என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்க பல்கலைக்கழகத்தில் மர்ம மனிதன் சுட்டதில் ஒருவர் பலி
Byமாலை மலர்24 Oct 2021 9:52 AM GMT (Updated: 24 Oct 2021 9:52 AM GMT)
அமெரிக்க பல்கலைக்கழகத்தில் மர்ம மனிதன் சுட்டதில் ஒருவர் பலியானார். இந்த சம்பவத்தை தொடர்ந்து போர்ட்வேலி பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளது.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் பல்கலைக்கழகம், பள்ளிகள், வணிக வளாகங்கள் போன்றவற்றில் அடிக்கடி துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடக்கின்றன.
இந்தநிலையில் ஜார்ஜியாவில் உள்ள போர்ட்வேலி பல்கலைக் கழகத்தில் நேற்று இரவு ஒரு துப்பாக்கிசூடு சம்பவம் நடைபெற்றது. பல்கலைக்கழகத்தை ஒட்டி உள்ள இடத்தில் மர்ம மனிதன் ஒருவன் துப்பாக்கி எடுத்து கண்ணில் கண்டவர்களை எல்லாம் சரமாரியாக சுட்டான்.
இதில் 8 பேர் படுகாயம் அடைந்தனர். அதில் ஒருவர் இறந்துவிட்டார். மற்றவர்கள் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
துப்பாக்கிசூடு நடத்தியவன் அங்கிருந்து தப்பித்து சென்று விட்டான். அவனை போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து போர்ட்வேலி பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X