என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
X
வங்காளதேசத்துடனான நட்புக்கு எப்போதும் முன்னுரிமை -இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை
Byமாலை மலர்16 Dec 2021 5:15 PM GMT (Updated: 16 Dec 2021 5:15 PM GMT)
ஷேக் முஜிபூர் ரகுமானின் தீர்க்கமான முடிவு தான் வங்காளதேச மக்களுக்கு வெற்றியை பெற்று தந்ததாக ராம்நாத் கோவிந்த் பேசினார்.
டாக்கா:
1971-ம் ஆண்டு இந்தியாவின் உதவியால், பாகிஸ்தானில் இருந்து பிரிந்து, வங்காளதேசம் தனி நாடாக உருவானது. இதையொட்டி கொண்டாடப்படும் 50-வது சுதந்திர தின விழாவில், இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்றுள்ளார். டாக்காவில் நடைபெற்ற முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட அவர் பாராளுமன்றத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பேசியதாவது:-
இந்தியாவும் வங்காளதேசமும் விடுதலை போரின்போதிலிருந்து தனித்துவமான நட்பை கொண்டுள்ளது. 50 வருடங்களுக்கு முன்பு தெற்காசியாவில் வங்காளதேசம் என்ற பெருமைமிக்க தேசம் பிறந்தது. அப்போது நடைபெற்ற சுதந்திர போராட்டத்தில் உயிர்நீத்த ஏராளமான வங்காளதேசத்து மக்களுக்கு நான் மரியாதை செலுத்துகிறேன். அவர்களுடைய தியாகமும், நோக்கமும் தான் இந்த தேசத்தை உருவாக்கி இருக்கிறது.
1971-ம் ஆண்டு நடைபெற்ற போரில் எங்கள் சகோதர, சகோதரிகளுக்கு உதவியதை நாங்கள் பெருமையாகவும், கடமையாகவும் கருதுகிறோம். நம்பிக்கை மற்றும் நட்பின் சக்தியை கொண்டு மலையையும் அசைத்துவிடலாம் என்பதற்கு இங்கு கூடியிருக்கும் பார்வையாளர்களும், வங்காளதேச குடியரசுத்தலைவரும் தான் வாழும் சாட்சி. கொடுங்கோல் ஆட்சிக்கு எதிரான வங்காளதேசத்து மக்களின் வீரத்தையும், வெற்றியையும் இந்தியர்கள் ஒவ்வொருவரும் இன்றும் மகிழ்வுடன் நினைவுகூர்கிறோம்.
அப்போதைய சர்வதேச நிலைமையும், அரசியலும் இத்தேசத்துக்கு எதிராக இருந்தன. இருப்பினும் கிழக்கு பாகிஸ்தான் மக்களுக்கு நீதியை பெற்றுத்தரவேண்டும் என்ற ஷேக் முஜிபூர் ரகுமானின் தீர்க்கமான முடிவு தான் இந்நாட்டு மக்களுக்கு வெற்றியை பெற்று தந்தது. மக்களின் மன உறுதியை எந்த சக்தியாலும் வெல்ல முடியாது என்ற பாடத்தையும் உலகுக்கு உணர்த்தியது.
வங்காளதேசத்தை நிறுவிய ஷேக் முஜ்பூர் ரகுமானுடைய கனவு, இந்நாட்டை அரசியல் ரீதியாக சுதந்திரம் அடைய செய்வது மட்டுமல்ல, நேர்மையான அனைத்தையும் உள்ளடக்கிய நாடாக வங்காளதேசம் திகழ வேண்டும் என்பதும் தான். துரதிர்ஷ்டவசமாக அவரது கனவு அவரது வாழ்நாளில் நிறைவேறாமல் போய்விட்டது. எதிரி சக்திகள் அவரை கொடூரமாக கொன்றனர். இருப்பினும் அவரது கனவு இன்றைய வங்காளதேச மக்களின் கடின உழைப்பாலும், ஒற்றுமையாலும் நிறைவேறிக் கொண்டிருக்கிறது. வங்காளதேச மக்களை முஜிபுர் ரகுமானின் மகள் ஷேக் ஹசினா சிறப்பாக வழிநடத்துகிறார்.
இவ்வாறு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X