என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜி20 மாநாடு- மோடி உள்ளிட்ட தலைவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட முன்களப் பணியாளர்கள்
Byமாலை மலர்30 Oct 2021 10:18 AM GMT (Updated: 30 Oct 2021 10:18 AM GMT)
இத்தாலி பிரதமர் மரியோ டிராகியை இந்திய பிரதமர் மோடி சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்தியா உள்ளிட்ட 20 வளரும் நாடுகள் அடங்கிய ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு இத்தாலி நாட்டில் ரோம் நகரில் இன்றும் நாளையும் நடக்கிறது. இந்த மாநாடடில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் மோடி, தனி விமானத்தில் இத்தாலி சென்றார். ரோம் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நேற்று இத்தாலி பிரதமர் மரியோ டிராகியை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இன்று வாடிகன் சிட்டியில் போப் பிரான்சிசை சந்தித்து பேசினார். அதன்பின்னர் அங்கிருந்து ஜி20 மாநாடு நடைபெறும் ரோமா மாநாட்டு மையத்தை சென்றடைந்தார் மோடி. அவரை இத்ததாலி பிரதமர் மரியோ டிராகி வரவேற்று மாநாட்டு மேடைக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு மோடி மற்றும் உலக தலைவர்கள் ஒன்றாக சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அவர்களுடன் முன்களப் பணியாளர்களும் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X