என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
X
ஆப்கானிஸ்தானில் வெடிகுண்டு வெடித்து சிதறியதில் 7 பேர் உயிரிழப்பு
Byமாலை மலர்22 Jan 2022 8:20 PM GMT (Updated: 22 Jan 2022 8:20 PM GMT)
வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில், 9 பேர் காயம் அடைந்தனர். மூன்று பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹெராத்:
ஆப்கானிஸ்தானின் மேற்கு ஹெராத் மாகாணத்தில் மினிவேனில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்து சிதறியதில்பொதுமக்கள் 7 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 9 பேர் காயமடைந்ததாக தலிபான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த வெடிகுண்டு வேனின் எரிபொருள் தொட்டியில் பொருத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார். இந்த சம்பவத்தில் 9 பேர் படுகாயம் அடைந்த நிலையில், மூவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மாகாண மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக ஹெராத் ஆம்புலன்ஸ் தலைவர் இப்ராஹிம் முகமதி கூறினார்.
குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு உடனடியாக எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தான் அதிகாரத்தை தாலிபான்கள் அமைப்பு கைப்பற்றியதில் இருந்து நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.எஸ்.அமைப்பு பொறுப்பேற்றிருந்தது. ஹெராட்டில் நடந்த முதல் வெடிகுண்டு தாக்குதல் இது என்றும் விசாரணைகள் நடந்து வருவதாக வருவதாகவும் உள்ளூர் தலிபான் அதிகாரி நயீமுல்ஹக் ஹக்கானி தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X