என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
X
மெக்சிகோவில் காரில் 10 உடல்கள் கண்டெடுப்பு: 2 பேர் கைது
Byமாலை மலர்8 Jan 2022 2:07 AM GMT (Updated: 8 Jan 2022 2:08 AM GMT)
மெக்சிகோவில் காரில் 10 உடல்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, போலீசார் இது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தினர்.
மெக்சிகோசிட்டி :
வடஅமெரிக்க நாடான மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களின் ஆதிக்கம் மிகுதியாக உள்ளது. தொழில் போட்டியின் காரணமாக போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் இடையே ஏற்படும் மோதல்களில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் மெக்சிகோவின் மத்திய பகுதியில் உள்ள ஜகாடெகாஸ் மாகாணத்தில் கவர்னர் அலுவலகத்துக்கு அருகே சொகுசு கார் ஒன்று நீண்ட நேரமாக கேட்பாரற்று நின்று கொண்டிருந்தது. இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த அந்த காரை சோதனை செய்தனர்.
அப்போது காருக்குள் 10 பேர் பிணமாக கிடந்தனர். அவர்களின் உடலில் துப்பாக்கி குண்டு காயங்கள் இருந்தன. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, போலீசார் இது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தினர். இதில் காருக்குள் 10 பேர் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இந்த படுகொலையின் பின்னணி குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடஅமெரிக்க நாடான மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களின் ஆதிக்கம் மிகுதியாக உள்ளது. தொழில் போட்டியின் காரணமாக போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் இடையே ஏற்படும் மோதல்களில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் மெக்சிகோவின் மத்திய பகுதியில் உள்ள ஜகாடெகாஸ் மாகாணத்தில் கவர்னர் அலுவலகத்துக்கு அருகே சொகுசு கார் ஒன்று நீண்ட நேரமாக கேட்பாரற்று நின்று கொண்டிருந்தது. இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த அந்த காரை சோதனை செய்தனர்.
அப்போது காருக்குள் 10 பேர் பிணமாக கிடந்தனர். அவர்களின் உடலில் துப்பாக்கி குண்டு காயங்கள் இருந்தன. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, போலீசார் இது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தினர். இதில் காருக்குள் 10 பேர் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இந்த படுகொலையின் பின்னணி குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X