search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பக்தர்களின் பாதுகாப்பு கருதி ஆழமான பகுதிக்கு செல்வதை தடுக்க கம்பு வேலி அமைக்கப்பட்டுள்ள காட்சி.
    X
    பக்தர்களின் பாதுகாப்பு கருதி ஆழமான பகுதிக்கு செல்வதை தடுக்க கம்பு வேலி அமைக்கப்பட்டுள்ள காட்சி.

    தாமிரபரணி மகா புஷ்கர விழா நாளை தொடக்கம்: படித்துறைகளில் பாதுகாப்பாக நீராட ஏற்பாடு

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி மகா புஷ்கர விழா நாளை தொடங்கி வருகிற 22-ந் தேதி வரை நடக்கிறது.
    குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் போது, ஒவ்வொரு ஆண்டும் அந்தந்த ராசிக்கு உரிய நதிக்கு புஷ்கர விழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு குரு பகவான் விருச்சிக ராசிக்கு இடம் பெயர்ந்ததையடுத்து விருச்சிக ராசிக்கு உரிய தாமிரபரணி ஆற்றுக்கு புஷ்கர விழா நடத்தப்படுகிறது.

    இந்த புஷ்கர விழா 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரக்கூடிய மகாபுஷ்கர விழாவாகும். இதையடுத்து புஷ்கர விழாவை பிரமாண்டமாக கொண்டாட சிருங்கேரி, காஞ்சி மடங்கள், துறவிகள் சங்கம், சித்தர்கள் கோட்டம், தாமிரபரணி புஷ்கர ஒருங்கிணைப்பு குழு உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் பூஜைகள், சிறப்பு யாகங்கள், தாமிரபரணிக்கு ஆரத்தி வழிபாடு நடத்த‌ ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பாபநாசம் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள 64 தீர்த்த கட்டங்கள், 143 படித்துறைகளில் புஷ்கர விழா பூஜைகள் நடைபெறுகின்றன. நெல்லை அருகன் குளம் ஜடாயு தீர்த்தம், செப்பறை கோவில், மணி மூர்த்தீசுவரம் உச்சிஷ்ட கணபதி கோவில் படித் துறைகள் முற்றிலும் புதுப் பித்து கட்டப்பட்டு உள்ளன.

    தூத்துக்குடியில் முறப்ப நாடு தலத்தில் படித்துறைகள் சீரமைக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு படித்துறைகள் புதுப்பிக்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டு உள்ளன. இந்த தாமிரபரணி மகா புஷ்கர விழா நாளை (11-ந்தேதி) தொடங்குகிறது.

    நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் தாமிரபரணி புஷ்கர விழாவை நாளை காலையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைக்கிறார். பின்பு அங்குள்ள படித்துறையில் புனித நீராடும் கவர்னர் பாபநாசம் சேனைத்தலைவர் சமுதாய கூடத்தில் நடக்கும் தாமிரபரணி புஷ்கர துறவிகள் மாநாட்டிலும் பங்கேற்கிறார்.

    மாலை 5.15 மணிக்கு நெல்லை அருகன்குளம் ஜடாயு தீர்த்த பகுதியில் நடைபெறும் புஷ்கர விழாவில் கலந்துகொண்டு தாமிர பரணிக்கு ஆரத்தி பூஜையை தொடங்கி வைக்கிறார். இதற்காக தீர்த்த கட்டத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நதிக் கரையில் 144 அடியில் படித்துறை அமைக்கப்பட்டுள்ளது. .

    ஆரத்தி பூஜையின்போது காசியில் கங்கைக்கு நடப்பது போன்று மகாபாரணி ஆரத்தி செய்யப் படுகிறது. இதற்காக காசியில் இருந்து 7 சிறப்பு ஆரத்தி தட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. சிறப்பு வேத பண்டிதர்களும் வந்துள்ளனர். படித்துறையில் 7 அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

    தைப்பூச மண்டபம் அருகே அமைக்கப்பட்டுள்ள தடுப்புகள்.

    விழாவின்போது தாமிர பரணியின் மையப்பகுதியில் படகுகளில் மீட்பு படையினரும், போலீசாரும் பாது காப்பு பணியில் ஈடுபடு கிறார்கள். புஷ்கர விழாவுக்காக எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலையில் பிரமாண்டமான யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. 54 யாக குண்டங்களும், நடுவில் பத்ம குண்டமும் அமைக்கப் பட்டுள்ளன.

    இதேபோல் பாபநாசம் சித்தர்கோட்டம் சார்பாக நடைபெறும் விழாவில் நாளை காலை 7.30 மணி யளவில் புனித தீர்த்தமான கல்யாண தீர்த்தத்தில் இருந்து அடியார்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் தீர்த்த கலசங்களுடன் ஊர்வலமாக வந்து நதிக்கு வழிபாடு தொடங் குதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்றைய தினம் மாலை 6.15 மணியளவில் பஞ்சபூத மேடையில் 16 வகை தீபங்கள், 5 வகை உபச்சாரங் களுடன் தமிழ் ஆகம விதிப்படி சிவனடியார்களால் மகா ஆரத்தி நிகழ்ச்சி நடைபெறும்.

    ஸ்ரீவைகுண்டம் படித்துறை யில் நாளை முதல் 23-ந்தேதிவரை புஷ்கர விழா நடக்கிறது. விழாவில் தினசரி கோ பூஜை, சுமங்கலி பூஜை, திருமணம் கைகூடுவதற்கு, புத்திர பாக்கியம், தம்பதி ஒற்றுமை, விவசாயம் மற்றும் தொழில் வளர்ச்சி உள்ளிட்ட நிகழ்வுகளுக்கான சிறப்பு பூஜைகள், சுதர்‌ஷண ஹோமம், பாராயணம் முற்றோதுதல், நாலாயிர திவ்ய பிரபந்தம், வித்யா ஹோமம், பொங்கல் வழிபாடு, கனக தாரா ஜெயம் மற்றும் இதர பூஜைகள் நடைபெற உள்ளன.

    புஷ்கர விழாவில் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் இருந்து லட்சக் கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது. விழாவை யொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப் பட்டுள்ளன. இதற்காக தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. சண்முக ராஜேசுவரன் நெல்லையில் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வருகிறார்.

    ஏற்கனவே ஆற்றுக்குள் உள்ள ஆழம் குறித்தும், எந்தெந்த இடங்களில் எத்தனை அடி தூரம் வரை பக்தர்களை அனுமதிப்பது என்றும் விழா குழுவினர் அறிக்கை தயார் செய் துள்ளனர். அதன்படி குறிப்பிட்ட தூரத்துக்கு மேல் பக்தர்கள் ஆற்றுக்குள் செல்ல முடியாத வகையில் இரும்பு கம்பிகளை நிறுவி, இரும்பு வலைகளை கட்டி பாதுகாப்பு வளையம் அமைக்கப் பட்டுள்ளது.

    புஷ்கர விழாவுக்காக நெல்லை மாநகரில் 600 போலீசாரும், மாவட்டத்தின் பிற பகுதிகளில் 3500 போலீ சாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். குமரி மாவட்டத்தில் இருந்து போலீசார் பாதுகாப்புக்கு வரவழைக்கப்பட உள்ளனர். தேவைப்பட்டால் இதர மாவட்டங்களில் இருந்தும் போலீசார் பாதுகாப்புக்கு வரவழைக்கப்படுவார்கள் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

    தாமிரபரணி மகா புஷ்கர விழாவையொட்டி மாவட் டத்தில் பக்தர்கள் நீராடுவதற் காக 29 படித்துறைகள் கண்டறியப்பட்டிருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி முறப்பநாடு, அகரம், நாணல்காடு, ஆழிக்குடி, கருங்குளம், ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவில் அருகில், ஆழ்வார் திருநகரி திருசங் கனை, அகோப்பில்லா, காந்தீஸ்வ ரர், பட்சிராஜன், நாயக்கர் பகுதி, பிள்ளையார் கோவில், தோணித்துறை, பால்குளம், தென்திருப் பேரை, குரங்கனி, ஏரல் இரட்டை திருப்பதி, மங்கள குறிச்சி, சேர்மன் அருணாசலசுவாமி கோவில், வாழவல்லான், உமரிக்காடு, சேதுக்குவாய்த்தான், சொக்கப்பழங்கரை, முக்காணி ஆற்றுப்பாலம் மேற்கு மற்றும் கிழக்கில் 2 இடங்கள், சேர்ந்த பூமங் கலத்தில் 2 இடங்கள் ஆக மொத்தம் 29 இடங்களில் உள்ள படித்துறைகளில் பக்தர்கள் நீராட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    விழாவையொட்டி 3 போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில், 5 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 16 துணை போலீஸ் சூப்பிரண்டு கள் உள்பட சுமார் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சிறப்பு பயிற்சி பெற்ற 90 போலீசார் அடங்கிய பேரிடர் மீட்பு குழுவினரும், 27 படகுகளும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றன.
    Next Story
    ×