்டது.

    நெமிலி வட்டம் காவேரிப்பாக்கம் பெருவைளையம் தச்சம் பட்டறை செல்லும் தரைப் பாலத்தில் நீர்வரத்து அதிகரித்ததால். பொது மக்கள் இந்த வழித்தடத்தில் செல்லாத வண்ணம் வருவாய்த்து றையினர் தடுப்புகளை அமைத்தனர்.

    ஆற்காடு குக்குண்டி ஏரி, நெமிலி வட்டம் நாகவேடு பாடி ஏரி உட்பட பல்வேறு ஏரிகள் நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகின்றன.

    மாவட்டத்தில் பொதுப் பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மொத்தம் 369 ஏரிகளில் முழுமையாக 52 ஏரிகள் நிரம்பியுள்ளன. பாலாறு அணைக்கட்டில் இருந்து மகேந்திராவாடிக்கு 89 கன அடியும், காவேரிப்பா க்கத்துக்கு 133, சக்கரமல்லூரக்கு 65, தூசி 165 என ஆகிய ஏரிகளுக்கு விநாடிக்கு மொத்தம் 452 கனஅடி நீர் திருப்பிவிடப்பட்டுள்ளது.

    • சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் வரும் 4ம் தேதி (திங்கட்கிழமை) அன்று பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை.
    • செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் வரும் திங்கள் அன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

    மிச்சாங் புயல் தீவிரமடைந்துள்ளதால், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் எனவும், குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கும் ரெட் அலார்ட் (பலத்த மழை) எச்சரிக்கையும் விடுத்து வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இதன் எதிரொலியால், சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் வரும் 4ம் தேதி (திங்கட்கிழமை) அன்று பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உத்தரவிட்டுள்ளார்.

    இதேபோல், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் வரும் திங்கள் அன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    4 மாவட்டங்களைத் தொடர்ந்து, புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் வளர்மதி உத்தரவிட்டுள்ளார்.

    தொடர்ந்து, விழுப்புரத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவிட்டுள்ளார்.

    கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    வேலூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மின்கம்பங்களில் கால்நடைகளை கட்டி வைப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்
    • மரங்களுக்கு கீழே நிற்பதை தவிர்க்க அறிவுரை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், அதனை எதிர்கொள்ள ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

    இதுவரை செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் வளர்மதி கூறியதாவது:-

    மாவட்டத்தில் குறிப்பாக தாழ்வான பகுதியில் வசிக்கும் பொதுமக்களை தங்க வைக்க உணவு, குடிநீர், கழிவறை ஆகிய வசதிகளுடன் 48 முகாம்கள் தயார் நிலையில் உள்ளது.

    மேலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதால் தேவையில்லாமல் பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும், மின்கம்பங்களை கைகளால் தொடுவதோ, கால்நடைகளை கட்டி வைப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.

    இடி, மின்னல் ஏற்படும் நேரங்களில், மரங்களுக்கு கீழே நிற்பதை தவிர்க்க வேண்டும். ராணிப்பேட்டை மாவட்டத்தில் மழை பாதிப்பு குறித்து பொதுமக்கள் 8300929401 என்ற வாட்ஸ் அப் எண் வாயிலாக தெரிவிக்கலாம்.

    இவ்வாறு கலெக்டர் கூறினார்.

    மேலும் மழை பாதிப்புகள் குறித்து புகார்கள் தெரிவிக்க தாலுகா வாரியாக தொடர்பு எண்களையும் கலெக்டர் வெளியிட்டார்.

    • நிலுவையில் உள்ள மனுக்களை உடனடியாக விசாரிக்க உத்தரவு
    • குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை பெற்றுத்தர அறிவுறுத்தினார்

    கலவை:

    ஆற்காடு டவுன் போலீஸ் நிலையத்தில் வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி ஆய்வு செய்தார். அப்போது அனைத்து பதிவேடுகளையும் ஆய்வு செய்தார்.

    பின்னர் மனுக்கள் மீதான விசாரணை மற்றும் நிலுவையிலுள்ள மனுக்கள் பற்றி கேட்டறிந்தார். நிலுவையில் உள்ள மனுக்களை உடனடியாக விசாரணை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும் என்று உத்தர விட்டார்.

    பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வழக்குகளில் விரைந்து புலன் விசாரணை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து நீதிமன்றத்தில் குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, ஆற்காடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி மற்றும் சப்- இன்ஸ்பெக்டர்கள், போலீசார் உடன் இருந்தனர்.

    • மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
    • குடிசை வீடுகளையும் நேரில் பார்வையிட்டர்

    காவேரிப்பாக்கம்:

    தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளதால் புயல் முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் பனப்பாக்கம் பேரூராட்சியில் தாழ்வான பகுதிகளில் முன்னேற்பாடு பணிகள் மேற்கொண்டுள்ளதையும், கசக்கால்வாய் பகுதிகளில் உள்ள குடிசை வீடுகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது கலெக்டர் வளர்மதி, மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, பேரூராட்சி செயல் அலுவலர் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

    ×