search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    பதவிப்பிரமாணம் செய்து வைத்த அதிபர்
    X
    பதவிப்பிரமாணம் செய்து வைத்த அதிபர்

    இலங்கையில் 4 மந்திரிகள் பதவியேற்பு - பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் அதிபர்

    இலங்கையின் 26-வது பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட ரனில் விக்ரமசிங்கே நேற்று தனது பணிகளை தொடங்கினார்.
    கொழும்பு:

    இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால் ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிரான மக்களின் போராட்டம் தீவிரமடைந்தது.

    ஒரு மாதத்துக்கும் மேலாக அமைதியாக நடந்துவந்த இந்த போராட்டத்தில் கடந்த 9-ம் தேதி வன்முறை மூண்டதால் 9 பேர் உயிரிழந்தனர். 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதையடுத்து, பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகினார்.

    மகிந்த ராஜபக்சே பதவி விலகியதை தொடர்ந்து, புதிய பிரதமர் தலைமையில் அனைத்துக்கட்சிகளும் இணைந்த இடைக்கால அரசு அமைக்க அதிபர் கோத்தபய ராஜபக்சே நடவடிக்கை எடுத்தார்.

    பேச்சுவார்த்தை முடிவில் முன்னாள் பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவிடம் (73), பிரதமர் பதவியை ஒப்படைத்தார். அவரும் நாட்டின் 26-வது பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். அவர் தனது அலுவலகத்தில் பணிகளை தொடங்கினார். 

    இந்நிலையில், இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே தலைமையில் புதிய அமைச்சர்கள் 4 பேர் இன்று பதவியேற்றனர். 
    ஜி.எல்.பெரீஸ், தினேஷ் குணவர்த்தன, பிரசன்ன ரணதுங்க, காஞ்சனா விஜயசேகர ஆகியோருக்கு அதிபர் ரனில் விக்ரமசிங்கே பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

    Next Story
    ×