என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மெக்சிகோ துப்பாக்கி சூட்டில் இந்தியர் உள்பட 2 பேர் பலி
Byமாலை மலர்22 Oct 2021 5:22 AM GMT (Updated: 22 Oct 2021 6:59 AM GMT)
மெக்சிகோவில் போதை மருந்து விற்கும் கும்பல்களிடையே நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் இந்தியர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.
மெக்சிகோ உலக போதை மருந்து வர்த்தகத்தின் தலைமையிடமாக செயல்பட்டு வருகிறது.
இங்கு ஏராளமான போதை மருந்து கடத்தல் கும்பல்கள் இருக்கின்றன. அவர்களுக்குள் வியாபார போட்டி காரணமாக அடிக்கடி மோதல் நடக்கும். அதில் துப்பாக்கி சண்டையும் இடம்பெறும். இதில் ஏராளமானோர் பலியாவது அடிக்கடி நடைபெறும் நிகழ்வாக இருக்கிறது.
இந்த நிலையில் நேற்று குயின்டனாரோ மாகாணத்தில் உள்ள துலும் நகரில் போதை மருந்து கும்பல்கள் மோதிக் கொண்டன.
துலும் நகரம் மெக்சிகோ நாட்டின் முக்கிய கடற்கரை சுற்றுலா நகரமாகும். இங்கு ஏராளமான தெருவோர ஓட்டல்கள் இருக்கின்றன. அங்கு ஒரு ஓட்டலில்தான் போதை மருந்து கும்பல்கள் மோதின.
அப்போது இரு தரப்பினரும் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுக்கொண்டனர். இதில் ஓட்டலில் இருந்த சுற்றுலா பயணிகள் சிக்கிக் கொண்டார்கள். அவர்கள் மீதும் குண்டுகள் பாய்ந்தன.
இதில் 2 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர். இறந்தவர்களில் ஒருவர் இந்தியாவை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. மற்றொருவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த பெண் ஆவார்.
இங்கு ஏராளமான போதை மருந்து கடத்தல் கும்பல்கள் இருக்கின்றன. அவர்களுக்குள் வியாபார போட்டி காரணமாக அடிக்கடி மோதல் நடக்கும். அதில் துப்பாக்கி சண்டையும் இடம்பெறும். இதில் ஏராளமானோர் பலியாவது அடிக்கடி நடைபெறும் நிகழ்வாக இருக்கிறது.
இந்த நிலையில் நேற்று குயின்டனாரோ மாகாணத்தில் உள்ள துலும் நகரில் போதை மருந்து கும்பல்கள் மோதிக் கொண்டன.
துலும் நகரம் மெக்சிகோ நாட்டின் முக்கிய கடற்கரை சுற்றுலா நகரமாகும். இங்கு ஏராளமான தெருவோர ஓட்டல்கள் இருக்கின்றன. அங்கு ஒரு ஓட்டலில்தான் போதை மருந்து கும்பல்கள் மோதின.
அப்போது இரு தரப்பினரும் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுக்கொண்டனர். இதில் ஓட்டலில் இருந்த சுற்றுலா பயணிகள் சிக்கிக் கொண்டார்கள். அவர்கள் மீதும் குண்டுகள் பாய்ந்தன.
இதில் 2 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர். இறந்தவர்களில் ஒருவர் இந்தியாவை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. மற்றொருவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த பெண் ஆவார்.
இறந்த இந்தியரின் பெயர் விவரங்கள் எதுவும் இதுவரை தெரியவில்லை. அவர் எதற்காக அங்கு சென்றார்? என்ற விவரமும் கிடைக்கவில்லை.
இதையும் படியுங்கள்... விஜயபாஸ்கர் தொடர்புடைய 4 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X