search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துப்பாக்கி சூடு
    X
    துப்பாக்கி சூடு

    அமெரிக்க பல்கலைக்கழகத்தில் மர்ம மனிதன் சுட்டதில் ஒருவர் பலி

    அமெரிக்க பல்கலைக்கழகத்தில் மர்ம மனிதன் சுட்டதில் ஒருவர் பலியானார். இந்த சம்பவத்தை தொடர்ந்து போர்ட்வேலி பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் பல்கலைக்கழகம், பள்ளிகள், வணிக வளாகங்கள் போன்றவற்றில் அடிக்கடி துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடக்கின்றன.

    இந்தநிலையில் ஜார்ஜியாவில் உள்ள போர்ட்வேலி பல்கலைக் கழகத்தில் நேற்று இரவு ஒரு துப்பாக்கிசூடு சம்பவம் நடைபெற்றது. பல்கலைக்கழகத்தை ஒட்டி உள்ள இடத்தில் மர்ம மனிதன் ஒருவன் துப்பாக்கி எடுத்து கண்ணில் கண்டவர்களை எல்லாம் சரமாரியாக சுட்டான்.

    இதில் 8 பேர் படுகாயம் அடைந்தனர். அதில் ஒருவர் இறந்துவிட்டார். மற்றவர்கள் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    துப்பாக்கிசூடு நடத்தியவன் அங்கிருந்து தப்பித்து சென்று விட்டான். அவனை போலீசார் தேடி வருகிறார்கள்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து போர்ட்வேலி பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளது.

    Next Story
    ×