search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போராட்டத்தில் வன்முறை
    X
    போராட்டத்தில் வன்முறை

    தடைசெய்யப்பட்ட அரசியல் அமைப்பு நடத்திய போராட்டத்தில் வன்முறை - பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு

    பாகிஸ்தானில் தெஹ்ரி-இ-லெப்பைக் பாகிஸ்தான் என்ற அரசியல் அமைப்பின் தலைவர் ஹதீம் ஹசன் ரிஸ்வி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
    லாகூர்:

    பாகிஸ்தானில் தெஹ்ரி-இ-லெப்பைக் பாகிஸ்தான் என்ற அரசியல் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் தலைவராக ஹதீம் ஹசன் ரிஸ்வி செயல்பட்டு வருகிறார். 

    இந்த அமைப்பு பாகிஸ்தானில் இஸ்லாம் மதத்தை அவமதிப்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகிறது.
     
    இந்த அமைப்பு சார்பில் நடைபெறும் போராட்டங்கள் பெரும்பாலானவை வன்முறையிலேயே முடிகிறது. இதற்கிடையில், கடந்த ஆண்டு பிரான்ஸ் அரசுக்கு எதிராக பாகிஸ்தானில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதனால் தெஹ்ரி-இ-லெப்பைக் அரசியல் அமைப்புக்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்தது. மேலும், அந்த அமைப்பின் தலைவர் ஹதீம் ஹசன் ரிஸ்வி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    இதற்கிடையே, ஹதீம் ஹசன் ரிஸ்வியை விடுதலை செய்யக்கோரி தெஹ்ரி-இ -லெப்பைக் அமைப்பினர் நேற்று முன்தினம் லாகூரில் இருந்து இஸ்லாமாபாத் நோக்கி பேரணியாக சென்று போராட்டம் நடத்தினர். அப்போது போலீசார் வைத்திருந்த சோதனைச் சாவடிகள் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். 

    இந்த தாக்குதலை தொடர்ந்து போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி மற்றும் கண்ணீர் புகைகுண்டுகளை வீசினர். அப்போது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் கொல்லப்பட்டனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.

    இந்நிலையில், போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.
    இதில் 3 போலீசாரும்,  தெஹ்ரி-இ -லெப்பைக் அமைப்பின் 7 தொண்டர்களும் அடங்குவர் என லாகூர் போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×