என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
X
லைவ் அப்டேட்ஸ்: ரஷிய அதிபரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த தயார் - அதிபர் ஜெலன்ஸ்கி
Byமாலை மலர்24 May 2022 7:28 PM GMT (Updated: 25 May 2022 11:27 AM GMT)
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 3 மாதங்கள் முடிந்துள்ளது. ரஷிய ராணுவத்தின் தாக்குதலுக்கு உக்ரைனும் உரிய பதிலடி கொடுத்து வருகிறது.
25.5.2022
16:50: கிழக்கு உக்ரைனில் உள்ள லுஹான்ஸ்க் பிராந்திய ஆளுநர் செர்ஹி ஹைடாய், சமீபத்தில் ரஷியா நடத்திய ஷெல் தாக்குதலில் குறைந்தது ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த 24 மணிநேரத்தில் மேலும் எட்டு பேர் காயமடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் மறைந்திருக்கும் தங்குமிடங்களை ரஷியர்கள் வேண்டுமென்றே குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக ஹைடாய் குற்றம்சாட்டியுள்ளார்.
13:00: ரஷிய படைகளின் முற்றுகையால் உக்ரைனில் இருந்து கடல் மார்க்மாக உணவு தானியங்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப முடியாத நிலை உள்ளது. இதனால் தானியத்தை வெளியேற்றுவதற்கான வழிகள் குறித்து உக்ரைன் அரசு ஆராய்கிறது. சாலை மார்க்கமாக தானியங்கள் மற்றும் தாவர எண்ணெய்களை வெளியேற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
10:45: ரஷியா நீண்ட போருக்குத் தயாராக இருப்பதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு கூறி உள்ளார். அனைத்து நோக்கங்களும் அடையப்படும் வரை சிறப்பு ராணுவ நடவடிக்கையைத் தொடருவோம் என்று அவர் குறிப்பிட்டார்.
10:30: உக்ரைன் மீது ரஷியா படையெடுப்பை தொடங்கி மூன்று மாதங்கள் நிறைவடைந்து நான்காவது மாதமாக நீடிக்கிறது. இன்று டான்பாஸ் பிராந்தியத்தில் உள்ள தொழில் நகரமான செவரோடோனெட்ஸ்க் மீது ரஷிய படைகள் இடைவிடாமல் குண்டுவீசி தாக்குதல் நடத்துகின்றன.
05.30: உக்ரைனின் முக்கிய துறைமுக நகரான மரியுபோலை ரஷியா முழுமையாக கைப்பற்றியது. 3 மாத கால போரில் இந்த நகரத்தின் கட்டிடங்கள், ரஷிய படைகளின் தாக்குதலில் எலும்புக்கூடுகளாக காட்சியளிக்கின்றன.
இந்த நகரத்தில் ஓர் அடுக்குமாடி குடியிருப்பின் இடிபாடுகளில் 200 உடல்கள் கண்டெடுக்கப்பட்டிருப்பது அங்கு அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
00.45: சுவிட்சர்லாந்தில் நடந்த உலக பொருளாதார மன்ற கூட்டத்தில் இணைய வழியில் பங்கேற்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், போரை முடிவுக்கு கொண்டுவர ரஷிய அதிபர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த தயார். உக்ரைன் மக்களை ரஷிய படைகள் படுகொலை செய்து வருகின்றன. ரஷியாவின் மற்ற பிரதிநிதிகளுடன் இதுவரை நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் எந்த முடிவும் ஏற்படவில்லை என்பதால் அவர்களுடனான பேச்சுவார்த்தையை ஏற்கப் போவதில்லை என தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X