search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    போரிஸ் ஜான்சன், நரேந்திர மோடி (கோப்பு படம்)
    X
    போரிஸ் ஜான்சன், நரேந்திர மோடி (கோப்பு படம்)

    இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் 21-ந்தேதி அகமதாபாத் வருகை

    தமது இந்தியப் பயணத்தின்போது இரு நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்பு உள்பட பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
    லண்டன்:

    இங்கிலாந்து பிரதமராக பதவியேற்ற பின்னர் போரிஸ் ஜான்சன் 2 நாள் பயணமாக இந்தியா வருகிறார். 

    21ந்தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகருக்கு வருகை தரும் அவர், அங்கு முன்னணி வர்த்தக நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்து இரு நாடுகள் இடையேயான வர்த்தகம் மற்றும் மக்கள் தொடர்பு குறித்து விவாதிக்க உள்ளார். 

    இங்கிலாந்து மற்றும் இந்தியா  நாடுகளிலும் உள்ள முக்கிய தொழில்களில் பெரிய முதலீடுகளை குறித்து அவர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது, 

    இதைத் தொடர்ந்து 22ந்தேதி புதுடெல்லி செல்லும் போரிஸ் ஜான்சன், பிரதமர் மோடியுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

    இந்தோ பசிபிக் பிராந்திய ஒத்துழைப்பு, இரு தர்ப்பு உறவுகள், பாதுகாப்பு, பொருளாதாரம், எரிசக்தி உள்பட பல்வேறு துறைகள் குறித்து இந்த பேச்சுவார்த்தையின்போது விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது. 

    இரு நாடுகள் இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்து மோடியுடன் போரிஸ் ஜான்சன் விவாதிப்பார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    முன்னதாக தமது இந்தியப் பயணம் குறித்து குறிப்பிட்டுள்ள அவர், இரு நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி, எரிசக்தி பாதுகாப்பு மற்றும் ராணுவ ஒத்துழைப்பு வரை முக்கிய அறிவுப்புகள் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×