என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
X
விமான விபத்தில் பிரபல இசை அமைப்பாளர் உள்பட 9 பேர் பலி
Byமாலை மலர்17 Dec 2021 4:03 AM GMT (Updated: 17 Dec 2021 4:03 AM GMT)
விமான விபத்தில் இசை அமைப்பாளர் புளோ லா மூவி தன் மனைவி, குழந்தைகளுடன் பலியாகி இருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சாண்டோ டொமிங்கோ:
கரீப்பியன் நாடான டொமினிகன் குடியரசில் தலைநகர் சாண்டோ டொமிங்கோவில் உள்ள லாஸ் அமெரிக்காஸ் விமான நிலையத்தில் நேற்று முன்தினம் தரை இறங்கும்போது ஒரு தனியார் விமானம் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 7 பயணிகளும், 2 சிப்பந்திகளும் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் பலியானவர்களில் பியூர்டோரிக்காவை சேர்ந்த பிரபல இசை அமைப்பாளர் புளோ லா மூவி என்று அழைக்கப்படுகிற ஜோஸ் ஏஞ்சல் ஹெர்னாண்டஸ் (வயது 38), அவரது மனைவி டெபி வோன் மேரி ஜிமெனேஸ் கார்சியா, அவர்களது குழந்தைகளும் அடங்குவார்கள்.
விபத்துக்குள்ளான விமானம், டொமினிக்கன் குடியரசு நாட்டின் லா இசபெல்லா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, புளோரிடாவுக்கு புறப்பட்டு சென்றபோது, அவசரமாக லாஸ் அமெரிக்காஸ் விமான நிலையத்தில் தரை இறங்கும்போதுதான் விபத்து நேரிட்டுள்ளது.
விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்தப்படுகிறது. இந்த விபத்தில் இசை அமைப்பாளர் புளோ லா மூவி தன் மனைவி, குழந்தைகளுடன் விமான விபத்தில் பலியாகி இருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கரீப்பியன் நாடான டொமினிகன் குடியரசில் தலைநகர் சாண்டோ டொமிங்கோவில் உள்ள லாஸ் அமெரிக்காஸ் விமான நிலையத்தில் நேற்று முன்தினம் தரை இறங்கும்போது ஒரு தனியார் விமானம் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 7 பயணிகளும், 2 சிப்பந்திகளும் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் பலியானவர்களில் பியூர்டோரிக்காவை சேர்ந்த பிரபல இசை அமைப்பாளர் புளோ லா மூவி என்று அழைக்கப்படுகிற ஜோஸ் ஏஞ்சல் ஹெர்னாண்டஸ் (வயது 38), அவரது மனைவி டெபி வோன் மேரி ஜிமெனேஸ் கார்சியா, அவர்களது குழந்தைகளும் அடங்குவார்கள்.
விபத்துக்குள்ளான விமானம், டொமினிக்கன் குடியரசு நாட்டின் லா இசபெல்லா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, புளோரிடாவுக்கு புறப்பட்டு சென்றபோது, அவசரமாக லாஸ் அமெரிக்காஸ் விமான நிலையத்தில் தரை இறங்கும்போதுதான் விபத்து நேரிட்டுள்ளது.
விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்தப்படுகிறது. இந்த விபத்தில் இசை அமைப்பாளர் புளோ லா மூவி தன் மனைவி, குழந்தைகளுடன் விமான விபத்தில் பலியாகி இருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X