என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
2022 இறுதிக்குள் இந்தியாவில் 500 கோடி டோஸ் தடுப்பூசி தயாரிக்கப்படும் - பிரதமர் மோடி
Byமாலை மலர்30 Oct 2021 11:01 PM GMT (Updated: 30 Oct 2021 11:01 PM GMT)
ஜி20 மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி கொரோனாவுக்கு எதிரான உலகளாவிய போரில் இந்தியாவின் பங்களிப்புகளை எடுத்துரைத்தார்.
ரோம்:
இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளை உள்ளடக்கிய ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெறுகிறது.
இத்தாலி தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி உள்பட ஜி-20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். மாநாட்டின் இடையே உலக நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்தார். ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:
கொரோனாவை வைரஸ் பரவலின்போது 150 நாடுகளுக்கு மருந்துகள் உள்ளிட்டவை வினியோகிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து உள்நாட்டு தொழில்நுட்பத்தில் கோவாக்சின் தடுப்பூசியும் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 100 கோடிக்கும் மேற்பட்ட டோஸ் வழங்கப்பட்டுள்ளது. கோவாக்சின் தடுப்பூசிக்கு சர்வதேச அனுமதி கோரி உலக சுகாதார அமைப்பிடம் விண்ணப்பித்துள்ளோம். அதற்கு அனுமதி கிடைத்ததும் மற்ற நாடுகளுக்கும் விநியோகிக்க தயாராக உள்ளோம்.
அடுத்த ஆண்டு இறுதிக்குள் 500 கோடி டோஸ் தடுப்பூசி இந்தியாவில் தயாரித்து, அதை உலக நாடுகளுக்கு விநியோகிக்க தயாராக உள்ளோம் என தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்...இங்கிலாந்தை துரத்தும் கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 90 லட்சத்தைத் தாண்டியது
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X