search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    இஸ்ரேலில் 7 பேருக்கு ஒமைக்ரான் தொற்று

    ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் நபர் கண்டறியப்பட்டவுடன், முதலில் எல்லைகளை மூடிய நாடுகளில் இஸ்ரேல் நாடும் ஒன்று.
    ஜெருசலேம்:

    தென் ஆப்பிரிக்கா, மலாய் உள்பட பல நாடுகளில் இருந்து இஸ்ரேல் வந்தவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் புதிதாக 7 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் 27 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

    இதனையடுத்து இஸ்ரேல் நாட்டு அரசு நோய் பரவாமல் இருக்க அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் நபர் கண்டறியப்பட்டவுடன், முதலில் எல்லைகளை மூடிய நாடுகளில் இஸ்ரேல் நாடும் ஒன்று. இஸ்ரேல் நாட்டினர் தவிர மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் வர தடை விதிக்கப்பட்டது  குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×