search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    மெக்சிகோவை விடாத கொரோனா - பலி எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டியது

    மெக்சிகோ நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 44 லட்சத்தைக் கடந்துள்ளது.
    மெக்சிகோ சிட்டி:

    உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 33.5 கோடியைக் கடந்துள்ளது. 55 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 27 கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.

    கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் மெக்சிகோ தற்போது 14-வது இடத்தில் உள்ளது. 
     
    இந்நிலையில், மெக்சிகோவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 44.34 லட்சத்தைக் கடந்துள்ளது. அங்கு கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

    கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 35 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

    Next Story
    ×