search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கைதான தமிழக மீனவர்கள் 2 பேரை விடுவித்தது இலங்கை கோர்ட்டு

    கப்பல் மோதி ஒருவர் பலியான சம்பவத்தையடுத்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் இன்னும் 2 நாளில் தமிழகம் திரும்புவார்கள் என்று இலங்கை அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

    கொழும்பு:

    புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினத்தைச் சேர்ந்த ராஜ்கிரண், சுகுந்தன், சேவியர் உள்ளிட்ட மீனவர்கள் கடந்த 18-ந்தேதி மீன் பிடிக்க சென்றனர்.

    அவர்கள் இந்திய எல்லை பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது அந்த வழியாக இலங்கை கடற்படை ரோந்து கப்பல் வேண்டுமென்றே அவர்கள் படகு மோதியது.

    இதில் மீனவர் ராஜ்கிரண் உயிரிழந்தார். மீனவர்கள் சுகுந்தன், சேவியர் இருவரையும் கடற்படையினர் இலங்கைக்கு கொண்டு சென்று ஜெயிலில் அடைத்தனர்.

    இது சம்பந்தமான வழக்கு ஊர்க்காவல் துறை கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது 2 மீனவர்களையும் விடுதலை செய்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.

    அவர்கள் இருவரும் இன்னும் 2 நாளில் தமிழகம் திரும்புவார்கள் என்று இலங்கை அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

    Next Story
    ×