என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
X
பிரதமர் மோடிக்கு டென்மார்க் ராணி விருந்து
Byமாலை மலர்5 May 2022 2:14 AM GMT (Updated: 5 May 2022 2:14 AM GMT)
வரலாற்று சிறப்புமிக்க அமலியன்போர்க் அரண்மனைக்கு சென்ற பிரதமர் மோடி ராணி இரண்டாம் மார்கிரேத்தை சந்தித்து, அவர் பட்டத்துக்கு வந்ததன் பொன்விழாவையொட்டி, வாழ்த்து தெரிவித்தார்.
கோபன்ஹேகன் :
பிரதமர் மோடி தனது ஐரோப்பிய சுற்றுப்பயணத்தில் 2-வது கட்டமாக நேற்று முன்தினம் டென்மார்க் சென்றார். அந்த நாட்டின் பிரதமர் மெட்டே பிரடெரிக்சனுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இரு தரப்பிலும் ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.
அதைத்தொடர்ந்து கோபன்ஹேகனில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க அமலியன்போர்க் அரண்மனைக்கு பிரதமர் மோடி சென்றார். ராணி இரண்டாம் மார்கிரேத்தை சந்தித்து, அவர் பட்டத்துக்கு வந்ததன் பொன்விழாவையொட்டி, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து பிரதமர் மோடிக்கு ராணி விருந்து அளித்து கவுரவித்தார்.
அப்போது அவரிடம் பிரதமர் மோடி, சமீப காலமாக இந்திய டென்மார்க் உறவில் ஏற்பட்டு வரும் முன்னேற்றம் பற்றியும், இரு தரப்பு பசுமை வியூக கூட்டாண்மை குறித்தும் எடுத்து கூறினார்.
தனக்கு விருந்து அளித்தமைக்காக பிரதமர் மோடி, அவரிடம் நன்றியும் தெரிவித்துக்கொண்டார். இதை வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி டுவிட்டர் பதிவில் தெரிவித்திருக்கிறார்.
பிரதமர் மோடி தனது ஐரோப்பிய சுற்றுப்பயணத்தில் 2-வது கட்டமாக நேற்று முன்தினம் டென்மார்க் சென்றார். அந்த நாட்டின் பிரதமர் மெட்டே பிரடெரிக்சனுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இரு தரப்பிலும் ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.
அதைத்தொடர்ந்து கோபன்ஹேகனில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க அமலியன்போர்க் அரண்மனைக்கு பிரதமர் மோடி சென்றார். ராணி இரண்டாம் மார்கிரேத்தை சந்தித்து, அவர் பட்டத்துக்கு வந்ததன் பொன்விழாவையொட்டி, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து பிரதமர் மோடிக்கு ராணி விருந்து அளித்து கவுரவித்தார்.
அப்போது அவரிடம் பிரதமர் மோடி, சமீப காலமாக இந்திய டென்மார்க் உறவில் ஏற்பட்டு வரும் முன்னேற்றம் பற்றியும், இரு தரப்பு பசுமை வியூக கூட்டாண்மை குறித்தும் எடுத்து கூறினார்.
தனக்கு விருந்து அளித்தமைக்காக பிரதமர் மோடி, அவரிடம் நன்றியும் தெரிவித்துக்கொண்டார். இதை வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி டுவிட்டர் பதிவில் தெரிவித்திருக்கிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X