என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
X
ரபேலுக்கு போட்டியாக சீனாவிடம் இருந்து ஜே-10சி போர் விமானங்களை வாங்கிய பாகிஸ்தான்
Byமாலை மலர்30 Dec 2021 4:53 PM GMT (Updated: 30 Dec 2021 4:53 PM GMT)
அடுத்த ஆண்டு நடைபெறும் பாகிஸ்தான் தின விழாவில், அனைத்து வானிலையிலும் இயக்கப்படும் ஜே-10சி விமானங்களின் முழு படையும் பங்கேற்கும் என பாகிஸ்தான் உள்துறை மந்திரி தெரிவித்தார்.
இஸ்லாமாபாத்:
அதிநவீன போர் விமானமான ரபேல் போர் விமானங்களை இந்தியா வாங்கியதற்கு பதிலடியாக, சீனாவில் தயாரிக்கப்பட்ட ஜே-10சி போர் விமானங்களை பாகிஸ்தான் வாங்கியுள்ளது. இந்த விமானங்களை அனைத்து வானிலைகளிலும் தங்குதடையின்றி இயக்க முடியும். மொத்தம் 25 விமானங்களை வாங்கியிருப்பதாக பாகிஸ்தான் உள்துறை மந்திரி ஷேக் ரஷித் அகமது தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது சொந்த நகரமான ராவல்பிண்டியில் செய்தியாளர்களிடம் பேசியபோது, அடுத்த ஆண்டு மார்ச் 23ஆம் தேதி நடைபெறும் பாகிஸ்தான் தின விழாவில், அனைத்து வானிலையிலும் இயக்கப்படும் ஜே-10சி விமானங்களின் முழு படையும் பங்கேற்கும் என்றார்.
சீனா தனது மிகவும் நம்பகமான போர் விமானங்களில் ஒன்றான ஜே-10 சி விமானங்களை வழங்குவதன் மூலம் அதன் நெருங்கிய நட்பு நாடான பாகிஸ்தானின் பாதுகாப்புக்கு உதவி செய்வது வெளிப்படையாக தெரிகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X