என் மலர்

    புதுக்கோட்டை - Page 2

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நார்த்தாமலை முத்துமாரியம்மன் ேகாவில் தேர்த்திருவிழா: நடைபெறுவதை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை
    • 29ம்தேதி வேலை நாளாக அறிவிப்பு

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்வான தேர்த்திருவிழா வருகிற 10-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி அன்றைய தினம் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.மேலும் அதற்கு பதிலாக 29-ந் தேதி (சனிக்கிழமை) அன்று பணிநாள் எனவும், வழக்கமாக சனிக்கிழமைகளை பணி நாளாக கொண்ட அலுவலகங்களுக்கு 30-ந் தேதி (ஞாயிற்றுக் கிழமை) அன்று பணிநாள் ஆகும். மேலும் இந்த உள்ளூர் விடுமுறை நாளன்று புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மாவட்ட கருவூலகம் மற்றும் சார்நிலை கருவூலகங்களும் குறைந்தபட்ச அலுவலர்களுடன் அரசின் பாதுகாப்பினை கருதியும் அவசர அலுவலகள் மேற்கொள்ளும் பொருட்டும் திறந்திருக்கும். மேலும் அரசு பொதுத்தேர்வுகள், அரசு அறிவித்த தேதிகளில் நடைபெறும் என கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நடவடிக்கை எடுக்க தி.மு.க. கவுன்சிலர் வலியுறுத்தல்
    • புதுக்கோட்டை நகராட்சி கூட்டத்தில் காரசார விவாதம்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை நகராட்சி கூட்டம் தலைவர் திலகவதி செந்தில் தலைமையில் நடைபெற்றது. இதில் துணைத்தலைவர் லியாகத்அலி, ஆணையர் நாகராஜன், மற்றும் அதிகாரிகள், நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.கூட்டத்தில் தலைவர் திலகவதி செந்தில் பேசுகையில், உறுப்பினர்களின் கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்ற அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 42 வார்டுகளிலும் தெரு விளக்குகள் அனைத்தும் எரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குடிதண்ணீர் கிடைக்கவும், முக்கியமாக அடிப்படை வசதிகள் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.மேலும் கலைஞர் கருணாநிதி மகளிர் கலைக்கல்லூரி எதிரே அமைக்கப்பட்டு வரும் பூங்காவிற்கு கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது பெயரை பூங்காவிற்கு வைக்க அனைத்து உறுப்பினர்கள் ஆதரவோடு தீர்மானம் கொண்டு வந்தார். மேலும் குடிநீர் மானியமாக ரூ.35 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    எஸ்.ஏ.எஸ்.சேட் (அ.தி.மு.க.) பேசுகையில், தனது வார்டான 16-ல் பல்லவன் குளம் அருகே சுகாதார வளாகம் அமைக்க தீர்மானம் கொண்டு வந்ததற்கு நன்றி. எனது வார்டு பகுதியில் 20 சந்துகள் உள்ளன. அவற்றில் குப்பைகள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது வார்டு அ.தி.மு.க. என்பதால் புறக்கணிக்கப்படுகிறதா? தற்போது கூட குடிதண்ணீர் வரவில்லை. வராத தண்ணீருக்கு வரி கேட்க முடியாது. நகரை சுற்றி உள்ள 25 வார்டுகளில் அதிகமாக குடிநீர் இணைப்பு உள்ளது. அதனால் நகர்புறத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து குடிதண்ணீர் பிரச்சினையை போக்குங்கள் என்றார்.

    பர்வேஸ் (விஜய் மக்கள் இயக்கம்) பேசுகையில், வார்டுகளில் உறுப்பினராக எதற்காக இருக்கிறோம் நாங்கள். எங்கள் வார்டுகளில் டெண்டர் விடும்போது தெரிவிக்க வேண்டும். மேலும் விஸ்வதாஸ் நகரில் தெருவிளக்குகள் இல்லை. அரிமா லைட் நமக்கு நாமே திட்டத்தில் அறிவிக்கப்பட்டு வெறும் அறிவிப்போடு உள்ளது. நான் வளர்ந்து வரும் நகர்மன்ற உறுப்பினர். நான் அடுத்த நிலைக்கு செல்லவேண்டும் என்றால் மக்களின் பிரச்சினைகளை இந்த 5 வருடத்தில் தீர்க்க நடவடிக்கை எடுத்தால் மட்டுமே முடியும். அதிகாரிகளுக்கு அப்படியில்லை. 60 வயது வரை பணியாற்ற முடியும் என்றார்.

    மதியழகன் (தி.மு.க.) பேசுகையில், எனது வார்டு பகுதியில் 2 இன்ச் பைப் லைன் முழுவதுமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தரவேண்டும். மேலும் பாதாள சாக்கடை திட்டம் எப்போது நடைமுறைபடுத்தப்படும் என்பதை தெளிவாக கூறவேண்டும் என்றார்.

    வளர்மதி சாத்தையா (தி.மு.க.) பேசுகையில், எனது வார்டு பகுதியான பாரத் நகரில் சாலை மோசமாக உள்ளது. இங்கு சாலை அமைத்து 18 வருடம் ஆகிறது. ஆனால் அதிகாரிகள் 5 ஆண்டுகளுக்கு முன்னர்தான் சாலை போடப்பட்டது என்கின்றனர். இதில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    மூர்த்தி (தி.மு.க.) பேசுகையில் 2023-24க்கு எனது வார்டுக்கு ரூ.5 லட்சம் ஒதுக்கப்பட்டதற்கு நன்றி. அதற்கு உடனடியாக பணி ஆணை கொடுக்க வேண்டும். பணிகளை விரைந்து ஒதுக்க வேண்டும் என்றார். மேலும் நகராட்சி பட்ஜெட் எப்போது தாக்கல் செய்யப்படுகிறது என்பதை தெரிவிக்க வேண்டும். புதிய பேருந்து நிலையத்திற்குள் செல்ல முடியாத அளவிற்கு துர்நாற்றம் (சிறுநீர்) அனைத்து பகுதிகளிலும் வீசுகிறது.

    எனது வார்டு பகுதியில் புதிதாக கட்டிடம் கட்டுபவர்கள் சந்தில் கட்டிட கழிவுகளை கொட்டுவதால் சாக்கடைகள் அடைத்துக் கொள்ளும் நிலை தொடர்ச்சியாக உள்ளது. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தி.மு.க. அரசிற்கு கெட்ட பெயர் உருவாக்கும் விதமாக சொத்துவரியை அதிகாரிகள் அதிகளவில் போட்டுள்ளனர். அதை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். அப்போது துணைத்தலைவர் குறுக்கிட்டு ஆட்சியை பற்றி பேசவேண்டாம் என தெரிவித்தார்.

    கவிவேந்தன் (தி.மு.க.) பேசுகையில், எனது வார்டு பகுதியில் சாலை அமைக்கும் ஒப்பந்தகாரர் சாலை அமைக்கும் போது தெரிவிப்பது இல்லை. சாலையை இஷ்டத்திற்கு அதிகாரிகள் துணையோடு போடுகின்றனர். சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அராஜக போக்கில் ஈடுபடும் ஒப்பந்தகாரர் அரவிந்த் உரிமம் ரத்து செய்யவேண்டும் என்றார்.

    பழனிவேல் (தி.மு.க.) பேசுகையில், சிங்கமுத்து அய்யனார் கோவிலிலிருந்து சமுத்துவபுரம் செல்லும் சாலை மோசமாக உள்ளது. மேலும் முல்லை நகரில் வீடுகளில் பயன்படுத்தும் கழிவு தண்ணீரை சாலைகளில் திருப்பி விட்டுள்ளனர். இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சமத்துவ பூங்கா அமைக்க 11 ஆயிரம் சதுர அடி இடம் உள்ளது. அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 20-க்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் எரியவில்லை என்றார்.இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பழுதுநீக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கியது
    • உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை

    பொன்னமராவதி,

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அடுத்த தச்சம்பட்டியைச் சேர்ந்த வர் மலையாண்டி (வயது 47). இவர் மின்மாற்றியில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக இவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட மலையாண்டி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பொன்னமராவதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அறந்தாங்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவருக்கு நேர்ந்த கொடூரம்
    • உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

    அறந்தாங்கி,

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே சிதம்பரவிடுதி பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (வயது 31). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த நடராஜன் என்பவருக்கும் வாய்த்தகராறு காரணமாக அடிதடி சண்டை ஏற்பட்டுள்ளது.இதில் சுதாகருக்கு கை, கால் பகுதிகளில் காயம் ஏற்பட்டதையடுத்து அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் சுதாகர் மீது ஆத்திரம் குறையாத நடராஜன், தனது ஆதரவாளர்கள் 2 பேருடன் மருத்துவமனைக்குச் சென்று அங்கு சிகிச்சையிலிருந்த சுதாகரின் கழுத்தில் பிளேடால் அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய சுதாகருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்துவருகின்றனர்.இதனை கண்டித்து சுதாகரின் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்திற்கு முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த அறந்தாங்கி காவல்த்துறையினர் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என உறுதி அளித்தனர். காவல்த்துறையினரின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து உறவினர்கள் தற்காலிகமாக கலைந்து சென்றனர். அரசு மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த நபரின் கழுத்தை பிளேடால் அறுத்த சம்பவம் சக நோயாளிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 1351 நீர் நிலைகளில் மண்பாண்டத்திற்காக மண் எடுக்க அனுமதி
    • கலெக்டர் கவிதா ராமு அறிவிப்பு

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 1351 கண்மாய் மற்றும் குளங்களில், விவசாயிகள், மண்பாண்டம் செய்பவர் கள், மண்பாண்டம் செய்யும் கூட்டுறவு சங்கம் ஆகியோர் கண்மாய் மற்றும் குளங்களில் இருந்து இலவசமாக வண்டல் மண் மற்றும் களிமண்ணை எடுத்து பயன்படுத்தலாம். வண்டல் மண் பெறும் விவசாயிகள் சம்மந்தப்பட்ட வருவாய் கிராமத்திலோ அல்லது அதற்கு அருகிலுள்ள வருவாய் கிராமத்திலோ வசிக்க வேண்டும். விவசாயிகள் வண்டல் எடுக்க அடங்கல் மற்றும் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கிராம நிர்வாக அலுவலரின் சான்றுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள உதவி இயக்குநர் (கனிமம் மற்றும் சுரங்கம் பிரிவிற்கு ) அனுப்பி அனுமதி பெற்றுகொள்ளலாம்.நன்செய் நிலத்திற்கு ஏக்கருக்கு 75 கனமீட்டர், ஹெக்டேருக்கு 185 கனமீட்டர், புன்செய் நிலத்திற்கு ஏக்கருக்கு 90 கனமீட்டர் ஹெக்டேருக்கு 222 கனமீட்டர் , மண்பாண்டம் செய்ய 60 கனமீட்டர் என்ற அளவிற்கு வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்படும்.வண்டல் மண் எடுக்கும் போது கீழ்கண்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். குளத்தின் கரையின் உயரத்தின் இரண்டு மடங்கு தொலைவில் சம்மந்தப்பட்ட பொறியாளர் களால் நிர்ணயி க்கப்பட்ட இடத்தில் வண்டல் மண் அள்ள வேண்டும். ஓரு மீட்டர் ஆழத்திற்கு மேல் மண் அள்ளக்கூடாது. மேலும் குளத்தின் கரையை பாதையாக பயன்படுத்தக்கூடாது. குளத்தின் கரையின் குறுக்கே குறுக்கு பாதைகள் ஏற்படு த்தக்கூடாது. வண்டல் மண்ணை எக்காரணம் கொண்டு சேமித்து வைக்க அனுமதி இல்லை. வண்டல் மண் எடுக்கும் போது கரை, மதகு அல்லது கட்டுமான வேலைப்பா டுகளுக்கு எவ்வித சேதமும் ஏற்படுத்த க்கூடாது. டிரக்டரில் மட்டுமே வண்டல் மண் எடுத்து செல்ல வேண்டும் என மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்து ள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கல்லூரி சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை
    • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை

    ஆலங்குடி.

    ஆலங்குடி அருகே உள்ள வம்பன் மாஞ்சன்விடுதியைச் சேர்ந்தவர் கருப்பையா மகள் நந்தினி (வயது 19). இவர் புதுக்கோட்டையில் ஒரு கல் லூரியில் பிஎஸ்சி கணிதவியல் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். வழக்கம் போல் கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நட்பு வட்டாரங்களில் தேடியும் கிடைக்காததால், கருப்பையா ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் ஆலங்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நதியா வழக்கு பதிவு செய்து காணாமல் போன கல்லூரி பெண்ணை தேடி வருகிறார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திருமணஞ்சேரி கோவிலில் திருமணம் செய்து கொண்ட பின்னர் காவல் நிலையத்தில் தஞ்சம்
    • இருதரப்பு வீட்டாரிடமும் போலீசார் சமரசம்

    ஆலங்குடி.

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே நல்லண்டார் கொல்லையை சேர்ந்த அழகர் மகன் வீரமணி (வயது 27)) இவரும், கந்தர்வகோட்டை தாலுகா கல்லாக் கோட்டை சேர்ந்த பழனிவேல் மகள் சினேகாவும் (வயது 19) கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.இந்நிலையில் இருவரும் கறம்பக்குடி அருகே உள்ள திரும ணஞ்சேரி கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் காதல் ஜோடி தங்களுக்கு ப ாதுகாப்பு வழங்குமாறு ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் உஷா நந்தினி இருதரப்பு வீட்டாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் காதல் ஜோடியை வீரமணியின் பெற்றோர் அழைத்து சென்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஈசன் அம்பாளுக்கு திருமாங்கல்யம் சூட்டினார்
    • ஏராளமான பக்தர்கள் பக்தியுடன் கலந்து கொண்டு சாமி தரிசனம்

    ஆலங்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நகரில் அமைந்துள்ள அறம் வளர்த்த நாயகி சமேத பேரூராண்டார் திருக்கோவில் குடமுழுக்கு விழா நேற்றைய முன் தினம் வெகு விமரிசையாக நடைபெற்று முடிந்தது. இதனை தொடர்ந்து தேரோடும் வீதியில் பட்டனப் பிரவேசமும், பரதநாட்டிய அரங்கேற்றமும் நடைபெற்றது.இதையடுத்து, ஈசன் நாமபுரீஸ்வரருக்கும், அம்பாள் தர்மஸம்வர்த்தினிக்கும் நேற்று திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதையொட்டி சுவாமி-அம்பாளுக்கு பல்வேறு விதமான அபிஷேகங்கள் நடைபெற்றன.சந்தன காப்பு அலங்காரத்தில் ஈசன் காட்சியளித்தார். சிவனடியார்களால் திருவாசகம், முற்றோதுதல் நடைபெற்றன. இதில் பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் சிறிய ரச தேரில் திருமண மேடை அமைக்கப்பட்டது. இதில், உற்சவ மூர்த்திகளான ஈசன், அம்பாள் திருவுருவங்கள் மணக்கோலத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சிவன் கோவில் அருகே உள்ள நாடியம்மாள் கோவிலிருந்து திருமாங்கலியம், பட்டு வஸ்திரங்கள், தேங்காய், பழங்கள், இனிப்புகள் போன்ற சீர்வரிசைகளோடு மேள தாளம் முழங்க மணமேடைக்கு கொண்டு வரப்பட்டது. ஈசன்- அம்பாளுக்கு பட்டு வஸ்திரங்களால் அலங்காரம் ெ சய்யப்பட்டு மாலைகள் அணிவிக்கப்பட்டன. சிவச்சாரியார்கள் மந்திரங்கள் ஓதினர். பல சடங்குகளுக்கு பின் புதிய திருமாங்கல்யம் கொண்டு ஈசன்- அம்பாளுக்கு திருமாங்கல்யம் சூட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.தொடர்ந்து அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இந்த திருக்கல்யாண வைபவத்தை காண வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஆலங்குடி சொர்ண பைரவ சிவாச்சாரியர் குழுவினர் தெய்வானை திருக்கல்யாண விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நஷ்டஈடு கேட்டு போராட்டத்தில் குதித்த விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம்
    • விவசாயிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் அதிகாரிகள் உறுதி

    அறந்தாங்கி,

    புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் சுமார் 3600 ஹெக்டர் பரப்பளவில் விவசாயிகள் நெற்பயிர் சாகுபடி செய்திருந்தனர். இப்பகுதியில் போதிய பருவமழை பெய்யாததால் விவசாயம் செய்து 100 நாட்களிலேயே பயிர்கள் அனைத்தும் கருகி சருகானது. இதனால் வேதனையடைந்த விவசாயிகள் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் சென்று முறையிட்டனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அதிகாரிகள் சம்மந்தப்பட்ட இடங்களை நேரில் ஆய்வு மேற்கொண்டு சுமார் 1763 ஹெக்டர் பரப்பளவில் பயிர்கள் சேதமடைந்ததாக கணக்கெடுத்துச் சென்றுள்ளனர்.இதற்கிடையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த நெற்பயிர்களுக்கு தமிழக அரசால் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மழை வெள்ள பாதிப்பிற்கு முன்பே வறட்சியால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு இதுவரை நிவாரணம் வழங்கப்படவில்லையென வேதனை தெரிவித்த விவசாயிகள் உரிய நிவாரணம் கேட்டு மணமேல்குடி கிழக்கு கடற்கரை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முற்பட்டனர்.

    தகவலறிந்த வட்டாட்சியர் ராஜா, காவல்த்துறையினர் உள்ளிட்டோர் விவசாயிகளை அழைத்து மணமேல்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விவசாயிகள் தமிழக அரசு விவசாயிகளின் வாழ்வாதாரம் கருதி ஏக்கர் ஒன்றிற்கு 30 ஆயிரம் வழங்க வேண்டும், மேலும் பயிர் காப்பீடு செய்யப்பட்ட நிலங்களுக்கு இழப்பீட்டுத் தொகை கிடைத்திட காப்பீட்டு நிறுவனங்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று கொண்ட அதிகாரிகள் உங்களது கோரிக்கைகள் கலெக்டர் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது, இன்னும் 1 மாத காலத்திற்குள் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்தனர். அதிகாரிகளின் உறுதியளிப்பைத் தொடர்ந்து விவசாயிகள் தற்காலிகமாக போராட்டத்தை ஒத்தி வைத்து கலைந்து சென்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அரசு கல்லூரி மாணவர்களின் நாட்டு நலதிட்ட பணி முகாம் கந்தர்வகோட்டையில் நடைபெற்றது
    • தூய்மை பணியில் ஈடுபட்ட மாணவர்கள்

    கந்தர்வகோட்டை,

    தொந்தரவு கோட்டை அருகே அரசு கல்லூரி மாணவர்களின் நாட்டு நடப்பனி முகாம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த புதுப்பட்டி அரசு தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களின் நாட்டு நல பணி திட்ட முகாம் மட்டங்கால் கிராமத்தில் நடைபெற்றது. மட்டங்கால் கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில், கருப்பு கோவில், பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளை நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் தூய்மைப்படுத்தி வர்ணம் அடித்து அழகுப்படுத்தினர்.. மேலும் கிராம மக்களிடம் சுகாதாரம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முகாமில் தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர், இயக்குனர் சங்க மாநில செய்தி தொடர்பாளர் முத்தையன் கலந்து கொண்டு பேரிடர் விழிப்புணர்வு பற்றி மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் அசோக் ராஜன், முகாம் ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார், செஞ்சிலுவை சங்க பொறுப்பாளர் சையது ஆலம், கல்லூரி மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நாமபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தில் நெகிழ்ச்சி
    • பக்தர்களுக்கு குடிநீர் வழங்கிய இஸ்லாமியர்கள்

    ஆலங்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள த ர்மஸம்வர்த்தினி சமேத நாமபுரீஸ்வரர் கோவில் சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழமை வாய்ந்த கோவிலாகும். திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி குருஸ்தலத்திற்கு அடுத்தபடியாக இந்த கோவில் 2-வது குருஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டு கோவிலை புதுப்பிக்கும் பணி நடைபெற்று நிறைவடைந்தது.இதை தொடர்ந்து கோவில் முன்பு யாகசாலை அமைக்கப்பட்டு, சிவாச்சரியார்கள் பல்வேறு பூஜைகளை செய்து வந்தனர். மேலும் கும்பாபிஷேக விழாவிற்காக, ஆலங்குடி சுற்று வட்டார பகுதியில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் மற்றும் அனைத்து மத வழிபாட்டு தலங்களுக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது. சிவாச்சாரியாகர்கள் மற்றும் பெண்கள் ஊர்வலமாக சீர்வரிசை எடுத்து வந்தனர். இதே போல் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மக்கள் சீர்வரிசை எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். அவற்றை கோவில் நிர்வாகத்தினர் பெற்றுக்கொண்டனர்.

    இந்நிலையில் யாக பூஜை நடைபெற்றன. இதையடுத்து பல்வேறு புனித தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை சிவாச்