search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டேவிட் மார்சிக்
    X
    டேவிட் மார்சிக்

    தடுப்பூசியில் இந்தியா மாபெரும் சக்தி - அமெரிக்கா ஒப்புதல்

    2.3 பில்லியன் டாலருக்கும் அதிகமான எங்களது முதலீட்டில் இந்தியா மிக முக்கியமான, மிகப்பெரிய கூட்டாளி நாடு என டேவிட் மார்சிக் தெரிவித்துள்ளார்.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் சர்வதேச மேம்பாட்டு நிதி கழகம், அந்த நாட்டின் மேம்பாட்டு வங்கி ஆகும். இது உலகமெங்கும் பல்வேறு நாடுகளில் முதலீடுகளை செய்கிறது. இதன் தலைமைச்செயல் அதிகாரி டேவிட் மார்சிக், உயர்மட்ட தூதுக்குழுவுடன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தியா வருகிறார். 26-ந் தேதி வரை இங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

    கொரோனா தடுப்பூசி

    இவர் இந்தியா வரும் நிலையில், கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் இந்தியா பெரும் சக்தியாக திகழ்கிறது என்பதை ஒப்புக்கொண்டுள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, “இந்தியா தடுப்பூசியில் மாபெரும் சக்தி ஆகும். அந்த நாட்டுடன் அமெரிக்காவின் பணி, மக்களின் உயிர்களைக் காப்பாற்றுகிறது. 2.3 பில்லியன் டாலருக்கும் அதிகமான (சுமார் ரூ.17 ஆயிரத்து 250 கோடி) எங்களது முதலீட்டில் இந்தியா மிக முக்கியமான, மிகப்பெரிய கூட்டாளி நாடு ஆகும்” எனவும் குறிப்பிட்டார்.

    Next Story
    ×