என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
X
#லைவ் அப்டேட்ஸ்: கிழக்குப் பகுதியில் பயிற்சியை தொடங்கிய நேட்டோ படைகள்
Byமாலை மலர்30 April 2022 11:00 PM GMT (Updated: 1 May 2022 1:04 PM GMT)
ஒடேசாவில் உள்ள விமான ஓடு பாதையை ரஷிய படைகள் அழித்ததாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
01.05.2022
18:30: ஆயிரக்கணக்கான நேட்டோ வீரர்களை உள்ளடக்கிய ராணுவப் பயிற்சி தொடங்கியுள்ளதாக போலந்து ராணுவம் தெரிவித்துள்ளது. இது, நேட்டோ கூட்டணியின் கிழக்குப் பகுதியின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் நடைபெறும் வழக்கமான பயிற்சி ஆகும். ஆனால், இந்த ஆண்டு உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் போர் நடைபெறும் பகுதிக்கு அருகாமையில் உள்ளதால் இந்த பயிற்சி கவனம் பெற்றுள்ளது.
18:00: அசோவ்ஸ்டல் உருக்காலையில் இருந்து இன்று ஐ.நா. சின்னங்களை தாங்கிய வாகனங்களில் 40 பொதுமக்கள் கொண்ட குழு வெளியேற்றப்பட்டுள்ளது.
14.30: உக்ரைனின் மரியுபோல் நகரை நீண்ட போராட்டத்துக்கு பிறகு ரஷிய படைகள் தன் வசம் ஆக்கியது.
இந்நிலையில், உக்ரைனின் மரியுபோல் நகரில் தங்கள் உறவுகள் சிக்கித்தவித்து வருவதாகவும், அந்நகர மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற சர்வதேச தலைவர்கள் ரஷியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என வலியுறுத்தி கீவ் மக்கள் வீதிகளில் நின்று போராட்டம் நடத்தினர்.
10.00: கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் உள்ளவர்களை அழிக்க ரஷியா தன்னால் இயன்ற அனைத்தையும் செய்து வருவதாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.
ஆனால், திட்டமிட்டபடிதான் உக்ரைன் மீதான தாக்குதல் தொடர்கிறது என ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். உக்ரைனில் இருந்து 10 லட்சத்துக்கும் அதிகமானோரை வெளியேற்றி உள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
04.20: உக்ரைனின் மரியுபோல் பகுதியில் சிக்கியுள்ள மக்களை வெளியேற்ற ஐ.நா.வின் முயற்சி குறித்து இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் தொலைபேசி மூலம் பேசியுள்ளார். இந்த உரையாடலின் போது, உக்ரைனுக்கு இங்கிலாந்து பொருளாதார மற்றும் மனிதாபிமான உதவியை தொடர்ந்து வழங்கும் என்றும் ஜான்சன் உறுதியளித்தாக இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
02.40: உக்ரைனின் மூன்றாவது பெரிய நகரமும், முக்கிய துறைமுகமுமான ஒடேசாவில் உள்ள விமான நிலைய ஓடு பாதையை ரஷ்ய படைகள் ஏவுகணை தாக்குதல் மூலம் அழித்ததாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. இதன் விளைவாக ஒடேசா விமான ஓடு பாதையை உக்ரைன் விமானப்படை இனி பயன்படுத்த முடியாது என கூறப்பட்டுள்ளது. அப்பகுதியில் வசிப்பவர்களை அந்த இடத்தில் தங்கியிருக்குமாறும் உள்ளூர் அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.
01.30: ரஷிய விமான படையினர் உக்ரைனின் 17 ராணுவ தளங்களை துல்லியமாக தாக்கியதாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஏவுகணைகள் மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 200க்கும் மேற்பட்ட உக்ரைன் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் 23 ராணுவ வாகனங்கள் அழிக்கப்பட்டதாகவும் ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
12.20: கடந்த மாதம் போரின்போது 40 ரஷிய விமானங்களை சுட்டு வீழ்த்திய உக்ரைன் போர் விமானி மேஜர் ஸ்டீபன் தரபால்கா உயிரிழந்து விட்டதாக லண்டன் டைம்ஸ் இதழ் தெரிவித்துள்ளது. கோஸ்ட் ஆப் கீவ் என அழைக்கப்படும் அந்த விமானி, மார்ச் 13ந் தேதி எதிரி படைகளுடன் போரிட்டுக் கொண்டிருந்த போது கொல்லப்பட்டதாக அதில் கூறப்பட்டுள்ளது. அவரது ஹெல்மெட் மற்றும் கண்ணாடிகள் இப்போது லண்டனில் ஏலம் விடப்பட உள்ளதாக டைம்ஸ் இதழ் குறிப்பிட்டுள்ளது
30.4.2022
22:30: உக்ரைனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மீண்டும் நிலைநிறுத்துவதற்கு, நட்பு நாடுகளுடன் ஒருங்கிணைந்து தீவிரமாக செயல்பட விரும்புவதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் கூறியிருக்கிறார். ராணுவ தளவாடங்கள் மற்றும் மனிதாபிமான உதவிகள் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் மேக்ரான் உறுதி அளித்துள்ளார்.
21:00: உக்ரைனின் மீது தொடர் தாக்குதல்கள் நடத்தி வரும் ரஷிய படைகள், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ஏராளமான தானியங்களைக் கைப்பற்றுவதாக உக்ரைன் விவசாயத்துறை மந்திரி டாரஸ் பிசோட்ஸ்கி தெரிவித்தார். ஜபோரிஜியா, கெர்சன், டோனட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளில் இருந்து பல லட்சம் டன் தானியங்கள் எடுக்கப்பட்டதாக, உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வந்ததாக அவர் கூறினார்.
20:30: கண்ணிவெடிகளை கண்டறிந்து பாதுகாப்பாக அகற்றுவது எப்படி? என்பது தொடர்பாக உக்ரைனைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் மிஞ்சுகோவா உள்ளிட்ட 5 பெண்கள், கொசோவா நாட்டில் பயிற்சி பெற்று வருகின்றனர். உக்ரைனில் நடைபெற்று வரும் போர் முடிவுக்கு வந்தபின், அங்கு வெடிக்காமல் உள்ள கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் அவர்கள் ஈடுபடுவார்கள்.
20:00: போர் தொடங்கியதில் இருந்து 10 லட்சத்துக்கும் அதிகமான மக்களை ரஷியா வெளியேற்றியுள்ளதாக ரஷியாவின் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
19:30: உக்ரைனில் உள்ள ரஷியப் படைகளின் மன வலிமை குறைந்திருப்பதாக பிரிட்டன் ராணுவம் கூறி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X