என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வங்காளதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம்
Byமாலை மலர்21 Oct 2021 2:07 AM GMT (Updated: 21 Oct 2021 2:07 AM GMT)
சமூக வலைதளத்தில் பரவிய வதந்தி காரணமாக கடந்த 13-ந்தேதி குமிலா என்ற இடத்தில் துர்கா பூஜை கொண்டாட்டத்தின்போது பயங்கர வன்முறை வெடித்தது.
டாக்கா :
வங்காளதேசத்தில் சிறுபான்மை இன மக்களாக இருக்கும் இந்துக்கள் மீது சமீப நாட்களாக தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சமூக வலைதளத்தில் பரவிய வதந்தி காரணமாக கடந்த 13-ந்தேதி குமிலா என்ற இடத்தில் துர்கா பூஜை கொண்டாட்டத்தின்போது பயங்கர வன்முறை வெடித்தது.
அதன் தொடர்ச்சியாக இந்துக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் உள்ள இந்துகோவில்கள் மற்றும் இந்துக்களின் வீடுகள் சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன.
வங்காளதேசத்தில் இந்துக்கள் மற்றும் இந்து கோவில்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு அமெரிக்க கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறுகையில் ‘‘வங்களாதேசத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்களின் போது இந்துக்கள் மற்றும் இந்து கோவில்கள் மீது நடத்தபட்ட தாக்குதல்களை நாங்கள் கண்டிக்கிறோம்.’’ என கூறினார்.
வங்காளதேசத்தில் சிறுபான்மை இன மக்களாக இருக்கும் இந்துக்கள் மீது சமீப நாட்களாக தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சமூக வலைதளத்தில் பரவிய வதந்தி காரணமாக கடந்த 13-ந்தேதி குமிலா என்ற இடத்தில் துர்கா பூஜை கொண்டாட்டத்தின்போது பயங்கர வன்முறை வெடித்தது.
அதன் தொடர்ச்சியாக இந்துக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் உள்ள இந்துகோவில்கள் மற்றும் இந்துக்களின் வீடுகள் சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன.
வங்காளதேசத்தில் இந்துக்கள் மற்றும் இந்து கோவில்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு அமெரிக்க கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறுகையில் ‘‘வங்களாதேசத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்களின் போது இந்துக்கள் மற்றும் இந்து கோவில்கள் மீது நடத்தபட்ட தாக்குதல்களை நாங்கள் கண்டிக்கிறோம்.’’ என கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X