search icon
என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்களில் 1.24 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது
    • வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 7,158 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், எறையூர் சர்க்கரை ஆலை நேரு தொடக்கப்பள்ளி மற்றும் மங்களமேடு டி.இ.எல்.சி பள்ளிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாம் நடைபெற்றது. இதனை கலெக்டர் கற்பகம் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் தெரிவித்த தாவது:-

    பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும், குறிப்பாக 1.1.2024-இல் 18 வயது பூர்த்தியடையும் இளம் வாக்காளர்கள் விடுமுறை நாள்களில் நடைபெறும் இம் முகாம்களை பயன் படுத்திக்கொள்ளலாம்.மாவட்டம் முழுவதும் கடந்த 25-ந் தேதி (சனிக்கிழமை) நடைபெற்ற முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 1,554 விண்ணப்பங்களும், பெயர் நீக்க 89 விண்ணப்பங்களும், பெயர் திருத்தம், முகவரி மாற்றம் செய்ய 863 விண்ணப்பங்களும் வழங்கப்பட்டுள்ளது.மாவட்டத்தில், இதுவரை நடைபெற்ற முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 7,158 விண்ணப்பங்களும், பெயர் நீக்க 588 விண்ணப்பங்களும், வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், முகவரி மாற்றம் செய்ய 5,247 விண்ணப்பங்களும் என மொத்தம் 1,23,993 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். 

    • பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு மேல்நி லை ப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் உண்ணாவிரத போரா ட்டம் நடந்தது.
    • இதில் தேர்தல் அறிக்கையின்படி தமிழக அரசு தன்பங்களிப்பு ஓய்வூ தியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்திட வேண்டும்,

    பெரம்பலூர்

    பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு மேல்நி லை ப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் உண்ணாவிரத போரா ட்டம் நடந்தது.

    போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் பழனி வேலன் தலைமை வகித்தார். தலைமையிடத்து செய லாளர் இளையராஜா, மா வட்ட மகளிரணி செய லாளர் ராகமஞ்சரி ஆகி யோர் முன்னிலை வகித்த னர். சிறப்பு விருந்தின ர்களாக தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட துணை செயலாளர் மணிவ ண்ணன், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் சுப்பிரமணியன், ராஜா சிதம்பரம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    இதில் தேர்தல் அறிக்கையின்படி தமிழக அரசு தன்பங்களிப்பு ஓய்வூ தியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்திட வேண்டும், ஆசிரி யர்களு க்கான பணிப்பா துகாப்புச் சட்டம் இயற்றிட வேண்டும் என்பது உட்பட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறு த்தப்பட்டது.

    இதில் தலைமை யாசிரியர்கள் ராஜேந்திரன், முருகானந்தம், அய்யம்பெருமாள், வெங்கடேசன், முன்னாள் மாவட்ட செயலாளர் வையாபுரி, முன்னாள் மாவட்ட பொருளாளர் ராம சமி உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட செய லாளர் ராஜேந்திரன் வரவே ற்றார். முடிவில் மாவட்ட பொருளாளர் ஜானகிராமன் நன்றி கூறினார்.

    • இணைய வழியில் இளம் வாக்காளர்களை சேர்க்கும் சிறப்பு முகாம் மாவட்ட தேர்தல் அலு வலரும் மாவட்ட கலெ க்டருமான கற்பகம் தலைமை யில் ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
    • 17 வயது பூர்த்தியடைந்தவர்களும் விண்ணப்பங்களை வழங்க லாம். உங்களுக்கு 18 வயது பூர்த்தியாகும்போது உங்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் வகையில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

    பெரம்பலூர்

    வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விளக்கும் வகையிலும், 18 வயது நிரம்பிய வாக்காள ர்களை வாக்காளர் பட்டிய லில் சேர்ப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இணைய வழியில் இளம் வாக்காளர்களை சேர்க்கும் சிறப்பு முகாம் மாவட்ட தேர்தல் அலு வலரும் மாவட்ட கலெ க்டருமான கற்பகம் தலைமை யில் ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    இந்நிகழ்வில் 1000க்கும் மேற்பட்ட மாணவ மாண விகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் தெரிவி த்ததாவது:-

    பெரம்பலூர் மாவட்டத்தில் வெளியிட ப்பட்டுள்ள வரை வு வாக்காளர் பட்டியலின்படி, பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் உள்ள 332 வாக்கு சாவடி களில் மொத்தம் 2,94,314 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1,43,585 ஆண் வாக்கா ளர்களும், 1,50,721 பெண் வாக்காளர்களும், 8 இதர வாக்காளர்களும் உள்ளனர். குன்னம் சட்டமன்ற தொகு தியில் உள்ள 320 வாக்கு சாவடிகளில் மொத்தம் 2,68,185 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1,32,906 ஆண் வாக்காளர்களும், 1,35,279 பெண் வாக்காள ர்களும், உள்ளனர்.

    இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி,2024 ஜன 1-ந் தேதி 18 வயது பூர்த்தியடையும் அனைத்து தகுதியுள்ள நபர்களும் தங்களது பெயரினை வா க்காளர் பட்டியலில் சேர்த்தி டவும், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், முகவரி திருத்தம் மற்றும் பெயர் நீக்கல் போ ன்றவற்றிற்கான விண்ண ப்பங்களை சிறப்பு முகாம் நடைபெறும் நாட்களில் தொடர்புடைய வாக்கு ச்சாவடி நிலை அலு வலர்களிடம் அளிக்கலாம்.

    17 வயது பூர்த்தியடைந்தவர்களும் விண்ணப்பங்களை வழங்க லாம். உங்களுக்கு 18 வயது பூர்த்தியாகும்போது உங்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் வகையில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. 18 வயது பூர்த்தியடைந்த மாணவ மாணவிகள் அனைவரும் தங்களது பெயரை வாக்கா ளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் புதிய வாக்காளர்களாக தங்களை பதிவு செய்து கொள்ள மாணவ மாணவி கள் அனைவருக்கும் படிவம் 6 வழங்கப்பட்டது. இணைய தளம் வாயிலாகவும் வாக்கா ளர் பதிவு நடைபெற்றது. இந்த படிவங்களை பிழையி ன்றி சிறப்பாக பூர்த்தி செய்த முதல் 10 மாணவ மாணவி களுக்கு தலா ரூ.500 வீதம் பரிசுத்தொகையினை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர்(பொ) சத்தி ய பாலகங்காதரன், ராமகி ருஷ்ணா கல்வி நிறுவ னங்களின் தலைவர் சிவ சுப்ரமணியன், செயலாளர் விவே கானந்தன், பெரம்ப லூர் தாசில்தார் சரவண ன், தேர்தல் பிரிவு வட்டாட்சி யர் அருளானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பெரம்பலூர் மாவட்ட நேரு யுவ கேந்திரா மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம், இணைந்து இந்திய அரசியலமைப்பு நாள் நிகழ்ச்சியை நடத்தியது.
    • இந்திய அரசியலமைப்பு குறித்த வினாடி வினா நிகழ்ச்சி நடத்தப்பட்டு அதில் வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்ட நேரு யுவ கேந்திரா மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம், இணைந்து இந்திய அரசியலமைப்பு நாள் நிகழ்ச்சியை நடத்தியது.

    பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். நேரு யுவகேந்திரா மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் கீர்த்தனா முன்னிலை வகித்தார். இதில் மாணவ,மாணவிகளுக்கு இந்திய அரசியலமைப்பு குறித்த வினாடி வினா நிகழ்ச்சி நடத்தப்பட்டு அதில் வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட பயிற்சி மைய மாணவர்கள் கலந்துகொண்டனர்.

    முன்னதாக இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் தமிழ் பாக்யா வரவேற்றார். நேருயுகேந்திரா கணக்காளர் தமிழரசன் நன்றி கூறினார்.

    • வங்ககடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது.
    • பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் மொத்த மழை அளவு 400 மி.மீ. பதிவானது. சராசரியாக 36.36 மி.மீ. மழை பெய்திருந்தது.

    பெரம்பலூர்

    வங்ககடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது.

    பெரம்பலூர் மாவட்டத்தில் பரவலாக மழை செய்தது. அதிகபட்சமாக லெப்பைகுடிகாடு பகுதியில் 77 மீ.மீ. மழை அளவு பதிவாகி இருந்தது. இரையூர், தழுதலை ஆகிய பகுதியில் 58 மி.மீ., வி.களத்தூர், வேப்பன்பட்டி ஆகிய இடங்களில் 42 மி.மீ. மழை அளவு பதிவாகி இருந்தது. குறைந்த பட்சமாக பாடாலூரில் 2 மி.மீ. பதிவானது. பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் மொத்த மழை அளவு 400 மி.மீ. பதிவானது. சராசரியாக 36.36 மி.மீ. மழை பெய்திருந்தது.

    • அறிவுரை கூறி அழைத்து வந்து செஞ்சேரியில் செயல்பட்டுவரும் உண்டு உறைவிடப் பள்ளியில் 5ம் வகுப்பில் சேர்த்தனர்.
    • சிறுவாச்சூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பில் சேர்த்து கல்வி பயில நடவடிக்கை எடுத்தார்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் அருகே கவுள்பாளையத்தை சேர்ந்த மருதமுத்து மகன் சரவணன் (வயது 10), தந்தையை இழந்த இவர் பள்ளிக்குச் செல்லாமல், படிப்பை நிறுத்தி உள்ளார். இது குறித்த தகவலறிந்த கலெக்டர் கற்பகம் உத்தரவின்பேரில் உதவி திட்ட அலுவலர் ஜெயசங்கர் மேற்பார்வையில், ஆசிரியர் பயிற்றுநர் ரமேஷ் கவுள்பா ளையம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன், பட்டதாரி ஆசிரியர் துரைசாமி, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் உஷ்மான் அலி, உதவி ஆசிரியர் அகிலாதேவி ஆகியோருடன் குழுவாக கவுள்பாளையம் கிராமத் திற்கு சென்றனர். அங்கு பள்ளிக்கு செல்லாமல் இருந்த சரவணனை சந்தித்து அறிவுரை கூறி அழைத்து வந்து செஞ்சேரியில் செயல்பட்டுவரும் உண்டு உறைவிடப் பள்ளியில் 5ம் வகுப்பில் சேர்த்தனர். இதே போல் நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராமல் இருந்த 5 மாணவர்களையும் பள்ளிக்கு அழைத்து வந்தனர்.

    மேலும் அய்யலூர் பகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளியான சோலைமுத்துவின் மகன் பாரதி (14), தாயில்லாத குழந்தையான இவர் பள்ளிக்குச் செல்லாமல் வேலைக்கு சென்றார். தகவறிந்த ஆசிரியர் பயிற்றுநர் ரமேஷ் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியருடன் சென்று மாணவன் பாரதியை மீட்டு சிறுவாச்சூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பில் சேர்த்து கல்வி பயில நடவடிக்கை எடுத்தார்.

    • பெரம்பலூரில் தி.மு.க. பைக் பேரணிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது
    • அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் தி.மு.க.வினர் வரவேற்றனர்

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதிக்குட்பட்ட மருதையான் கோவிலுக்கு  தி.மு.க. இளைஞரணி 2-வது மாநில மாநாடு பைக் பேரணி வந்தடைந்தது. அங்கு  போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் தி.மு.க. நிர்வாகிகள் வரவேற்பு  அளித்தனர். அதன் பின்னர் பைக் பேரணியானது  பெரம்பலூர் மாவட்டத்தை வலம் வந்தது. 

    • பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் மகா சித்தர்கள் அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபம் ஏற்ற பட்டு வருகிறது.
    • இதன்படி 41-ம் ஆண்டு மகா கார்த்திகை தீபம் வரும் 26-ந்தேதி ஏற்றப்பட உள்ளது.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் மகா சித்தர்கள் அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபம் ஏற்ற பட்டு வருகிறது. இதன்படி 41-ம் ஆண்டு மகா கார்த்திகை தீபம் வரும் 26-ந்தேதி ஏற்றப்பட உள்ளது.

    இதையொட்டி எளம்பலூர் பிரம்மரிஷி மலையடிவாரத்தில் அமைந்துள்ள அன்னை காகன்னை ஈஸ்வர் ஆலயத்தில் 2,100 மீட்டர் திரி தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனிடையே தீபம் ஏற்றும் 5 அடி உயரத்திலான செம்பு கொப்பரைக்கு பூஜை செய்யப்பட்டது. மாதாஜி ரோகிணி ராஜகுமார், தவயோகி தவசிநாதன் பூஜையை நடத்தினர்.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கார்த்திகை தீபம் அன்று 2,100 மீட்டர் திரி ,ஆயிரத்து 8 லிட்டர் எண்ணெய்,108 கிலோ கற்பூரம் கொண்டு தீபம் ஏற்றப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • பலியான கோவிந்தராஜின் உடல் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
    • விபத்துக்கு காரணமான டிப்பர் லாரி டிரைவர் தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் தண்ணீர் பந்தல் எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ்(வயது 24). கூலி தொழிலாளி. இவரது மனைவி ரேணுகா(20). நேற்றிரவு இவர்கள் மோட்டார்சைக்கிளில் பண்ணக்காரன்பட்டி திருமண விழாவிற்கு சென்றனர்.

    கோவிந்தராஜ் மோட்டார்சைக்கிளை ஓட்டினார், ரேணுகா பின்னால் அமர்ந்திருந்தார். செஞ்சேரி பைபாஸ் ரோட்டில் தனியார் கல்லூரி அருகே சென்றபோது அந்த வழியாக ஒரு டிப்பர் லாரி வந்தது. எதிர்பாராதவிதமாக லாரி கோவிந்தராஜ் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். இதில் கோவிந்தராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ரேணுகா பலத்த காயத்துடன் உயிருக்கு போராடினார். இதை அறிந்த அந்த பகுதி மக்கள் விரைந்து வந்து ரேணுகாவை மீட்டு பெரம்பலூர் தலைமை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே ரேணுகா பரிதாபமாக இறந்தார். விபத்தில் கணவன்-மனைவி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பலியான கோவிந்தராஜின் உடல் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ரேணுகாவின் உடலை உறவினர்கள் வீட்டுக்கு எடுத்து சென்றனர். இதுபற்றி தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்.

    விபத்துக்கு காரணமான டிப்பர் லாரி டிரைவர் தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • வாலிகண்டபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் திருக்குறள் நூல்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • திருக்குறள் நூல்களை வழங்கி திருக்குறளின் சிறப்பை மாணவர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது

    அகரம்சீகூர்,

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் அகரம்சீகூர் அடுத்துள்ள வாலிகண்டபுரம், அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக திருக்குறள் முற்றோதல் இயக்கம் சார்பில் திருக்குறள் முற்றோதலுக்காக திருக்குறள் நூல்கள் வழங்கும் விழா நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வராசு தலைமை தாங்கினார். உலக திருக்குறள் முற்றோதல் இயக்கம் பெரம்பலூர் மையத்தின் சார்பாக திருமாந்துறையைச் சார்ந்த ஓய்வு பெற்ற தமிழாசிரியர் புலவர் முருகேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திருக்குறள் நூல்களை வழங்கி திருக்குறளின் சிறப்பை மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார். இந்நிகழ்ச்சியில், அப்துல் கலாம் மாணவர் வாசிப்பு இயக்கத்தின் சார்பாக சிறப்பாக செயல்படும் 100 மாணவர்களுக்கு திருக்குறள் நூல்கள் வழங்கப்பட்டன. பெரம்பலூர் பள்ளி துணை ஆய்வாளர் பழனிசாமி, பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர்கள் வீரையன், லதா ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். முன்னதாக முதுகலைத் தமிழாசிரியர் மோகன் வரவேற்புரை ஆற்றினார். முடிவில் தமிழ் ஆசிரியை மகாலட்சுமி நன்றி கூறினார்.இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் தமிழ்ஆசிரியை புவனேஸ்வரி, பாண்டித்துரை, வேலாயுதம் உள்ளிட்ட ஆசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

    பெரம்பலூரில் பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலானடேக்வாண்டோ, ஜிம்னாஸ்டிக் போட்டிகள்

    பெரம்பலூர், 

    பெரம்பலூரில் பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ, ஜிம்னாஸ்டிக் விளையாட்டு போட்டிகள் நேற்று நடந்தது.

    பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக்குலேசன் பள்ளி விளையாட்டு அரங்கில் நடந்த போட்டிக்கு பள்ளி தாளாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். செயலாளர் அங்கையற்கண்ணி, மாவட்ட கல்வி அலுவலர் ஜெகநாதன், உடற்கல்வி ஆய்வாளர் விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.

    டேக்வாண்டோ, ஜிம்னாஸ்டிக் ஆகிய விளையாட்டு போட்டிகள் 14, 17, 19 ஆகிய வயது பிரிவின் கீழ் நடந்தது. உடற்கல்வி ஆசிரியர்கள் ரவி, பிரேம்நாத் ஆகியோர் பொறுப்பு அலுவலராக செயலாற்றினர். இப்போட்டிகளில் 30 பள்ளிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டி களில் முதலிடம் பெறுவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள தகுதி பெறுவர்.

    62-ம் தேசிய மருந்தியல் வார விழாவையொட்டி டெங்கு விழிப்புணர்வு பேரணி நடந்தது

    பெரம்பலூர் 

    பெரம்பலூர் தந்தை ரோவர் மருந்தியல் கல்லூரி சார்பில் 62-ம் தேசிய மருந்தியல் வார விழாவையொட்டி டெங்கு விழிப்புணர்வு பேரணி நடந்தது.பெரம்பலூர் பாலக்கரை கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு துவங்கிய பேரணிக்கு ரோவர் கல்வி நிறுவனங்களின் மேலாண் தலைவர் வரதராஜன் தலைமை வகித்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன், கல்லூரி முதல்வர் நெப்போலியன், துணை முதல்வர் மாரியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினராக கலெக்டர் கற்பகம் கலந்து கொண்டு கொடியசைத்து பேரணி தொடங்கி வைத்தார். பாலக்கரையில் ஆரம்பித்து, சங்குபேட்டை, கடைவீதி, பழைய பஸ்ஸ்டாண்ட், காமராஜ் ஆர்ச் வரை சென்று ரோவர் மருந்தியல் கல்லூரியில் முடிவடைந்தது. பேரணியில் மாணவ,மாணவிகள் டெங்கு காய்ச்சல் வருவதை தடுக்க மேற்கொள்ளவேண்டிய வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு வாசங்கள் அடங்கிய பாதாகைகளை ஏந்தி சென்று கோஷமிட்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பேரணியில் தாசில்தார் சரவணன் மற்றும் ரோவர் மருந்தியல் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    ×