என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கனமழையில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஜப்பான் பிரதமர் இரங்கல்
Byமாலை மலர்22 Oct 2021 7:40 PM GMT (Updated: 22 Oct 2021 7:40 PM GMT)
கேரளாவில் பெய்த கனமழையில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 50-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
டோக்கியோ:
இந்தியாவின் கேரளா மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் கனமழை பெய்தது. இந்த கனமழையால் பல இடங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு என பல்வேறு இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டது.
கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி கேரளாவில் 42 பேர், உத்தரகாண்டில் 75 பேர் என 117 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சிலர் நிலச்சரிவில் சிக்கியதால் அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்தியாவின் கேரளா மற்றும் உத்தரகாண்டில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜப்பான் பிரதமர் கிஷிடா எழுதியுள்ள கடிதத்தில், கேரளா மற்றும் உத்தரகாண்டில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு எனது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளை விரைவாக புனரமைக்க வேண்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்...பாகிஸ்தானை தொடர்ந்து கிரே பட்டியலில் துருக்கியும் சேர்ப்பு
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X