என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
X
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை சந்தித்த அண்ணாமலை
Byமாலை மலர்2 May 2022 4:25 PM GMT (Updated: 2 May 2022 4:25 PM GMT)
சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள், இந்தியத் தூதரகத்தின் துரித முயற்சியால் விரைவில் விடுவிக்கப்பட்டு தமிழகம் திரும்புவார்கள் என்று அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்தார்.
யாழ்ப்பாணம்:
இலங்கை சென்றுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அங்கு சிறையில் உள்ள 12 தமிழக மீனவர்களை சந்தித்தார்.
கடந்த மார்ச் 23 அன்று இலங்கை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரத்தை சேர்ந்த 12 தமிழக மீனவர்களை இன்று யாழ்ப்பாணம் சிறையில் சந்தித்ததாகவும், அவர்களுக்கு பாஜக சார்பில் தேவையான பொருட்கள் வழங்கப்பட்டதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மேலும், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள், இந்தியத் தூதரகத்தின் துரித முயற்சியால் விரைவில் விடுவிக்கப்பட்டு தமிழகம் திரும்புவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இலங்கையில் தமிழர் அதிகம் வாழும் வடகிழக்கு மாகாண கவுன்சில்களுக்கு கல்வி, ஆரோக்கியம், விவசாயம், வீட்டு வசதி, காவல்துறை & நிலம் போன்ற பிரிவுகளில் சொந்தங்களுக்கு முழு அதிகாரம் அளிக்கும் 13வது திருத்தச் சட்டத்தை முழுவதுமாக நடைமுறைப்படுத்த பாஜக துணை நிற்கும் என்றும் அண்ணாமலை கூறி உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X