என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாலியில் ராணுவத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல்- 7 வீரர்கள் பலி
Byமாலை மலர்31 Oct 2021 4:37 PM GMT (Updated: 31 Oct 2021 4:37 PM GMT)
மாலி நாடு 2012ல் இருந்து பாதுகாப்பு, அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது.
பமாகோ:
மாலியின் மேற்கு மற்றும் மத்திய பகுதியில் ராணுவத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். மேற்கு மாலியின் மோர்டியா கிராமத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 2 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். சீகோவில் ராணுவ ரோந்து வாகனத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தியதில் 5 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து சந்தேகத்தின்பேரில் 2 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாலி நாடு 2012ல் இருந்து பாதுகாப்பு, அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது. ஐ.நா., பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய வீரர்கள் மாலியில் முகாமிட்டிருந்தபோதிலும், கிளர்ச்சிகள், ஜிஹாதிகளின் தாக்குதல் மற்றும் இனங்களுக்கு இடையேயான வன்முறைகளால் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமானோர் இடம்பெயர்ந்துள்ளனர். மத்திய மாலியில் இனப்படுகொலைகள் மற்றும் அரசுப் படைகள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து நடக்கின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X