search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    தீப்பற்றி எரியும் கட்டிடம்
    X
    தீப்பற்றி எரியும் கட்டிடம்

    #லைவ் அப்டேட்ஸ்: உக்ரைன் போர் 23-வது நாள்: அமைதிக்கான சர்வதேச பொறுப்புகளை தோளில் சுமக்க வேண்டும் -சீன அதிபர்

    டான்பாஸ் பிராந்தியத்தை இனப்படுகொலையில் இருந்து விடுவிப்பதே உக்ரைன் மீது மேற்கொண்டுள்ள ராணுவ நடவடிக்கையின் முக்கிய குறிக்கோள் என ரஷிய அதிபர் புதின் தெரிவித்தார்.
    போலந்து எல்லையில் இருந்து 70 கி.மீ. தூரத்தில் உள்ள லிவிவ் நகரத்தின் விமான நிலையத்தை சுற்றியுள்ள இடங்களில் ரஷியா இன்று ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியது. 

    18-03-2022

    23.05: உக்ரைனின் மரியுபோல் நகரில் ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ரஷிய அதிபரை பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல்  மேக்ரான் தொடர்புகொண்டு பேசினார். அப்போது, மரியுபோல் நகரின் நிலைமை கவலை அளிப்பதாக கூறிய மேக்ரான், அங்கு தாக்குதலை நிறுத்த வேண்டும் என்றும், மனிதாபிமான உதவிகள் கிடைக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். உக்ரைனில் உடனடியாக போர்நிறுத்தம் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    22.10: உக்ரைன் மீதான தனது படையெடுப்பு பற்றிய தவறான தகவல்களையும் பிரச்சாரத்தையும் பரப்புவதற்கு ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலை ரஷியா பயன்படுத்துவதாக 6 மேற்கத்திய உறுப்பு நாடுகள், ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் தெரிவித்தன. ரஷியா தனது தாக்குதலை நியாயப்படுத்த முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டின. 

    21.05: உக்ரைன் நிலவரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ரஷிய பிரதிநிதி பேசினார். அப்போது, உக்ரைனில்  உயிரியல் ஆயுதங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்றும், பென்டகனால் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் பற்றிய கூடுதல் தகவல்கள், ரஷிய பாதுகாப்பு துறைக்கு கிடைத்திருப்பதாகவும் கூறினார். ரஷியாவின் குற்றச்சாட்டை அமெரிக்க  பிரதிநிதி மறுத்தார். இந்த குற்றச்சாட்டுகள் வினோதமான கட்டுக்கதைகள் என்றும் அவர் தெரிவித்தார்.

    20.15: அமைதிக்கான சர்வதேசப் பொறுப்புகளை சீனாவும், அமெரிக்காவும் தோளில் சுமக்க வேண்டும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறி உள்ளார்.

    20.10: ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லெயனிடம் பேசியதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார். மேலும் வரும் மாதங்களில் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேருவதற்கான விண்ணப்பத்தில் முன்னேற்றம் ஏற்படும் என உக்ரைன் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    20.05: டான்பாஸ் பிராந்தியத்தை இனப்படுகொலையில் இருந்து விடுவிப்பதே உக்ரைன் மீது மேற்கொண்டுள்ள ராணுவ நடவடிக்கையின் முக்கிய குறிக்கோள் என ரஷிய அதிபர் புதின் தெரிவித்தார். 

    19.20: உக்ரைனில் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை பொதுமக்கள் தரப்பில் 816 பேர் கொல்லப்பட்டதாகவும், 1333 பேர் காயமடைந்ததாகவும் ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.

    19.15: உக்ரைன் விவகாரம் தொடர்பாக சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொலைபேசியில் பேசினார். அப்போது போரை நிறுத்தும்படி ரஷியாவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என சீன அதிபரிடம் பைடன் வலியுறுத்த உள்ளார்.

    19.05: உக்ரைனில் உள்ள இந்தியத் தூதரகம், போலந்துக்கு மாற்றப்பட்ட பிறகும் உக்ரைனில் உள்ள அனைத்து இந்திய குடிமக்களுக்காகவும் தொடர்ந்து செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    18.50: பல்கேரியாவைத் தொடர்ந்து எஸ்டோனியா, லத்வியா மற்றும் லிதுவேனியா ஆகிய நாடுகள் 10 ரஷிய தூதரக அதிகாரிகளை வெளியேற்ற உள்ளதாக அறிவித்துள்ளன.

    போர் நடைபெற்று வரும் உக்ரைனின் கார்கிவ் நகரில் உயிரிழந்த இந்திய மாணவர் நவீன் சேகரப்பாவின் உடல் மார்ச் 21ம் தேதி இந்தியாவிற்கு கொண்டு வரப்படுகிறது. 

    உக்ரைனுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும்படி இலங்கை அரசுக்கு அமெரிக்க தூதரகங்கள் மற்றும் முக்கிய மேற்கத்திய நாடுகளின் தூதரகங்கள் வலியுறுத்துகின்றன.

    உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வரும் 23ம் தேதி மாலை 6 மணியளவில் ஜப்பான் பாராளுமன்றத்தில் காணொலி வாயிலாக உரையாற்ற உள்ளார். 

    17.45: ரஷியா மற்றும் பெலாரஸ் உடனான வழக்கமான வர்த்தக உறவுகளை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு

    17.30: ரஷிய தூதரக அதிகாரிகள் 10 பேரை வெளியேற பல்கேரியா. கெடு விதித்துள்ளது.

    17.15: உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷிய அதிபர் மாளிகையின் மூத்த அதிகாரி, தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.

    17.00: மரியுபோல் நகரில் பொதுமக்கள் தங்கியிருந்த தியேட்டர் மீது ரஷியா தாக்குதல் நடத்தியது. கட்டிட இடுபாடுகளில் இருந்து இதுவரை 130 பேர் மீட்கப்பட்டுள்ளதாக உக்ரைன மனித உரிமைகள் அமைப்பின் விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.

    16.00: லிவிவ் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள விமான பராமரிப்பு ஆலை மீது இன்று காலையில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை. லிவிவ் நகரம், போலந்து எல்லையிலிருந்து 70 கி.மீ தொலைவில் உள்ளது.

    லிவிவ் நகர் மீது கருங்கடல் பகுதியில் இருந்து ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. 6 ஏவுகணைகள் ஏவப்பட்ட நிலையில், அதில் 2 ஏவுகணைகளை அழித்துவிட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

    15:50: தென்கிழக்கு நகரமான மரியுபோல், ரஷிய படைகளின் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாக உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர்.

    15.45: உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அத்னாம், மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்கள் என மொத்தம் 43 இடங்களில் தாக்குதல் நடந்துள்ளன. அதில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர் 34 பேர் காயமடைந்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளா்ர.

    15.40: உக்ரைனுக்கு கூடுதல் ராணுவ உதவிகளை வழங்கிய அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார்.

    15.30: மரியுபோல் நகரில், மக்கள் அடைக்கலம் புகுந்திருந்த தியேட்டர் மீது ரஷ்யா தாக்குதல் நிலையில் அங்கு உயிருடன் உள்ளவர்களை மீட்பதற்கான பணி தீவிரமாக நடந்து வருகிறது.
    Next Story
    ×