என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கைதான தமிழக மீனவர்கள் 2 பேரை விடுவித்தது இலங்கை கோர்ட்டு
Byமாலை மலர்27 Oct 2021 2:27 PM GMT (Updated: 27 Oct 2021 2:27 PM GMT)
கப்பல் மோதி ஒருவர் பலியான சம்பவத்தையடுத்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் இன்னும் 2 நாளில் தமிழகம் திரும்புவார்கள் என்று இலங்கை அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
கொழும்பு:
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினத்தைச் சேர்ந்த ராஜ்கிரண், சுகுந்தன், சேவியர் உள்ளிட்ட மீனவர்கள் கடந்த 18-ந்தேதி மீன் பிடிக்க சென்றனர்.
அவர்கள் இந்திய எல்லை பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது அந்த வழியாக இலங்கை கடற்படை ரோந்து கப்பல் வேண்டுமென்றே அவர்கள் படகு மோதியது.
இதில் மீனவர் ராஜ்கிரண் உயிரிழந்தார். மீனவர்கள் சுகுந்தன், சேவியர் இருவரையும் கடற்படையினர் இலங்கைக்கு கொண்டு சென்று ஜெயிலில் அடைத்தனர்.
இது சம்பந்தமான வழக்கு ஊர்க்காவல் துறை கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது 2 மீனவர்களையும் விடுதலை செய்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.
அவர்கள் இருவரும் இன்னும் 2 நாளில் தமிழகம் திரும்புவார்கள் என்று இலங்கை அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X